தொழிலதிபர் விஜய் மல்லையா கைதாகி விடுதலை !

0
தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் மீண்டும் கைது செய்யப்பட்டு,  உடனே ஜாமீனில் விடு விக்கப் பட்டார். 
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனாகப் பெற்று, அதனை தொழில திபர்  விஜய் மல்லையா திருப்பிச் செலுத்த வில்லை. 

எனவே அவர் மீது சிபிஐ, அமலாக்கத் துறை சார்பில் வழக்கு கள் பதிவு செய்யப் பட்டன. இதனிடையே இங்கிலாந்துக்குத் தப்பிய  விஜய் மல்லை யாவை, கைது செய்து அழைத்து வரும் நடவடிக்கையைத் தீவிரப் படுத்தி யிருந்தது இந்திய அரசு. 

அவரை நாடு கடத்தி தங்களிடம் ஒப்படைக் குமாறு இங்கிலாந்திடம் மத்திய அரசு ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் விஜய் மல்லையாவை இங்கிலாந்து அதிகாரிகள் கைது செய்தனர். 
ஆனால் அவர் உடனடியாக ஜாமீனில் விடுதலையானார். இந்நிலை யில் இந்தியாவில் தொடரப் பட்டுள்ள வழக்குகள் தொடர்பாக  விஜய் மல்லையா லண்டனில் மீண்டும் கைது செய்யப் பட்டார். 

இருப்பினும்  விஜய் மல்லை யாவிற்கு கைதான  சில நிமிடங்களிலேயே ஜாமீன் வழங்கப்பட்டு அவர் விடுவிக்கப் பட்டார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings