நாம் ஏதற்காக வரி கட்டுகிறோம்? தெரியுமா?

வரி (tax) என்பது, அரசோ அது போன்ற அமைப்புக்களோ, தனி நபர் அல்லது நிறுவணங்க ளிடமிருந்து பெறும் நிதி அறவீடு ஆகும்.

நாம் ஏதற்காக வரி கட்டுகிறோம்?
வரி அறவிடும் வேறு அமைப்புக்களாகப் பழங்குடி இனக்குழுக்கள், விடுதலைப் போராட்டக் குழுக்கள், புரட்சிக் குழுக்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். 

இத்தகைய அமைப்புக்கள் அறவிடும் வரிகள் பெரும்பாலும் சட்டபூர்வ மானவையாகக் கருதப்படு வதில்லை. 
இதனால் அரசாங்கங்கள் இவ்வாறு அறவிடப்படும் வரியைக் கப்பம் எனக் குறிப்பிடுவது உண்டு. 

மத்திய அரசு தவிர, உள்ளூராட்சி அமைப்புக்கள், மாநில அரசுகள் போன்ற பல துணை அரச அமைப்பு க்களும் வரி அறவிடுவதுண்டு.

வரிகள் நேரடி வரி, அல்லது மறைமுக வரியாக இருக்கலாம். பொதுவாக நாடுகளின் அரசுகள், அவற்றின் நிதி அமைச்சக ங்களின் கீழ் அமையும் அமைப்புக்கள் மூலமாக வரிகளை அறவிடுகின்றன.
வரிகள் செலுத்தப்படா விட்டால் அபராதம், சிறை போன்ற தண்டனைகளும் வழங்கப்பட விதி முறைகள் உள்ளன.
பிரியாணி இலையின் நன்மை தெரியுமா? உங்களுக்கு !
சுங்கவரி, காணிக்கை, குத்தகைக்கா ரர் நிலக்கி ழாருக்கு செலுத்தும் வரி, கடமை வரி, விருப்ப வரி, கலால், மானியம், அரசு உதவி வரி, மதிப்புக் கூட்டு வரி என்னும் பல்வேறு பெயர்களால் வரி வசூலிக்கப்ப டுகின்றது.

வரி அறவி டுவதன் நோக்கங்கள்:

சட்டம், ஒழுங்கைப் பராமரித்தல்,

சொத்துக்க ளைப் பாதுகாத்தல்,

பொருளா தாரக் கட்டமை ப்புக்களை உருவாக்கிப் பேணுதல்,

பொது வேலைகள் (public works),

சமூகப் பொறியியல் (social engineering),

அரச செயற்பாடுகள்.

பல நவீன அரசுகள், கீழே பட்டியலிடப்ப ட்டுள்ளவை போன்ற, நலத் திட்டங்க ளுக்கும், பொதுச் சேவைகளு க்காகவு ம்கூட வரிகள் மூலம் திரட்ட ப்படும் நிதியைப் பயன்படுத்து கின்றன:
கல்வி முறைமைகள்,

உடல்நலம் பேணல் முறைமைகள்,

வயோதிபர்க ளுக்கான ஓய்வூதியம், வேலையற்றோர் கொடுப்பனவுகள்,

சக்தி, நீர் வழங்கல், மற்றும் கழிவு மேலாண்மைத் திட்டங்கள்,

பொதுப் போக்கு வரத்து.

அரசுகள் பல வகையான வரிகளை அறிமுகப்ப டுத்துவதோடு, குறிப்பிட்ட வரியொன்றி லேயே பல்வேறு வீதங்களில் வரி அறவிடுகின்றன.
வெள்ளரிக்காய் தக்காளி சாலட் செய்வது !
பின்வருவன இதற்கான காரணங்களாக அமையக்கூடும். வரிச் சுமையைத் தனியார் மற்றும், வரி செலுத்தும் வணிகத் துறையினர் போன்ற வகுப்பா ரிடையே பரவலா க்குதல்.

தனியார் மற்றும் சமூதாயத்தின் பல்வேறு வகுப்பாரிடையே வளங்களை மறுபகிர்வு செய்தல். முற்காலத்தில், பிரபுத்துவ சமுதாயத்தினரின் நலனுக்காக ஏழை மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப் பட்டது.

தற்காலத்தில், வசதி படைத்தோரிடமிருந்து அறவிடப்படும் வரிப் பணத்திலிருந்து, வசதியற்றோர், வயதானோர் போன்றவர்களின் நலன்கள் பாதுகாக்கப் படுவதற்கான திட்ட ங்கள் வகுக்கப்படுகின்றன.
வெளிநாட்டு நிதியுதவி, இராணுவ உதவி போன்றவற்றுக்கு நிதிய ளித்தல், பொருளாதாரத்தின் பருவினப் பொருளியல் செயற்பாட்டு விளைவுகள் மீது செல்வாக்குச் செலுத்துதல்
தேங்காய் பால் சிக்கன் பிரியாணி செய்வது !
(இதற்கான அரசின் வழி முறைகள் அதன் நிதிக்கொள்கை எனப்படு கின்றது), குறிப்பிட்ட சில வகைப் பரிமாற்றங்களை மற்றவற்றிலும் கவர்ச்சியானவை ஆக்குவதன் மூலம்,

பொருளாதாரத்தில் நிலவும் நுகர்வு மற்றும் வேலை வாய்ப்புப் போக்குகளை மாற்றியமைத்தல்.
Tags: