சவுதி இளவரசருக்கான சவால்களும் நெருக்கடிகளும் !

0
சவுதி அரேபியாவில் இன்றைக்கு ஏற்பட்டி ருக்கும் கொந்தளிப்பான சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அந்நாட்டின் மிக முக்கிய மான அரசியல் உண்மை யிலிருந்தே அதைத் தொடங்க வேண்டும். 
சவுதி இளவரசருக்கான சவால்களும் நெருக்கடிகளும் !
அங்கு கடந்த 40 ஆண்டு களில் அரசியல் சக்தியை வடி வமைத்தது, இஸ்லாமிஸமோ அடிப்படை வாதமோ தாராள வாதமோ முதலாளித் துவமோ ஐஎஸ் இஸமோ அல்ல.

சவுதி அரேபியா வின் தற்போதைய மன்னரு க்கு 81 வயது. 90 வயதில் இறந்த மன்னருக்கு அடுத்து மன்னர் ஆனவர் இவர். 

அந்த மன்னரு க்கு முன்னாள் இருந்த மன்னரும் 84-வது வயதில் மரண மடைந்தவர் தான். 

அதற்காக, அவர்களில் யாரும் சீர்திருத்தங் களை அறிமுகப் படுத்த வில்லை என்பதல்ல. 

உலகமே தொழில் நுட்பம், கல்வி, உலகமய மாக்கல் ஆகிய வற்றில் அதிவேக மாற்றங் களை அனுப வித்துக் கொண்டு இருந்த போது, 

சவுதியின் அடுத்தடுத்த மன்னர்கள் மணிக்கு 10 மைல் வேகத்தில் நாட்டை முன்னே ற்றுவது போதும் என்று நினைத்தனர் என்பது தான் விஷயம். 

மிக மெதுவான அந்த முன்னேற்ற மானது, அதிக எண்ணெய் விலையை வைத்துச் சரி கட்டப் பட்டது.

முற்றும் நெருக்கடி
இரண்டு லட்சத்து க்கும் மேற்பட்டோர் வெளி நாடுகளில் படித்து வருகிறார் கள். ஒவ்வொரு வருடமும் பெண்கள் உட்பட சுமார் 35,000 பேர் பட்டப் படிப்புடன், 

அர்த்த முள்ள வேலையை எதிர்பார்த்து நாடு திரும்பு கிறார்கள். எண்ணெய் துறைக்கும் வெளியே மேலும் அதிக வேலை களை உருவாக்க வேண்டிய கட்டாயம் உருவாகி யிருக்கிறது. 

சவுதி அரேபியா வின் வருவாயும் முன்பைப் போல் இல்லை. அந்நாட்டு அரசும் சேமிப்பில் இருக்கும் தொகையை வைத்துச் சமாளித்து ஸ்திரத் தன்மையைப் பெற்று விட முடியாது.

அதுதான், மன்னர் சல்மானின் மகனும் 32 வயதே ஆன பட்டத்து இளவரசரு மான முகமது பின் சல்மா னின் சமீபத்திய துணிச் சலான, 

அதே சமயம் அவசரகதி யிலான நடவடிக் கைகளின் பின்னணி. எம்.பி.எஸ். என்று அழைக்கப் படும் 

அவரை இரண்டு முறை நான் பேட்டி கண்டிருக் கிறேன். எப்போதும் பரபரப்பாக இயங்கும் இளைஞர் அவர்.

நம்பக மானவரா இளவரசர்?
உண்மை யில், அவரைப் பற்றி இரண்டு விஷயங் களை என்னால் உறுதி யாகச் சொல்ல முடியும்: 

வஹாபிய ஆதரவாளர் என்பதை விட, மெக்கென்ஸி (அமெரிக்க மேலாண்மை ஆலோசனை நிறுவனம்) பாணி ஆசாமி. குரான் ஆர்வலர் என்பதை விட அதிநவீன தொழில் நுட்பங்களில் ஆர்வ முடையவர்.

ஆனால், எனக்கு உறுதி யாகத் தெரியாத விஷயம் இது தான்: 

அதிவேகச் சீர்திருத் தத்துக் கான அவரது உத்வேகம் மறைந்து, எல்லா அதிகாரங் களையும் தனதாக்கிக் கொள்வதற் கான சர்வாதிகார முனைப்பு எங்கிருந்து வந்தது? 

சவுதி இளவரசர் கள் சிலரையும், சில ஊடகங் களின் உரிமை யாளர்களை யும், கோடீஸ் வர தொழிலதிபர் களையும் ஊழல் குற்றச் சாட்டுகளின் பேரில் எம்.பி.எஸ். கைது செய்ததை அடுத்து, 

“கடும் நடவடிக்கை களுக்கு ஆளாகி யிருப்பவர் களில் சிலர், பல ஆண்டு களாக அந்நாட்டைச் சுரண்டி வருபவர்கள்” என்று ட்விட்டரில் எழுதினார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அதைப் படித்த போது எனக்குச் சிரிப்பு தான் வந்தது. 
ஊழல் குற்றச் சாட்டின் பேரில் சவுதி இளவரசர்கள் கைது செய்யப் பட்டனர் எனும் செய்தியைக் கேள்விப் படுவது என்பது, 

பொய் சொன்ன தற்காகத் தனது ஏழு அமைச்சர் களை ட்ரம்ப் பதவிநீக்கம் செய்தார் எனும் செய்தியைப் படிப்பது போன்றது. 

ட்ரம்ப் ஒரு விஷயத் தைத் தவற விட்டு விட்டார். கடந்த ஆண்டு விடுமுறை யைக் கழிக்க பிரான்ஸு க்குச் சென்றி ருந்த எம்.பி.எஸ்., 

அங்கு துறை முகத்தில் ஒரு சொகுசுக் கப்பலைப் பார்த்து பரவசமாகி, அதன் ரஷ்ய உரிமை யாளரி டமிருந்து ரூ.35,000 கோடிக்கு அவசர அவசர மாக வாங்கினார். 

அந்தப் பணம் என்ன அவரது சேமிப்பு உண்டியலி லிருந்து வந்ததா? அரசின் நிதியி லிருந்து வந்ததா?

துரிதமாக முடிவெடுக்க வேண்டும் என்பதற் காக, ஏழு பெரிய குடும்பங் களிடையே அதிகாரம் பகிர்ந்து கொள்ளப்படு கின்ற, 

ஒருமித்த கருத்துகள் மூலம் முடி வெடுக்கப் படுகின்ற நாடு எனும் நிலையி லிருந்து ஒற்றைக் குடும்பத் தால் ஆளப்படும் 

ஒரு நாடாக சவுதி அரேபியா வையே மாற்றி வருகிறார். இனி அந்நாடு ‘சவுதி அரேபியா’வாக இருக்காது. 

‘சல்மான் அரேபியா’ வாக மாறி வருகிறது. எம்.பி.எஸ். சமீபத்தில் மேற் கொண்ட கைது நடவடிக் கைகள் மூலம், 

முக்கிய மான அரச குடும்பங் களைச் சேர்ந்த இளவரசர் களை, அதாவது அரச குடும்பங் களில் அவரது இயல்பான எதிரி களை முடக்கி யிருக்கிறார். 

அத்துடன், எம்.பி.சி., ஏ.ஆர்.டி., ரோடானா என்று கொஞ்சம் சுதந்திர மாகச் செயல்படும் தனியார் தொலைக் காட்சி நிறுவனங் களின் உரிமை யாளர்களை யும் கைது செய்திருக் கிறார்.

மாற்றத்தின் தொடக்கம்
அதே சமயம், ஆட்சியின் சட்ட பூர்வத் தன்மை யின் அடிப்ப டையையே மாற்று கிறார்; ‘1979 யுக’த்தை முடிவுக் குக் கொண்டு வருகிறார். 

1979-ல், தீவிரமான அடிப்படை வாத மதபோதகர் ஒருவர், அல்-சவுதி குடும்பம் இஸ்லாம் மதத்தில் அத்தனை ஈடுபாடு கொண்ட தல்ல என்று 

சொல்லி இஸ்லாமின் புனிதத் தலமான மெக்காவைக் கைப்பற்றி யதைத் தொடர்ந்து, மதரீதியான தனது ஈடுபாட்டைக் காட்டிக் கொள்ள, 

தூய்மை வாத வஹாபி சன்னி இஸ்லாம் மத நம்பிக்கையை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங் கியது. 

லண்டன் தொடங்கி இந்தோனேஷியா வரை மசூதி களையும் பள்ளி களையும் உருவாக் கியது.

அரபு / முஸ்லிம் உலக நாடு களுக்கே அது ஒரு பேரழிவாக உருவானது. அல்-கொய்தா, ஐஎஸ் போன்ற ஆபத்தான அமைப்புகள் உருவாகக் காரண மானது. 

அரபு நாடுகளில் கல்வியும் பெண்களின் முன்னேற் றமும் தேக்க நிலையை அடையக் காரண மானது.

தற்போது, முற்போக் கான சவுதி இஸ்லாமு க்கு வழி வகுக்கப் போவதாகச் சூளுரைத் திருக்கிறார் எம்.பி.எஸ். 

மதரீதியான கட்டுப் பாடுகளைத் தளர்த்து வது, பெண்கள் வாகனம் ஓட்ட அனு மதிப்பது போன்ற வற்றைச் செய்யத் தொடங்கி யிருக்கிறார். இது மிக முக்கிய மானது. 

தனது அரசை இறை பக்தியை வைத்து அல்ல, செயல் பாடுகளின் அடிப்படை யில் மக்கள் பார்க்க வேண்டும்; 

குரான் அடிப்படை யில் அல்லாமல் - வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, சுகாதாரம் ஆகிய வற்றில்   

தனது அரசின் செயல் பாடுகளின் அடிப்படை யில் பார்க்க வேண்டும் என்று துணிச்ச லாகச் செயல் படுகிறார்.

எதிர் மறை விளைவுகள்
ஆனால், ஒற்றுமை க்கு வழி வகுக்கும் விஷயமாக வஹாபிஸத் துக்குப் பதிலாக, மதச் சார்பற்ற சவுதி தேசிய வாதத்தை அவர் முன்னிறுத் துகிறார். 

ஈரான், ஷியா பிரிவின ருக்கு எதிரான உறுதியான நிலைப்பாடு இது. இது ஆபத்தான விளைவு களுக்கு வழி வகுக்கும். 

ஈரானை எதிர் கொள்வதற் காக, சன்னி பிரிவைச் சேர்ந்த லெபனான் பிரதமர் சாத் அல் - ஹரிரியைப் பதவி விலகச் செய்த எம்.பி.எஸ்., 

லெபனானில் ஆட்சி நிர்வாகம் நடக்க முடியாத நிலையை உருவாக்கி யிருப்பதாக ஈரான் மீதும், ஷியா ஆதர வாளர்கள் மீதும் குற்றம் சாட்டினார். 

ரியாத் விமான நிலைய த்தைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதலை நடத்திய தாக யேமனையும் விமர்சி த்தார் 

எல்லோரி டமும் ஒரு ஸ்திரமான சம நிலையை உருவாக்கி யிருந்த லெபனான் தற்போது நிலை குலைந் திருக் கிறது.

“இந்த ஆள் ஒரு மெதுவான மரணத்தி லிருந்து சவுதி அரேபியாவைக் காப்பாற்றி யிருக்கிறார். 

சவுதி அரச குடும்ப த்தை மதகுருக் களின் ஆதிக்கத்தி லிருந்து விடுவித் திருப்பது நல்ல விஷயம். 

ஆனால் தனது அரசியல், பொருளாதார முடிவு களில் மாற்றுக் கருத்து களை அவர் அனுமதிக்க மறுக்கிறார்” 

என்று எம்.பி.எஸ். பற்றி மூத்த சவுதி பத்திரிகை யாளர் ஒருவர் என்னிடம் சொன்னார்.

ஈரானை எதிர் கொள்வதில் மேலும் உக்கிர மாகச் செயல்பட வேண்டும் என்று அவரைத் தூண்டி விடும் ஐக்கிய அரபு அமீரகம், 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், (ட்ரம்பின் மருமகனும் அவரது ஆலோசக ருமான) ஜாரெத் குஷ்னெர், 
இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாஹு எல்லோரும் ஒரே சமய த்தில் சவுதி அரேபியாவுக் குள்ளும் வெளியிலும் போர் உருவாகும் நிலைக்குக் கொண்டு சென்று விடுவார்கள். 

ஒரே சமயத்தில் சவுதி அரேபியா வும் மொத்த பிராந்தியமும் கட்டுப் பாட்டை இழக்கும் நிலை உருவாகும். 

முன்பே சொன்னது போல், எனக்குக் கவலை யாக இருக்கிறது!. ‘தி நியூயார்க் டைம்ஸ்’
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings