பேராசிரியர்களுக்காக ஏற்பாடு செய்தேன்.. நிர்மலா தேவி !

பேராசிரி யர்கள் கேட்ட தால் மாணவி களை பாலியல் தொழிலு க்கு அழைத்த தாக சர்ச்சைக் குள்ளான பேராசிரியை நிர்மலா தேவி தெரிவித் துள்ளார்.
பேராசிரியர்களுக்காக ஏற்பாடு செய்தேன்.. நிர்மலா தேவி !

மாணவி களை பாலியல் தொழிலுக்கு அழைத்த தாக கைதான அருப்புக் கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மதுரை சிறையில் அடைக்கப் பட்டார். 


அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முதல் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலை யில் விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலக த்தில், விசாரணை அதிகாரி யான சூப்பிரண்டு ராஜேஸ்வரி, 

உதவி அதிகாரி யான துணை சூப்பிரண்டு சாஜிதா பேகம் ஆகியோர், பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தினர். இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த விசாரணை நடந்தது.

ஆசை வார்த்தை

அப்போது பெரும் பாலான கேள்வி களுக்கு நிர்மலா தேவி மவுன மாகவே இருந்துள்ளார். 


மாணவி களிடம் யாருடைய தூண்டுதலின் பேரில் பேசினீர்கள் என கேட்ட போது, காமராஜர் பல்கலைக் கழக உதவி பேராசிரி யர்கள் கருப்பசாமி, 

முருகன் ஆகியோர் தான் ஆசை வார்த்தை கூறி தன்னை தூண்டிய தாக திடுக்கிடும் தகவலை தெரிவித் துள்ளார்.

விசாரணை க்கு பிறகே

அவரது வாக்கு மூலத்தை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். இதனிடையே பேராசிரியை நிர்மலா தேவியிடம் முழுமை யாக விசாரணை நடத்திய பிறகே, 

வழக்கின் முழு விவரம், அதில் தொடர்புடை யவர்கள் பற்றி தெரிய வரும் என சிபிசிஐடி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

யாருடன் தொடர்பு உள்ளது?

அவர் பல்கலைக் கழகம் வந்து சென்றபோது பதிவு ,செய்யப் பட்ட சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை சேகரித்து வருகிறோம் என்றும் அந்த அதிகாரி கூறினார். 


பேராசிரியை நிர்மலா தேவிக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளது? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்றும் சிபிசிஐடி அதிகாரி கூறினார்.

மதுரைக்கு அழைத்து செல்ல

பேராசிரியை நிர்மலா தேவியிடம் 2-வது நாளாக இன்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். 

அவர் கொடுக்கும் தகவலின் அடிப்படை யில் மதுரை அழைத்துச் செல்ல இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு முத்து சங்கரலிங்கம் தெரிவித் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings