இன்ஜினீயரிங் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்க... மே 3 முதல் !

மே 3-ம் தேதி முதல் பொறியியல் படிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இன்ஜினீயரிங் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்க... மே 3 முதல் !
பொறியியல் படிக்கவுள்ள மாணவர்களுக்கான கலந்தாய்வு குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், பொறியியல் கலந்தாய் வுக்கு மே 3 முதல் அண்ணா பல்கலைக் கழக ஆன்லைன் மூலம் விண்ணப் பிக்கலாம். 

வரும் 29-ம் தேதி இணைய தளம் மூலம் விண்ணப்பம் கோரு வதற்கான அறிவிப்பு வெளி யிடப்படும். மே 30-ம் தேதி விண்ணப் பங்களைப் பதிவு செய்யக் கடைசி நாள் ஆகும். 

இதை யடுத்து ஜூன் முதல் வாரத்தில் விண்ணப் பதாரர்களின் அசல் சான்றி தழ்கள் சரி பார்க்கும் பணி தொடங்கப்படும்.
விண்ணப்பங்களைப் பதிவு செய்ய தமிழகம் முழுவதும் 42 சிறப்பு மையங்கள் திறக்கப் பட்டுள்ளன. 

உதவி மையங் களில் கணினிகள், அச்சுப் பொறிகள், பயிற்சி பெற்ற நபர்கள், குடிநீர் மற்றும் சிற்றுண்டி உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. 

கடந்த வருடம் 1,52,704 பொறியியல் இடங்கள் நிரப்பப் பட்டன. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் 567 கல்லூரிகள் கலந்து கொள்ளும் என்றார்.
Tags:
Privacy and cookie settings