நிர்மலா தேவி விவகாரம்... பேராசிரியர்களின் கோரிக்கைகள் !

நிர்மலா தேவி விவகார விசாரணையில், மதுரை காமராஜர் பல்கலைக் கலைக்கழக அதிகாரிகள், 
நிர்மலா தேவி விவகாரம்... பேராசிரியர்களின்  கோரிக்கைகள் !
கவர்னர் மாளிகையில் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் உயர் கல்வித் துறை அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பை விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நிர்மலா தேவி விவகாரம் குறித்து காவல் துறையின் சி.பி.சி.ஐ.டி பிரிவும், ஆளுநர் நியமித்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விசாரணைக் குழுவினர் நிர்மலா தேவியின் பின்னணி குறித்து மட்டும் ஆராயாமல், பல்வேறு வகையில் விசாரணை செய்ய வேண்டும் என்கின்றனர் மதுரை காமரார் பல்கலை பேராசிரியர்கள். 

தவிர, விசாரைண கமிஷன் கவனிக்க வேண்டிய விஷயங்களையும் பட்டிய லிட்டனர்.

1. குற்றவியல் விசாரணை க்கு இடையூறு இல்லாத வகையில் மற்றும் குற்றவியல் வழக்கைப் பாதிக்கக் கூடிய எந்தப் பரிந்துரை களையும் சந்தானம் கமிஷன் வழங்கக் கூடாது. 
நிர்மலா தேவிக்கு பதவி ஆசை காட்டியே தங்கள் தேவையை நிறை வேற்றப் பல்கலைக்கழக அதிகாரிகள் முயன்றதாகத் தெரிய வருவதால், பல்கலைக் கழகம் தரும் தன்னிலை விளக்கம் எதையும் சந்தானம் குழு ஏற்றுக் கொள்ளக் கூடாது.

2. கடந்த ஓராண்டில் நிர்மலா தேவி எத்தனை முறை பல்கலைக் கழக வேண்டுதலின் பேரில் பல்கலைக் கழக நிகழ்ச்சி மற்றும் அரசியல் நிகழ்ச்சிக்கு மாணவிகளை அழைத்து வந்தார் என்பதையும், 

மாணவிகள் யாருக்காக எந்தக் காரணத்துக்காக தேவைப்பட்டனர் என்பதையும் அவரிடம் விசாரிக்க வேண்டும்.

3. நிர்மலா தேவி பின்னணியில் தொடர்புடைய பல்கலைக் கழக அதிகாரிகளை குற்றவியல் வழக்கு முடியும் வரை இடைக்கால பணி நீக்கம் செய்யப் பரிந்துரை செய்ய வேண்டும்.

4. உயர் கல்விதுறை மற்றும் ஆளுநர் அலுவலகத்தில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் தொடர்புடைய எத்தனை ஊழல் புகார்கள் நிலுவையில் உள்ளது என்பதையும் விசாரணையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

5. தவறு செய்த அதிகாரி களுக்கும் கவர்னர் மாளிகை அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கும் இடையே உள்ள தொடர்பை விசாரிக்க வேண்டும்.
6. பல்கலைக் கழகங்களின் நடைமுறை விதிகளில் இது போன்ற சம்பவங் களை தடுக்கத் தேவையான விதிமுறை மாற்றம் மற்றும் விதி முறைகள் உருவாக்கம் குறித்து, குழு பரிந்துரை களை வழங்க வேண்டும்.

7. தன்னாட்சி பெற்ற கல்லூரி யாக இருந்தாலும் கூடுதல் மாணவர் சேர்க்கை, கூடுதல் பாடப் பிரிவுகளை தொடங்குதல், மாணவர்கள் சான்றிதழ் மற்றும் யூ.ஜி.சி நிதி உதவி களைப் பெறுதல் என, கல்லூரி அனைத்துச் செயல் பாடுகளுக்கும் 

பல்கலைக் கழக உயர் அதிகாரிகளை நம்பியிருப்ப தால், கல்லூரி யில் இது போன்ற குற்றங்களுக்கு கல்லூரி நிர்வாகம் உடன்பட வேண்டி யிருக்கிறது. இதனை வரை முறைப் படுத்த வேண்டும்.

8. பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகள் இடையே யான பணிவிதிகள் வெளிப் படையான முறையில் அமைய, விதி முறைகளை உருவாக்க வேண்டிய அவசிய த்தை விசாரணை ஆணையம் மேற்கொள்ள வேண்டும். 

பணி நியமனங் களில் வெளிப்படைத் தன்மை மற்றும் லஞ்சம் இல்லாத நிலையை உருவாக்கி இது போன்று நிகழ்வை நடை பெறுவதைத் தடுக்க ஆலோசனை வழங்க வேண்டும்.

9. நிர்மலா தேவி தனது ஆடியோ பேச்சில் தொலை நிலைக் கல்வி விடைத் தாள் திருத்தும் பணியையும், தொலை நிலைக் கல்வி பாடப் புத்தகங் களை தயாரிக்கும் பணி குறித்தும் பேசுகிறார். 
இது பணம் கொழிக்கும் பிரிவுகளாக இருக் கின்றன. இந்தப் பிரிவில் தனியார் கல்லூரியைச் சேர்ந்தவர் களுக்கு யாருக்கெல் லாம் தொடர் பிருக்கிறது 

என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். இதனையும் ஒரு வரை முறைக்குள் கொண்டு வர வேண்டும்.

10. தொலை நிலைக் கல்வியில் நியமிக்கப் படுபவர்கள் குறுக்கு வழிகளில் பதவி பெறுபவர் களாக இருக்கின்றனர். இந்த நியமனம் குறித்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். 

இந்தப் பிரிவுகளில் பணி நியமனத்து க்கும் விதி முறைகளைக் கடுமை யாக்க வேண்டும் என்கின்றனர்.

பேராசிரியை பாரதி ஹரிசங்கர் சென்னை பல்கலைக் கழக பேராசிரியர் பாரதி ஹரிசங்கர், `இது போன்ற தவறான விஷயங் களை உடனுக் குடன் பொது வெளிக்கு வர வேண்டும். 

பார்வைக்கு வராமல் இருப்பதால் தான் இது போன்ற சம்பவங்கள் தொடர் கின்றன. பதவி பெறவும், புகார் தெரிவித் தால் பழி வாங்கவும் வாய்ப்பு இருப்ப தால் எந்தப் புகாரும் முறை யாகப் பதிவாகாது. 
இதனால் பெரும் பாலான விஷயங்கள் வெளியே வராமல் போகின்றன. இது மாணவி களுக்கு மட்டுமல்ல, மாணவர் களுக்கும் நடக்கிறது. 

ஒரு ஆசிரியர் தன்னுடைய சொந்தப் பணிக்கு மாணவர்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது விதி. 

ஆனால், பர்சனலு க்கும் புரஃபஷனலுக்கும் உள்ள இடை வெளியை சரியாக கடைப் பிடிக்காததே இது போன்ற பிரச்னை களுக்குக் காரணம்.

எல்லாப் பல்கலைக் கழகத்திலும் இன்டெர்னல் கம்பிளையன்ஸ் கமிட்டியும் (Internal complaints committee) இருக்க வேண்டும். 

இந்தக் கமிட்டியில் மாணவிகளும், பெண் ஆசிரியைகளும் தங்களுக்கு இழைக்கப்படும் தவறுகள் குறித்து புகார் தெரிவிக்கலாம். 

ஆனால், புகார் தெரிவித்த பின்பு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கி றார்கள் என்பதற்கு எந்த விதமான கண் காணிப்பும் இல்லை. இதையும் முறைப் படுத்த வேண்டியது அவசியம் என்றார்.

ஆசிரியர்களாக பார்த்து திருந்தா விட்டால், கல்வி சமூகத்தை காப்பாற்ற யாராலும் முடியாது என்பதே நிதர்சனம்!
Tags: