பெங்களூரு வந்த காங். எம்எல்ஏக்கள் தனியார் ஓட்டலில் தங்க வைப்பு !

0
கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கக் கூடிய அளவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க வில்லை. 
பெங்களூரு வந்த காங். எம்எல்ஏக்கள் தனியார் ஓட்டலில் தங்க வைப்பு !
இந்த நிலையில் 104 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜனதாவை ஆட்சி அமைக்கு மாறு கூறி கவர்னர் அழைப்பு விடுத்தார். 

மேலும் சட்டசபையில் பெரும் பான்மையை நிரூபிக்க பா.ஜனதாவு க்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கினார். 

இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது. இதை யடுத்து பா.ஜனதா வினர், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ. க்களை தங்கள் பக்கம் இழுக்க முயன்றனர். 

இதற்காக குதிரை பேரத்தில் ஈடுபட்டனர். இதை யறிந்த காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் 
தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரத்தில் விலை போகாமல் இருப்பதற் காக அவர்களை பாதுகாக்க தொடங்கினர். 

அவர்களை ஒருங்கி ணைத்து ராமநகர் மாவட்டம் பிடதியில் உள்ள ஒரு ரெசார்ட்டில் தங்க வைத்தனர். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்களை அங்கிருந்து பஸ் மூலம் ஐதராபாத்து க்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஒரு சொகுசு ஓட்டலில் அவர்கள் அனைவரும் தங்க வைக்கப் பட்டு இருந்தனர்.

இதற்கிடை யில், இன்று காலை கர்நாடக சட்டப் பேரவை கூடுகிறது. மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதை யொட்டி, 
ஐதராபா த்தில் இருந்து, பேருந்து மூலமாக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏக்கள் இன்று காலை பெங்களூரு வந்தனர். 

பெங்களூரு வில் உள்ள தனியார் ஓட்டலில் எம்.எல்.ஏ க்கள் தங்க வைக்கப்பட் டுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings