11.5 லட்சம் மோசடி... போலி அமெரிக்க மாப்பிள்ளை சிக்கினார் !

0
திருமண இணைய தளத்தில் பல பெயர்களில் பதிவு செய்து திருமணம் செய்து கொள்வதாக கூறி வரன் பார்த்த விதவைப் பெண்ணை அமெரிக்க மாப்பிள்ளை என்று 
11.5 லட்சம் மோசடி... போலி அமெரிக்க மாப்பிள்ளை சிக்கினார் !
ஏமாற்றி ரூ.11.5 லட்சம் மோசடி செய்த கூடுவாஞ்சேரி நபரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்து சிறையி லடைத்தனர்.

சென்னை புறநகர் பகுதியை சேந்தவர் லதா (பெயர் மாற்றப் பட்டு ள்ளது) . இவர் கணவரை இழந்து மகனுடன் வாழும் இளம் விதவை. 

இவர் தன்னுடைய மறுமணத் திற்காக தன்னைப்ப ற்றிய விபரங்களை மேட்ரி மோனியல் திருமண வெப்சைட்டில் பதிவேற்றம் செய்திருந் துள்ளார்.

இதைப்பார்த்து அமெரிக்கா விலிருந்து டாக்டர். பிரசாந்த் பிரதாப் சிங் என்பவர் தன்னை எலும்பு நிபுண மருத்துவர் என்றும் 

மாதம் லட்சக் கணக்கில் சம்பாதிப்ப தாகவும் யாரும் துணை இல்லை என்றும், லதாவை பார்த்த வுடன் பிடித்து போய் விட்டது 
என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு தொலைபேசி மூலம் தொடர்பு கொண் டுள்ளார்.

திருமணம் செய்து கொள்ள விரும்புவ தாக தெரிவித் துள்ளார். இருவரும் பரஸ்பரம் தங்களது தகவல் களை பறிமாறிக் கொண் டுள்ளனர். 

தனது ஒரே மகனையும் தனது மகன் போல் பார்த்துக் கொள்வ தாக பிரதாப் சிங் நம்பும் படி கூறிய வுடன் லதா நெகிழ்ந்து போயுள்ளார். 

துன்பத்தி லிருந்த தனக்கும் தனது மகனுக்கும் மீண்டும் ஒரு நல்ல துணை கிடைத் துள்ளது என்று சந்தோஷப் பட்டுள்ளார்.

இதனிடையே லதாவை நேரில் சந்தித்து திருமணம் சம்மந்தமாக பேச வேண்டி இருப்பதாகவும், தான் வேலை பளு காரணமாக வர இயலாத தால், 

(Fiancie Visa) K1, K2 எடுத்து தன்னை வந்து சந்திக்கு மாறு பிரதாப் சிங் கூறி யுள்ளார். 
அமெரிக்க செல்ல விசா பெறுவதற்காக லதா தன்னிட மிருந்து ஏறக்குறைய ரூ.11.5 லட்சம் பணத்தை வங்கி கணக்கின் மூலம் பிரதாப் சிங்க்கை நம்பி அவரது வங்கிக் கணக்கில் செலுத்தி யுள்ளார். 

பணத்தை பெற்றுக் கொண்ட பின்னர் பிரதாப் சிங் அதன் பின்னர் பதில் எதுவும் சொல்லாமல் அலைக் கழித்து வந்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த லதா இது குறித்து விசாரித்த போது பணம் பெற்ற நபர் அமெரிக்கா வில் இல்லை என்பது தெரிய வந்தது. இது குறித்து காவல் ஆணையர் அலுவல கத்தில் லதா புகார் அளித்தார்.

புகார் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையாளர் மத்திய குற்றப் பிரிவிற்கு உத்தர விட்டதன் பேரில், 

மத்திய குற்றப் பிரிவு சைபர் கிரைம் பிரிவில் வழக்கு பதிவு செய்து, சைபர் கிரைம் போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப் பட்டது.

விசாரணை யில் டாக்டர். பிரசாந்த் பிரதாப் சிங் என்ற பெயரில் லதாவிடம் பேசி மோசடி செய்தவர் கூடுவாஞ்சேரியை சேர்ந்த குமார் துரை(33) என்பதும், 
இவர் ராஜன் துரை, பிரசாந்த் குமார், கௌதம் ஜார்ஜ் குமார் போன்ற பல பெயர் களில் திருமண இணைய தளத்தில் பதிவு செய்து, 

பெண் களிடம் தன்னை அமெரிக்க மாப்பிள்ளை என்று பேசி அவர்களிடம் விசா (Fiancie Visa) பெற்று தருவதாக பணம் பெற்று மோசடி செய்தது தெரிய வந்தது.

குமாரை கைது செய்த போலீஸார் நீதிமன்ற த்தில் ஆஜர் படுத்தப் படுத்தி அடைத்தனர்.

திருமண தகவல் இணைய தளம் மூலமாக வரன் தேடுபவர்கள் சம்பந்தப் பட்டவர் களை நேரில் சந்தித்து திருமண ஏற்பாடு களை செய்ய வேண்டுமே யொழிய ஆன்லைன் மூலமாக விசா பெற்று தருவ தாகவோ, 

அவசரத் தேவைக் காகவோ, பணம் வேண்டும் என கேட்கும் போது கொடுத்து ஏமாற வேண்டாம். 
சம்பந்தப் பட்டவர் களின் உண்மை தன்மை மற்றும் உறுதி தன்மையை நேரில் சென்று புலப் படுத்திக் கொண்டு அதற்கான பேச்சு வார்த்தை தொடங்க வேண்டும் என்று போலீஸார் எச்சரித் துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings