இடைத்தேர்தலில் 77.68 சதவித வாக்கு... தேர்தல் ஆணையம் !

0
காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு இன்று இடைத் தேர்தல் நடை பெற்றது. 
இடைத்தேர்தலில் 77.68 சதவித வாக்கு... தேர்தல் ஆணையம் !
இந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன், 

பா.ஜனதா சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் சார்பில் கலைக் கோட்டுதயம் என 59 வேட்பா ளர்கள் போட்டியி டுகிறார்கள். 

தொகுதியில் உள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்கா ளர்கள் ஓட்டுப் போடுவதற் காக 51 மையங் களில் 258 வாக்குச் சாவடிகள் அமைக்கப் பட்டது. 

வாக்குப் பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறு விறுப்பாக நடை பெற்றது. மாலை 5 மணிக்குள் வந்தவர் களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் ஓட்டுப்போட அனுமதிக்கப் பட்டார்கள். 
இடைத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 74.5 சதவித வாக்குகள் பதிவாகி இருந்தது. ஆர்.கே.நகர் தொகுதியில் 174 வாக்குச் சாவடிகளில் முழுமை யாக வாக்குப் பதிவு நிறைவு பெற்றது. 

மீதமுள்ள வாக்குச் சாவடிகளில் டோக்கன் கொடுக்கப் பட்டு வாக்குப் பதிவு நடை பெற்றது. 84 வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க 5,000 பேர் வரையில் காத்திருக் கின்றனர் என தெரிவிக்கப் பட்டது.

இப்போது ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவுப் பெற்றது. 77.68 சதவித வாக்குகள் பதிவாகி உள்ளது என தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறிஉள்ளார். 
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு எந்திரங்களை சீலிடும் பணி நடைபெற்று வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings