ஸ்ரீதேவி மரணமும் ஜெயலலிதா எம்பாமிங்கும் | Sridevi's death and Jayalalithaa empamming !

0
நடிகை ஸ்ரீதேவி யின் திடீர் மரணம், திரையுலகத்தி னரை மட்டு மல்லாமல் அவரது ரசிகர் களையும் கண்ணீரில் ஆழ்த்தி யிருக்கிறது. 


அவருடைய மறைவு திரை யுலகுக்கு மிகப்பெரும் இழப்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அதே சமயம், அவருடைய மரணத்தில் எழும் சர்ச்சைகள் விவாதப் பொருளாகி யிருக்கின்றன.

துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற நடிகை ஸ்ரீதேவி, கடந்த 25-ம் தேதி அதிகாலை மாரடைப்பில் இறந்த தாகத் தகவல் வெளி யானது.

நடிகை ஸ்ரீதேவியின் பிரேதப் பரிசோதனை சான்றிதழ் மற்றும் தடயவியல் அறிக்கை நேற்று வெளியானது.

அதில், ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் உள்ள தண்ணீரில் மூழ்கிய தால் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்த தாகவும்

அவரது மரணத்தில் குற்றவியல் நடவடி க்கைகள் எதுவும் இல்லை' எனவும் தகவல்கள் வெளியாகின.

இன்று, அவரது உடல் எம்பாமிங் செய்யப்பட்டு, மும்பைக்குக் கொண்டு வரப்பட உள்ளது.

ஸ்ரீதேவி யின் மரணம் குறித்து நம்மிடம் பேசிய சூழலியலுக் கான மருத்துவர் சங்கத்தின் புகழேந்தி,

"ஸ்ரீதேவியின் மரணத்து க்கும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் மரணத்துக்கும்

பிறகு எழுந்த மர்மங் களிலும் கேள்வி களிலும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன.

ஆனால், இந்த இரு மரணங் களும் அரசு என்னும் அமைப்பால் எப்படிக் கையாளப் பட்டன என்பதில் பெரிய வேற்றுமைகள் இருக்கின்றன.

ஸ்ரீதேவி இறந்த பின்னர் அந்த இறப்பை துபாய் அரசு எப்படிக் கையாண்டது?;

விசாரணை நடைமுறைகள் எவ்வளவு கடுமை யாக இருந்தன என்பதில் தமிழக ஆட்சியா ளர்களுக்கான செய்தி ஒன்றும் இருக்கிறது.

ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அறிவிக்கப் பட்டது.

அவர் நன்றாக இருப்பதாகச் சொன்ன நேரம் திடீரென மாரடைப்பு வந்ததாகச் சொல்லப் பட்டது. அதன் பிறகு அவருடைய உடல் எம்பாமிங் செய்யப் பட்டது.

அதற்கு முன்னரே ஜெயலலிதா வின் உடல் நிலை குறித்து வெளியே சந்தேகங்கள் நிலவி வந்தன.

பொதுவாக, மற்ற நாடுகளில் மரணத்தில் சின்ன சந்தேகம் இருந்தால் கூட உடலை எம்பாமிங் செய்வ தில்லை.

ஏனென்றால், எம்பாமிங் மூலம் உடலில் செலுத்தப் படும் ரசாயன திரவம் இறப்புக் கான காரணம் குறித்து தெரியாமல் செய்து விடும்.

ஸ்ரீதேவி விஷயத்தில் எம்பாமிங் நடவடி க்கைகள் தாமதமான தற்கும் இது தான் காரணம்.

அடுத்ததாக, ஸ்ரீதேவி யின் கணவர் போனிகபூர் உள்பட அனை வரிடமும் மீண்டும் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அறை யிலிருந்த சி.சி.டி.வி காட்சிகள் ஆய்வு செய்யப் பட்டன. ஜெயலலிதா விஷயத்தில் சி.சி.டி.வி காட்சிகள் மாயமாகி விட்டன.

ஜெயலலிதாவு க்கு வீனஸ் ப்ளட் சாம்பிள் என்னும் ரத்த மாதிரி எடுக்கப் பட்டது.

அப்போது அவருடைய ரத்தத்தில் 6.2 என்ற அளவுக்கு பொட்டாசியம் இருந்தது கண்டு பிடிக்கப் பட்டது.

பொதுவாக ஒருவரின் ரத்தத்தில் 6 என்ற அளவில் பொட்டாசியம் கலந்தி ருந்தாலே ஆபத்து தான்.

ஜெயலலிதாவு க்கு இது முன்னரே இருந்ததா? அப்படி யிருந்தது எனில், அதை ஏன் கண்டு கொள்ளாமல் விட்டார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

மேலும், ஜெயலலிதாவு க்கு எதற்கு எம்பாமிங் செய்தார்கள் என்றே தெரிய வில்லை.

ஏனெனில், அவருடைய உடல் 19 மணி நேரம் தான் வெளியே இருந்தது. அதற்கு எம்பாமிங் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

இறப்புக்குப் பின் அவருக்கு ரத்த மாதிரியும் எடுக்கப்பட வில்லை.

சில விஷயங் களை மூடி மறைப் பதற்கான அத்தனை முயற்சி களும் மேற் கொள்ளப் பட்டுள்ளன.

அதனால் தான் மரணம் நிகழ்ந்து ஓராண்டு ஆகியும் மர்மங்கள் தொடர் கின்றன.

ஒரு மாநில முதல்வரின் உண்மையான உடல் நிலை குறித்து அம்மாநில மக்களுக்குத் தெரிவிக்கும் பொறுப்பு ஆளும் அரசுக்கு உள்ளது.

ஆனால், அது ஜெயலலிதா விஷயத்தில் பின்பற்றப் படவில்லை என்றே நினைக்கத் தோன்று கிறது.

ஸ்ரீதேவி மரணத்தில் துபாய் அரசு மேற்கொண்ட நடவடி க்கைகள் நமக்கெல்லாம் பாடங்கள்.

எதிர் காலத்தில் இங்கும் இது போன்ற நடைமுறை களைப் பின்பற்றுவது அவசியம்” என்கிறார் புகழேந்தி.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings