கர்நாடகத் தேர்தல் பாஜக, வீழ்ந்தது எப்படி?

0
கர்நாடகத்தில் வாக்கு எண்ணிக்கை யின் போது வெற்றிச் செய்தியை உற்சாகத் தோடு எடியூரப்பாவிடம் கேட்ட அமித் ஷா, 

கர்நாடகத் தேர்தல் பாஜக, வீழ்ந்தது எப்படி?

அடுத்த 3 நாட்களில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காதீர்கள். நீங்களே ராஜினாமா செய்து விடுங்கள் என்று விரக்தியுடன் கூறி யுள்ளார்.


கர்நாடகத்தில் 222 தொகுதி களுக்கும் கடந்த 12-ம் தேதி தேர்தல் நடந்தது. 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. 

வாக்கு எண்ணிக்கை யின் தொடக்க த்தில் பாஜக தனிப் பெரும் பான்மையுடன் 120 இடங்கள் பெற்று ஆட்சி அமைக்கும் சூழல்தான் நிலவியது, 

ஆனால், நேரம் செல்ல நிலைமை மாறியது. வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜகவுக்கு 104 இடங்களும், 

காங்கிரஸ் கட்சிக்கு 78 இடங்களும், மதச்சார் பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கு 38 இடங்களும், 

இதர கட்சி களுக்கு 2 இடங்களும் கிடைத்தன. மாநிலத்தில் ஆட்சி அமைக்க 7 எம்எல்ஏக்கள் மட்டுமே பாஜகவுக்கு தேவைப் பட்டது. 

அதற்கான முற்சியில் பாஜக இறங்கு வதற்கு முன் சாதுர்யமாக காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற

ஜனதா தளத்தின் தலைவர் தேவகவுடா, குமாரசாமி யைச் சந்தித்து காய்களை நகர்த்தியது.

ஆனால், 104 இடங்கள் பெற்றும் தொடக்கத்தில் இருந்தே பாஜக செய்த தவறுகளால் தான் 

அந்தக் கட்சியால் 7 எம்எல்ஏ க்களை இழுக்க முடியாமல், ஆட்சி அமைக்க முடியாமல் போனது. 

முதலில் அவசரப்பட்டு ஆளுநரிடம் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கூறி கடிதம் அளித்தது. 


பாஜகவின் அந்த அவசரமான முடிவு, தேர்தலின் போது எதிர் துருவங் களாக இருந்த ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சிகளை இயல்பாகவே ஒன்று சேர்க்க வைத்தது.

பாஜக தலைமை யின் இந்த அவசர முடிவு எதிர்க்கட்சிகளிடையே எதிர்பாராத ஒற்றுமையை ஏற்படுத்தி, 

தங்கள் எம்எல்ஏ க்களை கோழிக் குஞ்சுகளை பாதுகாப்பது போல் பாதுகாக்க வைத்தது. 

இதனால், கடைசி வரை ஒரு எம்எல்ஏ வைக் கூட பாஜக வால் அசைத்துக் கூட பார்க்க முடிய வில்லை என்று கர்நாடக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

அதேசமயம், மாநிலத்தில் பாஜகவின் முக்கியத் தலைவர்களாக பிஎஸ் எடியூரப்பாவு க்கும், 

ஸ்ரீராமுலுவு க்கும் இடையே நீண்ட காலமாகவே உரசல் போக்கும், மோதலும் இருந்து வந்துள்ளது. 

இது கட்சிக்குள் இரு பிரிவுகளாக தொண்டர்களை செயல்படத் தூண்டி யுள்ளது.

இருவருக்கும் இடையிலான சிக்கலில் குகட்சியின் பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தலையிட்டு, 

தேர்தல் வாக்குப் பதிவுக்கு சில நாட்களுக்கு முன்புதான் கடைசி நேரத்தில் தான் சமாதானம் செய்து வைத்துள்ளார். 

இதனால், தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா வுக்கு ஆதரவாக 

ஸ்ரீராமுலுவின் ஆதரவாளர்கள் சரிவர தேர்தல் பணியாற்ற வில்லை.

அதுமட்டு மல்லாமல், பாஜக தலைமை க்கும், மாநில தலைமை க்கும் கர்நாடகத் தேர்தலில் 

அறுதிப் பெரும்பான்மை பெற்று விடுவோம் ஆட்சி அமைத்து விடுவோம் என்ற 

மிதமிஞ்சிய நம்பிக்கை பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கை களையும் குறிப்பாக 

“பி பிளான்கள்” எதையும் திட்ட மிடாமல் கண்களை மறைத்து விட்டது. 

இதனால், தவறுக்கு மேல், தவறு கடைசி நேரத்தில் செய்யும் சூழலில் ஏற்பட்டது.


அதுமட்டு மல்லாமல் காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏ க்களை இழுக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் 

பேரம் பேசிய ஆடியோ டேப்களை காங்கிரஸ் கடைசி நேரத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத் தினார்கள். 

இதனால், மக்கள் மத்தியில் பெரும் அவப்பெயர் பாஜகவி னருக்கு ஏற்பட்டது. 

இதனால் தான், நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமல் உணர்வுப் பூர்வமாக பேசி முடித்த வுடன் எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து இறங்கினார்.

இது குறித்து பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறுகை யில், ''பாஜக வை முதல்வராக்கிப் பார்க்க வேண்டும் என்றுதான் பாஜக தலைமை விரும்பியது. 

ஆனால், தேர்தலில் தனிப் பெரும் பான்மை இல்லாதா காரணத்தால், எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து இறங்கினார்.

காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளில் இருக்கும் லிங்காயத் எம்எல்ஏ க்கள் நிச்சயம் பாஜக பக்கம் வருவார்கள், 

ஒக்காலிக சமூகத்தைச் சேர்ந்த குமாரசாமி, முதல்வராக வர காங்கிரஸ் கட்சியில் இருக்கும் 

லிங்காயத் எம்எல்ஏ க்கள் விரும்ப மாட்டார்கள் என்பதால், 10 எம்எல்ஏ க்கள் நிச்சயம் 

எங்கள் பக்கம் வருவார்கள் என்று நினைத்தோம் ஆனால், வரவில்லை. 

எடியூரப்பா வின் செயல் பாடுகள் 2019-ம் ஆண்டு தேர்தலில் எங்களுக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடித்தரும்'' என்று தெரிவித்தார்.


வெள்ளிக் கிழமை மாலை வரை பாஜக தலைவர்கள் பெரும் பாலானோர் ஆட்சி அமைத்து விடுவோம் என்று 

அதீதமான நம்பிக்கை யுடனே கட்சித் தலைமை யுடன் தொடர்பில் இருந்துள்ளனர். 

எப்படி ஆட்சி அமைப்பீர்கள் என்று ஊடகங்கள் கேட்டபோது, நிச்சயம் நடக்கும் என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் புதிரான பதிலாக அளித்து விட்டு நகர்ந்தனர்.

ஆனால், பாஜகவினர் மத்தியியில் பாஜக தலைவர் அமித்ஷா வின் ஆப்ரேஷன் லோட்டஸ்”, 

அரசியல் சாணக்கியத் தனம், புத்தி கூர்மை எந்தநேரமும் அஸ்திரமாக அனுப்பப்படும் என்பதால் நம்பிக்கை யுடன் இருந்தனர்.

ஏனென்றால், பாஜக தலைவர் அமித் ஷா கர்நாடக மாநிலத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக பிரச்சாரம் செய்துள்ளார். 

நம்பிக்கை மிகுந்த தலைவர் களான ஜே.பி.நட்டா, தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரை 


அனுப்பி ஆட்சி அமைக்கத் தேவையான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளக் கூறியிருந் ததால், முடிவுகள் சரியாக எடுக்கப்பட லாம் என்று நம்பி இருந்தனர்.

ஆனால், நடந்ததோ தலைகீழ். அவ்வாறு நியமிக்கப் பட்டவர்கள் சுயமாக எந்த முடிவும் எடுக்க முடியாமல் போனதும், 

முடிவுகள் எடுக்க தாமதம் ஆனதும் ஆட்சி கை நழுவிப் போக முக்கியக் காரணமாகக் கருதப் படுகிறது.

பாஜக கட்சி வட்டாரங்கள் கூறுகையில், மாநிலத்துக்கு கட்சியின் முக்கியப் பொறுப் பாளர்கள் நியமிக்கப் பட்ட போதிலும், 

அவர்களால் எந்த முடிவையும் சுயமாக எடுக்க முடிய வில்லை. 

எதற்கெடுத்தா லும் கட்சியின் தலைமையை கேட்டுத்தான் எடுக்க வேண்டிய சூழலில் இருந்தனர். 

இதனால், எந்த அவசர முடிவையும் நடை முறைப்படுத்த முடிய வில்லை.

அதுமட்டு மல்லாமல், தொடக்கம் முதல் கடைசி வரை அதீதமான நம்பிக்கை அனைத்து விஷயங் களிலும் மெத்தனமாக இருக்க காரணமாகி விட்டது. 


வாக்கு எண்ணிக்கை யின் போது 12 மணிக்கு பாஜகவுக்கு பெரும் பான்மை கிடைத்த வுடனே அடுத்த கட்ட பணியைத் தொடங்கி இருக்க வேண்டும். 

ஆனால், 125 இடங்கள் வரை கிடைக்கும் என்று அதீதமான நம்பிக்கையில் கொண்டாட த்தில் மூழ்கி விட்டனர். 

இதனால், காங்கிரஸ் உஷாராகி ஜேடிஸ் கட்சியுடன் கூட்டணிக்கு தயாராகி விட்டது. இங்கு பாஜக தவறு செய்து விட்டது

எங்களின் தனிப் பெரும் பான்மை இல்லா விட்டாலும் கூட, 7 எம்எல்ஏ க்களை எப்படியும் கொண்டு வந்து விடலாம் 

என்ற நம்பிக்கையில் தான் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்கக் கோரினோம் ஆனால், கடைசிவரை முடிய வில்லை எனத் தெரவித்தனர்.

பாஜகவின் மூத்த தலைவரும் எம்.பி.யு மான பி.சி. காடிகவுடர் கூறுகை யில், ’ஜேடிஎஸ், காங்கிரஸ் சந்தர்ப்ப வாத கூட்டணி. 

இந்த கூட்டணியில் ஏராளமான முரண் பாடுகள் இருக்கின்றன. எங்களின் கணிப்பின் படி, 

விரைவில் இந்த கூட்டணி க்குள் குழப்பம் ஏற்பட்டு ஆட்சியில் பிளவு ஏற்படும்’’ எனத் தெரிவித்தார்.


காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி தேன் நிலவு காலத்தைக் கூட தாண்டுமா என்ற கேள்வியை பாஜக வைத்துள்ளனர். பொறுத்திருந்து பார்க்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings