குளிர்பான நிறுவனமே குறிப்பிடும் எச்சரிக்கை... குடிக்கக் கூடாது !

0
கடந்த வாரம் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த ஒரு நிகழ்வு… கருமையான குளிர் பானத்துக் குள்ளிருக்கும் உட்பொருள் களைப் பற்றித் தெரிந்து கொள்வத ற்காக குளிர்பானம் ஒன்றை வாங்கினேன்.
குளிர்பான நிறுவனமே குறிப்பிடும் எச்சரிக்கை - குடிக்கக் கூடாது !
250 மி.லி கொள்ளளவு கொண்ட அதன் விலை இருபத்தைந்து ரூபாய். அதே கடையில் ஐந்து வயது மதிக்கத் தக்க சிறுவன், அதே குளிர் பானத்தின் பெயரை உரிமை யுடன் சொல்லி, தனது தந்தையிடம் கேட்டான். 

தந்தையும் எந்தவித மறுப்புமின்றி வாங்கிக் கொடுத்தார். சிறுவன், தான் விரும்பிய பொருள் கிடைத்த மகிழ்ச்சியுடன் சில்லென்ற குளிர் பானத்தைப் பருகினான். 

சிறுவன் நடந்து கொண்டே குளிர் பானத்தைப் பருகப் பருக, நான் அந்தப் பாட்டிலில் அச்சிடப் பட்டிருந்த வாசகங்களைப் படித்தேன்.
சிறியதாக அச்சிடப் பட்டிருக்கும் உட்பொருள்கள்...

`குளிர் பானத்தின் பெயர் (கூடுதல் சக்தியுடன் என்ற அடை மொழியுடன்)… அதிகளவு கஃபைன் (Caffeine) கொண்டது… குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் குடிக்கக் கூடாது… 

கஃபைன் அலர்ஜி உள்ளவர்கள் குடிக்கக் கூடாது… ஒரு நாளைக்கு 500 மிலி-க்கு அதி கமாகப் பருகக் கூடாது என்றெல்லாம் லென்ஸ் வைத்துப் பார்க்கும் அளவுக்கு, மிகச் சிறிய எழுத்துகள் பாட்டிலில் அச்சிடப் பட்டிருந்தன. 

ஒரு நுகர்வுப் பொருளில் இருக்கும் உட்பொருள் களைப் படித்துப் பார்த்து வாங்கும் விழிப்பு உணர்வு, மக்களிடம் இல்லை. அப்படி யிருக்கும் போது, இவ்வளவு எச்சரிக்கைக் குறிப்புகள் கொண்ட ஒரு குளிர் பானத்தை,

குளிர்பான நிறுவனமே குறிப்பிடும் எச்சரிக்கை
விதவித மான மனிதர்கள் வந்து போகும் ரயில் நிலையத்தில் விற்கும் நியாய மற்ற சமுதா யத்தில் தான் நாம் வாழ்கிறோம். 

அதே குளிர்பானம் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், மளிகைக் கடைகள்... என அனைத்து இடங்களிலும் சர்வ சாதாரண மாகக் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது தான் வேதனை!

கஃபைன் மட்டுமா?

கர்ப்பிணிகள்… பாலூட்டும் தாய்மார்கள்… குழந்தைகள் குடிக்கக் கூடாத அளவுக்கு அதிலுள்ள பொருள் கஃபைன் மட்டும் தானா... அல்லது வேறு ஏதாவது இருக்கிறதா? நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. 

செயற்கைக் குளிர்பான நிறுவனத் துக்கே வெளிச்சம். வயது வித்தியாச மின்றி, அந்த நிறுவனமே அறிவுறுத்தும் எச்சரிக்கையை மீறி, அவர்களின் குளிர்பானம் அனைவராலும் குடிக்கப் படுவது தான் நிதர்சனம். 

நான் பார்த்தது ஒரு சிறுவன். இன்னும் எத்தனையோ சிறுவர்க ளின் பிஞ்சு உறுப்புகள், அந்தக் குளிர் பானத்தை, அதிலுள்ள சாப்பிடக் கூடாத உட்பொருள் களை கிரகித்துக் கொண்டு தான் இருக்கின்றன.
பாதிக்கப்படுவது யார்?

விஷயம் என்ன தெரியுமா? குளிர் பானங்களை வியாபாரம் செய்யும் கடைக்காரர் களுக்குமே கூட அதிலிரு க்கும் பாதகங் களைப் பற்றித் தெரிந் திருக்க வாய்ப்பில்லை. காரணம், அவ்வளவு சிறிய எழுத்து களில் எச்சரிக்கை விடுத்திருக் கிறார்கள். 

விஷயம் தெரிந்தால், அறம் சார்ந்த விற் பன்னர்கள் உறுதியாக விற்பனை செய்ய மாட்டார்கள். குழந்தைகள் குடிப்பதற்கு உகந்ததல்ல என்று அச்சிடப் பட்டிருக்கும் குளிர் பானத்தின் தீவிரம் புரியாமல் பருகும் குழந்தை களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு, 

நுகர்வோர் நீதிமன்றத் துக்குச் சென்றாலும் வழக்கு நிற்காது. தாங்கள் சிறியதாக அச்சிட்ட எழுத்துகளை, 

பெரியதாக நீதி மன்றத்தில் ஒப்படைப்பார் அந்தப் பன்னாட்டுக் குளிர்பான நிறுவன த்துக்காக வாதாடும் வழக்கறிஞர். கடைசியில் பாதிக்கப் படுவது ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் தாம்.
(nextPage)
இளைஞர்களின் உற்சாக பானம்!

கஃபைன் கலந்த குளிர்பானம் குறித்த எனது அனுபவங் களை சென்னையி லிருக்கும் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் நண்பரிடம் பேசிக் கொண்டிரு ந்தேன். 

அப்போது அவர் அதிர்ச்சியான தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டார். குளிர் பானத்தில் நிறைய ’கஃபைன்’ இருப்பதாக விளம்பரப் படுத்தப்படுவதால், 
இளைஞர்களின் உற்சாக பானம்!
இரவுநேரப் பணியில் நீண்ட நேரம் கண் விழித்து வேலை செய்ய வேண்டிய இளைஞ ர்களின் உற்சாக பானமாக அது உருவெடுத் திருக்கிறதாம். `ஒரு நாளைக்கு 500 மி.லி-க்கு மேல் குடிக்கக் கூடாது’ என்று எச்சரிக்கப் பட்டிருக்கும் நிலையில், 
குடலை சுத்தம் செய்வது எப்படி?
குறைந்தது ஒரு லிட்டர் வரை ஒரே இரவில் பல இளைஞர்கள் பருகுகி றார்களாம். இப்படியே தினமும் தொடர்ந்தால், கஃபைனின் அளவு அதிகரித்து, மிகப் பெரிய பாதிப்பு களை உண்டாக்கும்.

கஃபைன் ஏற்படுத்தும் பாதிப்புகள்...

உறங்காமல் இருப்பதற் காக அளவுக்கு மீறி காபி குடிப்பதே பாதிப்பு களை ஏற்படுத்தும் என்ற நிலையில், தனியாக கஃபைன் சேர்க்கப் பட்ட பானத்தை அருந்தி னால், விரைவில் மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்படும். 

அந்தக் குளிர் பானத்தில் இருக்கும் கஃபைனின் அளவு, ஏறக்குறைய 40 மி.கி / 250 மி.லி. அதிக அளவிளான கஃபைன் (High caffeine) என்றும் அதில் அச்சிடப் பட்டிருக்கிறது. 

நான் குறிப் பிட்டிருப்பது அதிகளவில் கஃபைன் கலக்கப் பட்ட ஒரு பன்னாட்டுக் குளிர் பானத்தைப் பற்றி. அது மட்டு மில்லாமல், கஃபைன் கலக்கப் பட்ட எத்தனையோ பன்னாட்டு குளிர் பானங்கள் பொது மக்களைக் கவரும் வகையில் வெவ்வேறு ரூபங்களில் வலம் வருகின்றன.

கஃபைன் ஏற்படுத்தும் பாதிப்புகள்...
அளவுக்கு அதிகமாக கஃபைன் நமது ரத்தத்தில் கலக்கும் போது, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, மூச்சு விடுவதில் சிரமம், மயக்கம், தலை வலி, தூக்க மின்மை, மன அழுத்தம்... எனப் பல்வேறு பாதிப்பு களை உண்டாக்கும். 
கொள்ளையர்களுடன் போராடிய வயதான தம்பதி !
`கஃபைனால் தூண்டப் பட்ட மனப் பதற்றம்’ (Caffeine induced anxiety disorder) என்ற நோய்ப் பிரிவு, மனநோய்கள் சார்ந்த வகைப் பட்டியலில் இடம் பெற்றிருக் கிறது. 

அதிகளவு கஃபைன் கலந்த குளிர் பானத்தை ஒருவர் குடித்து, அதனால் பாதிப்புகள் ஏற்படு மானால் அதற்கென்ன மருத்துவம் தெரியுமா? விஷத்தை குடித்தவர் களுக்குக் கொடுக்கப்படும் மருத்துவம் தான் அவர்களு க்கும்! 

குளிர் பானங்களில் சேர்க்கப் படும் கஃபைனால் ஏற்படும் பாதிப்புகள் ஒருபுற மிருக்க, அளவுக்கு மீறிய  செயற்கைச் சர்க்கரை களால் உடல் பருமன், சர்க்கரை நோய் என பாதிப்புகள் மறுபுறம் உருவெடுக்கும். 

`புகைப் பிடித்தால் புற்று நோய் உண்டாகும்’ என்று சிகரெட் அட்டையில் எழுதப் பட்டிருப் பதைப் போல, `செயற்கை பானங்களை அருந்தினால் 

தொற்றா நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்’ என்று அவரவர் மனங்களில் எழுதி வைத்துக் கொண்டு அவற்றை தவிர்த்தால் ஆரோக்கி யத்துக்கு நல்லது.
(nextPage)
கோலா

ஒரு நாளைக்கு ஒருவர் ¼ லிட்டர் தண்ணீர் குடிக்கிறார் என்றால், அவரது இரைப்பை ¼ லிட்டர் அளவு விரி வடையும். அதுவே வாயு நிரப்பப்பட்ட ¼ லிட்டர் குளிர் பானத்தைப் பருகினால், இரைப்பை யானது ½ லிட்டர் வரை விரிவடையும். 

இதன் காரண மாக உணவுக் குழாயை நோக்கி, இரைப்பை யின் அமிலம் கலந்த கூழ்மங்கள் எதுக் களிக்கும். 

கோலா
தொடர்ந்து இப்படி நிகழும்போது, உணவுக் குழாயின் திசுக்கள் பாதிப்படைந்து, தாங்க முடியாத நெஞ்செரிச்சல், வலி ஏற்படும். 

இப்படி உணவுக் குழாயின் திசுக்கள் பாதிப்படை வதை ‘பாரட்ஸ் ஈஸோபேகஸ்’ (Barrett’s oesophagus) என மருத்துவ உலகம் அழைக்கிறது. அடுத்த கட்டமாக உணவுக் குழாயில் புற்று நோய் வருவதற் கான வாய்ப்பு களும் இருக்கின்றன. 
மாம்பழத்தால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது !
வாயு நிரப்பப் பட்ட குளிர் பானங்கள் அதிகமாக விற்பனை யாகும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உணவுக் குழாய் புற்று நோயாளர் களின் எண்ணிக்கை அதிகம்.

பதப்படுத்தப் பட்ட பழச்சாறுகள்...

வேனிற் காலத்தை மனதில் வைத்து, செயற்கைக் குளிர் பானங்கள் சார்ந்த விளம் பரங்கள் அதிகளவில் தொலைக் காட்சிகளில் ஒளிபரப் பாகத் தொடங்கி விட்டன... 

உங்கள் அபிமான நட்சத்தி ரங்களின் வாய் மொழியுடன்! செயற்கைக் குளிர் பானங்கள் மட்டு மல்லாமல், `பழச்சாறுகள் மட்டுமே’ என்று விளம்பரப் படுத்தப்படும் 

குளிர் பானங்களும் வேண்டாம். நேரடியாக மாம்பழத்தின் சுவையை அனுபவிப் பதற்கும், அட்டை யில் அடைக்கப் பட்ட மாம்பழச் சாற்றைச் சுவைப் பதற்கும் வித்தி யாசங்கள் நிறைய இருக்கின்றன. 

ஒரு முழு மாம்பழத்தின் மூலம் நமக்குக் கிடைக்கும் இயற்கைச் சர்க்கரை க்கும், 200 மி.லி பதப்படுத்த பட்ட பழச்சாறு கொடுக்கும் சர்க்கரையின் அளவிலும் தரத்திலும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன. 

2014-ம் ஆண்டு, செயற்கைக் குளிர் பானங்களில் குறிப்பிட்ட அளவு பழச்சாறு களைக் கலந்து சந்தையில் விடலாமா என்ற பேச்சு அடிபட்டது. 

அப்போது பல்வேறு உணவியல் ஆர்வலர்கள் அதற்கு எதிராகக் குரல் கொடுத் தார்கள். அதற்கு அவர்கள் முன் வைத்த காரணம்… 

`செயற்கைக் குளிர் பானங்கள் என்றாலும் சரி, பதப்படுத்தப் பட்ட பழச்சாறுகள் என்றாலும் சரி, இரண்டி லுமே சர்க்கரை யின் அளவு அதிகம்’ என்பது தான். 

அது தவிர்த்து அவை கெடாமல் இருப்பதற் காகச் சேர்க்கப் படும் பதப்படுத் திகள் சார்ந்தும் அவர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்தி ருந்தார்கள்.
(nextPage)
இயற்கை பானங்கள்

பன்னாட்டுக் குளிர்பானங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் சேர்க்கப் படுகின்றன… பயன்படுத்தாதீர்கள் என்ற செய்தி அவ்வப் போது வெளி வருவதுண்டு. 

கிட்டத் தட்ட பதினைந்து ஆண்டு களுக்கு முன்னர், ஆந்திராவில் இருக்கும் குண்டூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், 

தாங்கள் விளைவித்த நெற் பயிர்கள் பூச்சிகளால் பாதிப்படை யாமலிருக்க, ஒரு பன்னாட்டுக் குளிர் பானத்தை சமஅளவு பூச்சி மருந்துடன் கலந்து பயன் படுத்தியிருக் கிறார்கள். 
இயற்கை பானங்கள்
அது தொடர்பாக பல வழக்கு களும் ஆய்வு களும் நடை பெற்றது வேறு கதை. கஃபைன் சார்ந்தோ, சர்க்கரை சார்ந்தோ அல்லது அதில் சேர்க்கப்படும் வாயுக்கள் காரண மாகவோ பிரச்னைகள் ஏற்படலாம். 

விபரீதங் களைத் தவிர்க்க சிறந்த வழி, செயற்கைக் குளிர் பானங்களை வெறுத்து ஒதுக்குவது மட்டும் தான். 
ஆட்டுக் கறி மொய் விருந்து
பானங் களுக்கா நம்மிடம் பஞ்சம்? ஒவ்வோரு பருவ காலத்து க்கும் வகை வகையாக இயற்கை பானங் களைப் பயன் படுத்திய வர்கள் நாம். மீண்டும் அவற்றை மீட்டெடுப்பது, நம் கையில் தான் இருக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)