திருமணமான 5 மாதத்தில் மனைவியை கொலை செய்தவர் | He had murdered his wife in 5 months of marriage !

இலங்கையில் திருமணமாகி ஐந்து மாதங்களில் மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் இளைஞன் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.


வேயங்கொடை, கட்டுவஸ்கொட பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான சுதார ரஞ்சித் என்பவரே கைது செய்யப் பட்டுள்ளார்.

பிரபல சித்திர கலைஞரான சுதார ரஞ்சித் கடந்த ஜனவரி மாதம் 27 வயதான சத்ராபேடி சுமுது ஜயரத்ன என்பவரை திருமணம் செய்தார்.


இந்நிலையில் நேற்று முன்தினம் மனைவியை கொடூர மாக தாக்கி கொலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித் துள்ளனர்.

திருமணம் நடந்த நாளில் இருந்து இந்து குறித்த இருவரு க்கும் இடையில் மோதல் நிலை காணப் பட்டதாக பொலிஸார் தெரிவி த்துள்ளனர்.

நேற்று முன் தினம் இவர்கள் இருவரு க்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது கோப மடைந்த 

கணவர் உடற் பயிற்சி செய்யும் உபகரண த்தில் தாக்குதல் மேற்கொண் டுள்ளார்.

படுகாய மடைந்த மனைவி உயிரிழ ந்துள்ள நிலையில், சந்தேக நபர் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து 

தற்கொலை செய்து கொள்ள முயற்சித் துள்ளார். எனினும் கிராம மக்கள் இணைந்து அவரை காப்பாற்றி யுள்ளனர்.

சித்திர வரையும் திறமையின் ஊடாக சமூக வலைத் தளங்களில் சுதார ரஞ்சித் அதிகம் பிரபல மடைந்த ஒருவராக திகழ்கின்றமை குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings