பெண் வேடமணிந்த மணமகன்... விநோத திருமணம் !

0
ஆந்திர பிரதேசத்தின் மேற்கு கோதாவரியில் தடபள்ளிகுடெம் நகருக்கு உட்பட்ட ஜகன்னாதபுரம் என்ற கிராமத்தினை சேர்ந்தவர் ரவிதேஜா. இவர் வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 
பெண் வேடமணிந்த மணமகன்... விநோத திருமணம் !
இவருக்கு திருமணம் நடைபெற முடிவானது. திருமணத்திற்கு முந்தைய தினம் அவர் மணமகள் போல் வேட மணிந்து குதிரை வண்டியில் சவாரி செய்து கிராமத்தினை வலம் வந்துள்ளார். 

அந்த பகுதி கிராம மக்களும் இதற்கு வரவேற்பு தெரிவித்து ள்ளனர். இதன் பின்னணி பற்றி அறிந்து கொள்வோம். காக்கத்திய பேரரசை ஆட்சி செய்து வந்தவர் ராணி ருத்ரமா தேவி. 

அவரது பாதுகாப்பு படையின் தலைவராக இருந்தவர் கன்ன மனேயுடு. அந்த குடும்ப த்தின் மரபின்படி, ஆடவர் ஒருவருக்கு திருமணம் நடைபெற வேண்டு மென்றால், 

திருமணத்தி ற்கு முந்தைய தினம் அந்த மணமகன் நகை மற்றும் உடை ஆகிய வற்றை மணமகள் போன்று அணிந்து கொள்ள வேண்டும். இது மணமகளு க்கும் பொருந்தும்.

ரவிதேஜா கன்னமணி வம்சத்தினை சேர்ந்தவர். அவர், மணமகள் போன்று வண்ணநிற சேலை மற்றும் காதணிகள், நெக்லெஸ் உள்ளிட்ட தங்க நகை களை அணிந்து கொள்கி றார். 
இத ேபோன்று மற்றொருபுறம் மணமகள், மணமகன் போன்று வேட்டி மற்றும் சட்டை அணிந்து கொள்கிறார். 

இந்த நிகழ்ச்சியில் இருவரும் குதிரை வண்டியில் ஏறி சென்று குடும்ப வழக்கப்படி முத்தியாலம்மன் மற்றும் செல்லாளம்மன் கோவிலில் உள்ள தெய்வங்க ளை வணங்கி பூஜை செய்து ள்ளனர்.

அதன்பின்னர் கன்னமணி ரவிதேஜா கிராமத்தி னை சுற்றி குதிரை வண்டியில் வலம் வந்துள்ளார். இதனை அருகில் உள்ள கிராமத்தில் இருந்தும் வந்த மக்கள் கண்டு களித்தனர். 

இன்றை க்கும் மரபினை கடைப்பிடித்து வரும் அந்த குடும்பத்தி னருக்கு தங்களது பாராட்டு களை தெரிவித்தனர். குடும்ப நலனுக்காக அவர்கள் இதனை விரும்பி கடைப்பி டித்து வருகின்றனர். 
இது பற்றி அந்த சமூகத்தினர் கூறும்பொ  ழுது, ராணி ருத்ரமாதேவி எப்பொழுதும் ஆண் போல் வேடமணிந்து கொண்டு இருப்பார். அவர் கோவில்க ளுக்கு அந்த உடையிலேயே செல்வார். 

இந்த மரபினை எங்கள் சமூகமும் திருமணத்தின் பொழுது கடைப்பி டித்து வருகிறார்கள் என கூறியுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings