அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் அனிதாவுக்கு கண்ணீர் அஞ்சலி !

நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவி அனிதாவுக்கு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தமது கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறது.
அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் அனிதாவுக்கு  கண்ணீர் அஞ்சலி !
இது தொடர்பாக வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை செயலாளர் இரமாமணி செயபாலன் வெளியிட்ட அறிக்கை:

நீட் என்ற மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வினால், வாழ்க்கையில் மருத்துவராக வேண்டுமென்ற ஒரே குறிக் கோளுடன் தன் குடும்ப வறுமை யெல்லா வற்றையும் பொருட்படுத்தாது, தன் இலட் சியக் கனவை அடையும் வகையில் 

அயரா துழைத்து மிக அதிக மதிப்பெண்கள் பெற்றும், உச்ச நீதி மன்ற த்தின் படியேறி கதவு களைத் தட்டியும், 

சமூக நீதிக் கான அத்துணை வழிகளும் அடைக்கப் பட்டதை தாங்க இய லாத மருத்து வராக வலம் வர இருந்த, அரியலூர் மாவட்டத்தில், குழுமூர் என்னும் 

குக்கி ராமத்தில் பிறந்த அனிதா என்ற ஒரு மொட்டின் வாழ்க்கை அநியாய மாகப் பறிக்கப் பட்டதற்கு, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை ஆழ்ந்த இரங் கலைத் தெரிவிக் கின்றது. இது மிகவும் வருந்தத் தக்க செய்தி.
நீட் தேர்வினால் மிகுந்த பாதிப்புக் குள்ளாகி இருக்கின்ற தமிழக மாணவர்கள், இது போன்று மற்றும் 

ஒரு துயர சம்பவம் நடவாமல் தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டும் என்று வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றது. 

மேலும், மாணவர்களும் இது போன்ற தங்களை மாய்த்துக் கொள்ளும் துயரச் சம்பவங்களில் ஈடுபடாமல் பொறுமை காத்திட அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம். 

இது குறித்து வட அமெரிக்காவில் உள்ள பல தமிழ்ச் சங்களும், பல தமிழ் அமைப்புகளும் தங்கள் பகுதிகளில் இரங்கல் கூட்டங்கள் நடத்துவதற்கு, ஏற்பாடுகள் மிக துரித மாக செய்யப் பட்டு வருகி ன்றது.

தமிழ் ஆர்வலர்களும், உணர்வாளர்களும் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் நடைபெறும் இரங்கல் கூட்டங்களில் கலந்து கொண்டு 
நமது உணர்வையும் ஒற்று மையையும் வெளிப்படுத்து மாறு பேரவையின் சார்பில் அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

இளம் தளிர் அனிதாவின் மறைவிற்கு பேரவையின் ஆழ்ந்த இரங்கலை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings