சசிகலாவின் உறவினர் எனக்கூறி இளம்பெண் மோசடி !

0
சசிகலா வின் உறவினர் எனக்கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சென்னையை சேர்ந்த இளம்பெண் தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டார். 
சசிகலாவின் உறவினர் எனக்கூறி இளம்பெண் மோசடி !
சென்னை போரூரைச் சேர்ந்தவர் இளம்பெண் பிரியதர்ஷினி. இவர் தன்னை சசிகலாவின் உறவினர் எனக்கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. 
மேலும் விலை உயர்ந்த கார் மற்றும் பைக்கு களையும் பிரியதர்ஷினி மோசடி செய்து வாங்கியதாக கூறப் படுகிறது. 

இந்நிலையில் மோசடி செய்த பிரியதர்ஷினி தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டுள்ள பிரியதர்ஷினியை சென்னை கொண்டு வந்து விசாரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings