செவிலியர் சம்பளம் ரூ.14 ஆயிரமாக உயர்வு... தமிழக அரசு !

0
அரசு மருத்துவமனை ஒப்பந்த செவிலியருக்கான சம்பளத்தை ரூ.7000-லிருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்தி 
செவிலியர் சம்பளம் ரூ.14 ஆயிரமாக உயர்வு... தமிழக அரசு !
15 நாட்களு க்குள் அரசாணை வெளியிடப்படும் என சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

சென்னை உயர் நீதி மன்றத்தில் வேளச் சேரியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் தாக்கல் செய்த மனுவில், 

அரசு மருத்துவ மனைகளில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர் களுக்கு மாத ஊதியமாக ரூ.7,000 வழங்கப் படுகிறது. நிரந்தர செவிலியர் களுக்கு மாத ஊதியமாக ரூ.35,000 வழங்கப் படுகிறது.

ஒப்பந்த செவிலியர் களுக்கு வழங்கப்படும் இந்த குறைந்த பட்ச ஊதியத்தை யும் குறிப்பிட்ட தேதியில் வழங்காமல், 

இரண்டு மாதங் களுக்கு ஒரு முறை வழங்கப் படுவதாக செவிலியர்கள் தரப்பில் தெரிவிக்கப் படுகிறது. இதனால் ஒப்பந்த செவிலியர்கள் முழுமனதுடன் தங்களது பணிகளில் ஈடுபட வில்லை. 
எனவே, ஒப்பந்த செவிலியர் களின் ஊதியத்தை குறிப்பிட்ட தேதியில் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் விசாரணை க்கு வந்தது.

இந்த மனு விசாரணையில் இன்று அரசு மருத்துவமனை ஒப்பந்த செவிலி யருக்கான சம்பளத்தை ரூ.7000- லிருந்து ரூ.14 ஆயிரமாக 

உயர்த்தி 15 நாட்களு க்குள் அரசாணை வெளி யிடப்படும் என உயர் நீதி மன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
மேலும் கோரிக்கை குறித்து 6 மாதத்தில் பரிசீலித்து முடிவெடுக்க சுகாதார செயலர் தலைமை யிலான குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)