குழந்தையை கடத்திய 14 வயது சிறுவன்... ஷாக் சம்பவம் !

தண்டையார் பேட்டை பகுதியில் நேற்று மாயமான இரண்டரை வயது ஆண் குழந்தையை 14 வயது சிறுவன் கடத்திச் சென்ற சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச் சியை ஏற்படுத்தி யுள்ளது. 
குழந்தையை கடத்திய 14 வயது சிறுவன்... ஷாக் சம்பவம் !
சென்னை தண்டையார் பேட்டை நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் மகமது இலியாஸ். இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அருகே சாலை யோரத்தில் துணி வியாபாரம் செய்து வருகிறார்.

இவரது இரண்டரை வயது மகன் முகமது சாது நேற்று முன்தினம் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது கடத்தப் பட்டான்.

ஒரு நாள் கடந்த பின்னரும் குழந்தை முகமதுவைப் பற்றி எந்தத் தகவலும் தெரியாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கவலை யடைந்தனர்.

இதனை யடுத்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் சிறுவனை போலீசார் தேடி வந்தனர்.
அப்போது அந்த வழியாக சைக்கிளில் வந்த 14 வயது சிறுவன் ஒருவன் முகமதுவை சைக்கிளில் அமர வைத்து அழைத்து செல்வது கண்டு பிடிக்கப் பட்டது.

இதன் அடிப்படை யில் போலீசார் விசாரணை நடத்தி யதில் கடத்தப் பட்ட பகுதி யில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீட்டில் முகமதுவை சிறுவன் வைத் திருந்தது தெரிய வந்தது.

இதனை யடுத்து போலீசார் அந்த வீட்டை கண்டு பிடித்து முகமதுவை மீட்டனர். ஆனால் முகமதுவுடன் விளை யாடவே அழைத்து சென்றதாக சிறுவன் கூறுகிறான்.
எனினும் இதில் போலீசாருக்கு சந்தேகம் வந்தது, ஏனெனில் அந்தச் சிறுவன் தனது சைக்கிளின் நிறத்தை நேற்று மாற்றி யுள்ளான்.

எனவே போலீசார் கடத்திய சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் 14 வயது சிறுவனின் பெற்றோரும் உடந்தையாக இருந்தி ருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக் கின்றனர்.
Tags:
Privacy and cookie settings