மதம் மாறினால் வீட்டுக்கு வா... கணவனை விரட்டிய மனைவி !

0
மதம் மாறச் சொல்லி என்னுடைய மனைவி மற்றும் அவருடைய உறவி னர்கள் அடித்துத் துன்புறுத்து கின்றனர் என 
மதம் மாறினால் வீட்டுக்கு வா... கணவனை விரட்டிய மனைவி !
கண்ணீரோடு இளைஞர் ஒருவர் ஈரோடு எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத் தியது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, கூடுதலைப் பட்டியைச் சேர்ந்தவர் பாஸ்கர். 

திருப்பூரி லுள்ள ஹோட்டல் ஒன்றில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வரும் இவர், நேற்று மாலை ஈரோடு எஸ்.பி அலுவலக த்துக்கு கண்ணீரோடு புகார் மனு ஒன்றை ஏந்தி வந்தார். 

அந்த மனுவில், ‘நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன். என்னுடைய மனைவி ஷகிலா பானு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். 

இஸ்லாமிய மதத்திற்கு மாறினால் தான் என்னை வீட்டுக்குள் அனுமதிப்பேன் என என்னுடைய மனைவி தொந்தரவு கொடுத்து வருகிறார்’ என குறிப்பிட்டி ருந்தார்.
இந்தப் பிரச்னை குறித்து பாஸ்கரிடம் கேட்ட போது, பள்ளிப் பாளையத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நான் வேலை செய்த போது, அங்கு வேலை பார்த்த ஷகிலா பானு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். 

என்னுடைய மனைவி இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவராக இருந்தா லும், எங்களுடைய திருமணம், ஈரோடு பவானி கூடுதுறை யில், 

இந்து முறைப் படிதான் நடந்தது. திருமண த்தின் போது என்னுடைய மனைவி யின் பெற்றோர்கள் மற்றும் உறவின ர்களும் உடனிருந் தனர். 

திருமண மாகி ஏழு ஆண்டுகள் ஆன நிலையில், என்னுடைய மனைவியும் அவர்க ளுடைய உறவினர் களும் என்னை இஸ்லாமிய மதத்திற்கு மாறச் சொல்லி அடித்துத் துன்புறுத்து கின்றனர். 
என்னுடைய மனைவி அவர்க ளுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டு, ‘மதம் மாறினால் தான் வீட்டுக்குள் நுழைய அனுமதிப்பேன்’ எனக் கூறுகிறார். 

எனக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கி றார்கள். அவர் களுக்கு இஸ்லாமியப் பெயர்களைத் தான் வைத்தி ருக்கிறேன். 

என்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் தான் உலகம் என்று இன்றைய நாள் வரை வாழ்ந்து வருகிறேன். கல்யாண த்துக்கு அப்புறம் நான் என்னோட அம்மா, அப்பாவைக் கூட பார்க்கப் போனதில்லை. 
இப்போ, என்னை வேணாம்னு சொன்னா, நான் எங்க போவேன். தற்கொலை பண்ணிக் கிறதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. திருமணமாகி ஏழு ஆண்டுகளாக எந்தப் பிரச்னையு மில்லை. 

கடந்த 2 மாதமாகத் தான் என்னுடைய மனைவியின் உறவினர்கள் என்னை மதம் மாறச்சொல்லி அடித்து மிரட்டுகின்றனர். நான், பொண்டாட்டி புள்ளைங் களோட வாழணும் என்று கண்ணீர் வடித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings