தொடர் தோல்வி... கொந்தளித்த இலங்கை ரசிகர்கள் !

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் ஒரு நாள் தொடர், இலங்கையில் நடந்து வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில், இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. 
தொடர் தோல்வி... கொந்தளித்த இலங்கை ரசிகர்கள் !
இந்நிலையில், மூன்றாவது ஒரு நாள் போட்டி, பல்லேகலேவில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இலங்கை ரசிகர்கள்

அந்த அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற, லஹிரு திரு மானே மட்டும் நிலைத்து நின்று ஆடினார். 

திருமானே 80 ரன் களில் வெளி யேறினார். இதனால், இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பு க்கு 217 ரன்கள் எடுத்தது. 

அதிக பட்சமாக, பும்ரா ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பாண்ட்யா, அக்சர் பட்டேல், கேதர் ஜாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.

ஒரு கட்ட த்தில், 61 ரன் களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இதைத் தொட ர்ந்து, ரோஹித் ஷர்மா தோனி இணை நிதானமாக ஆடி  ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ரோஹித் ஷர்மா சதம் அடித்து அசத்த, தோனி அரை சதம் அடித்தார்.

தோனி

வெற்றியின் விளிம்பில் இந்தியா இருந்த போது, இலங்கை ரசிகர்கள் அதிருப்தியில் வாட்டர் பாட்டில் களை மைதானத்துக்குள் வீசினர். 

அதே போல, தோல்வியை ஏற்க முடியாமல் ஆரவாரம் செய்தனர். இதனால், போட்டி சற்று நேரத்துக்கு நிறுத்தப்பட்டது. 

இதனிடையே, இலங்கை ரசிகர்கள் தொடர்ந்து வாட்டர் பாட்டில்களை மைதானத்துக்குள் வீசினர். 

இதையடுத்து, தோனி மைதானத்திலேயே அசந்து படுத்து விட்டார். இதன் காரணமாக, இலங்கை ரசிகர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நெட்டிசன்கள், தோனியின் ஃபோட்டோவையும் ட்ரெண்ட் ஆக்கினர்.
மீண்டும் ஆட்டம் தொடங்கியது. 45.1 ஓவர்களில் 218 ரன்கள் எடுத்து இந்திய அணி இலக்கை எட்டி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ரோஹித் ஷர்மா 124 ரன்களுடனும், தோனி 67 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
Tags:
Privacy and cookie settings