மூட்டுக்களில் அழற்சியை உண்டாக்கும் உணவுகள் !

1
மூட்டுகளின் குறிப்பிட்ட இடங்களில் தொடர்ந்து வலி இருக்கும். மூட்டுகளைச் சுற்றி ஏற்படும் அழற்சியினாலும், 
மூட்டுக்களில் அழற்சியை உண்டாக்கும் உணவுகள் !
தினமும் உண்டாகும் தேய்மானத்தால் மூட்டுகள் சிதைவ அடைவதாலும், விறைப்பாக இருக்கும் வலியுள்ள மூட்டுகளில் கடுமையாகத் தசைகள் உராய்வதாலும் இவ்வலி உண்டாகிறது.

அழற்சி ஏற்படும் போது உடலில் இருந்து வேதிப்பொருட்கள் இரத்தம் அல்லது பாதிக்கப்பட்ட திசுக்களுக்குள் வெளியேற்றப்படுகிறது. 

இதனால் அழற்சி அல்லது காயம்பட்ட பகுதிகளுக்கு இரத்தம் அதிகமாகப் பாய்ந்து சிவந்த நிறமும் சூடும் உண்டாகிறது. 

சில வேதிப்பொருட்கள் திசுக்களுக்குள் திரவங்களைக் கசிய வைப்பதால் வீக்கம் ஏற்படுகிறது. 
இந்நிகழ்வுகள் நரம்புகளைத் தூண்டி வலி உண்டாக்குகின்றன. மேலும் மூட்டுக்களில் அழற்சியை உண்டாக்கும் உணவுகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

தக்காளி

அன்றாட சமையலில் தவறாமல் சேர்க்கும் ஓர் உணவுப் பொருள் தான் தக்காளி. இந்த தக்காளியில் ஏராளமான நன்மைகள் அடங்கி யிருப்பது அனைவ ருக்குமே தெரிந்த விஷயம்.

ஆனால் இந்த தக்காளியை ஒருவர் அளவுக்கு அதிகமாக உணவில் சேர்த்து சாப்பிட்டால், அது மூட்டுக் களில் அழற்சியை உண்டாக்கும் என்பது தெரியுமா? 
சமீபத்திய ஆய்வு ஒன்றில் தக்காளியில் உள்ள குறிப்பிட்ட சில உட்பொருட்கள், மூட்டு அழற்சியை உண்டாக்குவ தாக கண்டறியப் பட்டுள்ளது. 

எனவே ஏற்கனவே மூட்டு அழற்சி உள்ளவர்கள், தக்காளியை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சோடா

சோடா மற்றும் எனர்ஜி பானங்களும் மூட்டுக்களில் அழற்சியை உண்டாக்கும். இதற்கு அதில் உள்ள செயற்கை இனிப்புக்கள் தான் காரணம். 
ஃபுருக்டோஸ் உள்ள பானங்கள், இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை அதிகரித்து, மூட்டுக்களில் அழற்சியை உண்டாக்கும். 

எனவே ஃபுருக்டோஸ் நிறைந்த குளிர் பானங்களை தினந்தோறும் குடிப்பதைத் தவிர்த் திடுங்கள். இல்லா விட்டால், மூட்டு அழற்சி பிரச்சனையால் அவஸ்தைப்படக் கூடும்.

சர்க்கரை

சர்க்கரை பல வடிவங்களில், பல உணவுப் பொருட்களில் உள்ளது. செயற்கை இனிப்புகள், மிட்டாய், பேக்கரி பொருட்கள் போன்றவை 

ஒருவரது உடல் எடையை அதிகரிப் பதோடு, முழங்காலில் வலி ஏற்படு வதைத் தடுத்து, முழங்காலில் அழுத்தம் கொடுப்பதை அதிகரிக்கும்.


ஆகவே முடிந்தளவு பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களில் சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்த் திடுங்கள். 

இல்லா விட்டால், மூட்டு வலியால் அதிக கஷ்டத்தை சந்திக்க வேண்டி யிருக்கும்.

சுத்திகரிக்கப்பட்ட மாவு

சுத்திகரிக் கப்பட்ட மாவு பொருட்களும் முழங்கால் இணைப்புக் களைப் பாதிக்கும். ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, 
உடலில் சைட்டோகீன் என்னும் கெமிக்கலின் உற்பத்தியை அதிகரித்து, மூட்டு இணைப்புக் களில் அழற்சியை உண்டாக்கும். 

ஆகவே வெள்ளை பிரட், பாஸ்தா மற்றும் இதர பதப்படுத்தப் பட்ட உணவு களைத் தவிர்த் திடுங்கள். இல்லை யெனில் மூட்டுகள் கடுமை யாக பாதிக்கப்படும்.

வறுத்த உணவுகள்

வறுத்த உணவுகளில் உள்ள ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் இருக்கும். இவை மூட்டுகளில் அழற்சியை உண்டாக்கும். 

அதிலும் ஒருவர் தினமும் எண்ணெயில் வறுத்த உணவுகளை உட்கொண்டு வந்தால், அது நாள்பட்ட மூட்டு அழற்சியை உண்டாக்கி, மூட்டு பிரச்சனையை தீவிரமாக்கி மோசமாக்கி விடும்.

பால் பொருட்கள்

பால் பொருட்களில் உள்ள புரோட்டீன்கள், மூட்டுக்களில் அழற்சியைத் தூண்டும். ஒருவருக்கு மூட்டுக்களில் அழற்சி ஏற்படு வதற்கு பால் பொருட் களும் முக்கிய காரணி யாகும்.


எனவே ஏற்கனவே மூட்டு பிரச்சனை இருப்பவர்கள், பால் பொருட்களைத் தவிர்க்குமாறு மருத் துவர்கள் பரிந்துப்பார்கள். மாறாக தாவர வகை புரோட்டீன் களை எடுக்க அறிவுறுத்து வார்கள்.

பதப்படுத்தப் பட்ட இறைச்சிகள்

பதப்படுத்தப் பட்ட இறைச்சிகள் மூட்டுக்களில் அழற்சியை உண்டாக்கும். இதில் உள்ள கொழுப்பு மற்றும் கலோரிகள் தான், மூட்டுக்களில் அழற்சியை உண்டாக்கு வதற்கான காரணம். 
எனவே உங்களுக்கு மூட்டு வலி அல்லது அழற்சி இருந்து, அசைவ உண வாளராக இருந்தால், இப்பிரச்சனை யைத் தவிர்க்க சைவ உணவாளராக மாறுவதே ஒரே வழி.

ஆல்கஹால்

ஆல்கஹால் பல நோய்களைத் தூண்டும். அதில் மூட்டு அழற்சியும் ஒன்று. அதிலும் ஒருவர் அடிக்கடி அல்லது பல வருடங் களாக ஆல்கஹால் அருந்தி வந்தால், 

அவர்களது உடல் ஆரோக்கியம் பாதிக்கப் படுவதோடு, முட்டுக் களில் ஏற்பட்ட அழற்சி தீவிரமாகி, நிலைமை மோசமாகும். எனவே இந்த கெட்ட பழக்கத்தை உடனே கைவிடுங்கள்.

சோள எண்ணெய்

சோளம் மற்றும் சோள பொருட்கள் அனைத்துமே மூட்டுக்களில் அழற்சியை உண்டாக்கும். அதிலும் சோள எண்ணெயில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. 

இந்த எண்ணெயை ஒருவர் அன்றாட உணவில் தவறாமல் எடுத்து வந்தால், அதன் விளைவாக மூட்டு அழற்சி யால் தான் அவஸ்தைப் படக்கூடும்.


ஆகவே உங்களுக்கு ஏற்கனவே மூட்டு பிரச்சனை இருப்பின், இந்த எண்ணெய் மற்றும் சோள பொருட்களைப் பயன் படுத்தாதீர்கள்.

எம்.எஸ்.ஜி

எம்.எஸ்.ஜி என்பது ஓர் உணவு சுவையூட்டி. இப்பொருள் உணவின் சுவையை மேம்படுத்து வதோடு, அதற்கு அடிமை யாக்கவும் செய்யும். 
இத்தகைய எம்.எஸ்.ஜி இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் களில் அதிகம் இருக்கும். மேலும் இந்த எம்.எஸ்.ஜி ஹோட்டல் களில் கொடுக்கப்படும் சூப் மற்றும் செரில்களில் சுவைக் காக சேர்க்கப்படும். 

இது மூட்டு அழற்சியைக் கொண்டவர் களுக்கு மிகவும் மோசமானது. இதனை ஒரு வேளை மூட்டு பிரச்சனை இருப்பவர்கள் எடுத்தால், நிலைமை மேலும் மோசமாகும்.

காபி

யாருக்கு தான் சூடாக ஒரு கப் காபி குடிக்கப் பிடிக்காது? ஆனால் ஓர் கெட்ட செய்தி என்ன வெனில், அளவுக்கு அதிகமாக காபி குடித்தால், 

அதுவும் ஒரு நாளைக்கு 3 கப்பிற்கும் அதிகமாக காபி குடித்தால், அது முழங் காலுக்கு நல்ல தல்ல. எனவே காபிக்கு பதிலாக, க்ரீன் டீ அல்லது ப்ளாக் டீயை தேர்ந் தெடுத்து குடியுங்கள்.


ஒருவர் தாங்கள் சாப்பிடும் உணவு என்ன என்பதை நன்கு தெரிந்து, தேர்ந்தெடுத்து உட்கொண்டால், அது மூட்டுக்களில் ஏற்படும் பிரச்சனையைத் தவிர்க்க உதவும். 

அதிலும் மேலே கொடுக்கப் பட்டுள்ள உணவுப் பொருட்களை ஒருவர் தவிர்த்தால், உடல் ஆரோக்கிய மாகவும், எலும்பு மூட்டுகள் பாது காப்பாகவும் இருக்கும்.
Tags:

Post a Comment

1Comments

Thanks for Your Comments

  1. இந்த உணவுகளை சாப்பிட்டால் சரியாகுமா?

    ReplyDelete
Post a Comment