ஆளுநர் மூலம் நடத்தும் ஆட்சியை கைவிட வேண்டும்... ஸ்டாலின் !

மத்திய பாஜக அரசு மக்களால் தேர்ந் தெடுக்கப் பட்ட மாநில அரசு களை சிதைத்து - ஆளு நர்கள் மூலம் தனி அரசு நடத்தும் போக்கினைக் கைவிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி யுள்ளார்.
ஆளுநர் மூலம் நடத்தும் ஆட்சியை கைவிட வேண்டும்... ஸ்டாலின் !
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், புதுச்சேரி மாநில ஆளுநராக இருக்கும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி, 

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி ஜனநாயக நெறி முறைகளைப் பின்பற்றி பொதுத் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந் தெடுக்கப் பட்ட அரசைச் சிறிதும் மதிக் காமல், துச்சமென எண்ணிச் செயல் படுகிறார்.

புதுச்சேரி முதல்வர் தலைமை யிலான ஜனநாயக அரசைக் கலந்து ஆலோசி க்காமல், மத்திய அரசும் - துணை நிலை ஆளுநரும் கை கோர்த்துக் கொண்டு, 

புதுச்சேரி சட்ட மன்றத் திற்கு நியமன சட்டமன்ற உறுப்பி னர்களை நியமி ப்பதும் அரசியல் சட்ட த்தின் மாண்பு களை குழி தோண்டிப் புதைக்கும் மாபாதகச் செய லாகவும், 

கூட்டாட்சித் தத்துவ த்தை கேலிக் கூத்தாக்கும் தரம் தாழ்ந்தப் போக் காகவும் அமைந்தி ருக்கிறது.

பாஜக மாநிலத் தலைவர், அக்கட்சியில் உள்ள மாநிலப் பொருளாளர், இன்னொரு தனியார் பள்ளி நிர்வாகி என்று பாஜக வில் உள்ளவர் களையும், 
அந்தக் கட்சி யின் துணை அமைப்பு களுடன் நெருங்கிய தொடர் புடையவ ர்களு மான மூன்று பேரை புதுச்சேரி சட்ட மன்ற உறுப்பி னர்களாக நியமித் திருப்பது கடும் கண்ட னத்திற் குரியது.

மக்க ளால் தேர்ந் தெடுக்கப் பட்ட அரசுக்கு உள்ள தார்மீக உரிமை யையும், புதுச்சேரி மாநில த்திற்கு அரசியல் சட்டம் வழங்கி யுள்ள 

அதிகார த்தையும் தட்டிப் பறிக்கும் செயலில் மாநில த்தின் நிர்வாகி யாக அனுப்பி வைக்கப் பட்டுள்ள கிரண் பேடியும், 

மத்திய  அரசும் சதித் திட்ட மிட்டுச் செயல் படுவது, சட்ட மன்ற ஜனநாய கத்திற்கு விடப் பட்டுள்ள மிகப்பெரிய அறை கூவலாக வும் அச்சுறுத் தலாக வும் அமைந்தி ருக்கிறது.

நேர்மை யாளராகத் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளும் புதுவை ஆளுநர், கிரிமினல் வழக்கு களில் சம்பந்தப் பட்டுள்ள வரை சட்ட மன்ற உறுப்பி னராக நியமிக்க, 

தனக்கு இல்லாத அதிகார த்தை அவசர மாக பிரயோகம் செய்து, ரகசிய மாக பதவிப் பிரமாண மும் செய்து வைத்தி ருப்பது, 

ஆளுநர் பதவியில் அமர்ந்து மத்தி யில் உள்ள பாஜக அரசின் முழுநேர ஏஜெண் டாக மிகத்தாழ்ந்த அரசியல் செய்கிறார் என்ற அருவெறுக்கத் தக்க குற்றச் சாட்டை வெளிச்சம் போட்டு, உண்மை யாக்கி விட்டது.
புதுச்சேரி சட்ட மன்ற விதிகளை உருவாக்க சபாநாய கருடன் கலந்து பேசித் தான், அந்த மாநில த்தின் ஆளுநர் முடிவு எடுக்க முடியும். 

மாநில சட்ட மன்றத்திற்கு ஒரு செய்தி அனுப்ப வேண்டும் என்றால் கூட அதனைப் பேரவைத் தலைவர் அல்லது அமைச்சர் மூலமாகத் தான் ஆளுநர் அனுப்ப முடியும். 

விருப்ப அதிகாரம், மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டிய நிர்வாக நடை முறைகள், 

தவிர மாநிலம் தொடர்புடைய மற்ற அனைத்து நிர்வாக நடைமுறை களிலும் அமைச் சரவையின் ஆலோசனை களைப் பெற்றுத் தான் நிர்வாகி செயல்பட வேண்டும்.

எல்லாவ ற்றையும் விட. புதுச்சேரி யில் சட்ட மன்றமும் - மக்க ளால் தேர்ந் தெடுக்கப் பட்ட அரசும் இருக்கும் போது, 

குடியரசுத் தலைவர் நியமித் துள்ள ஆளுநரோ அல்லது மத்திய அரசோ அம்மாநில விவகார ங்களில் தலை யிடுவதே அரசியல் சட்டத் தால் தடுக்கப் பட்டுள்ளது.

ஆனால் இதை யெல்லாம் மீறி அமைச் சரவையின் ஆலோசனைப் படி நடக்க வேண்டிய ஆளுநர் தனக்கு ஏதோ வான ளாவிய அதிகாரம் இருப்பது போல் வீண் கற்பனை செய்து கொண்டு, 
மக்களால் தேர்ந் தெடுக்கப் பட்ட அரசை செயல்பட விடாமல் தடுப்பது, அவரது கோர மான அதிகாரப் பசியை வெளிக் காட்டுகிறதே தவிர, அரசியல் நாகரிக த்தைக் கிஞ்சிற்றும் காட்டவில்லை. 

அது மட்டு மின்றி, புதுவை மாநில மக்களின் உணர்வுகளைப் புறக் கணித்துக் கொச்சைப் படுத்தும் இந்தச் செயலை யாராலும், குறிப் பாக ஜனநாயக த்தில் நம்பிக்கை கொண்டு உள்ளவர் களால் சகித்துக் கொள்ளவே முடியாது.

புதுச்சேரி விவகாரம் இப்படி யென்றால், மேற்கு வங்க ஆளுநர் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை மிரட்டு கின்ற பாணியில் தொலை பேசியில் அநாகரி கமான வார்த்தை களைப் பேசி இருப்ப தையும், 

யாராலும் பொறுத்துக் கொள்ளவோ மன்னிக் கவோ முடியாது. ஒரு முதல் வருடன் கண்ணிய மாகப் பேசத் தெரியாத நயத்தக்க நாகரிகம் அறியாத ஒருவரை ஆளுநராக நியமித் ததன் மூலம், 

மேற்கு வங்கத்தில் ஒரு அசாதாரண சூழ் நிலையை பாஜகவே திணித்தி ருக்கிறது என்றே எண்ண வேண்டிய திருக்கிறது.

அதே போல், டெல்லி யில் மக்கள் தேர்ந் தெடுத்த முதல்வர் அரவிந்த் கேஜ்ரி வாலை செயல்பட விடாமல் மத்தியில் உள்ள பாஜக அரசு முடக்கி, தடுப்பது ஜனநாயக நாட்டில் யாரும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

ஆளுந ர்கள் நியமிக் கப்படுப வர்கள். முதல்வகள் மக்களால் தேர்ந் தெடுக்கப் படுபவர்கள் என்ற அடிப்படை மக்க ளாட்சிக் கோட் பாட்டை மத்தியில் உள்ள பாஜக அரசு மறந்து, 
எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங் களில் உள்ள முதல்வர் களுக்கு தீராத நெருக்கடி கொடுப் பதையும், 

அங்கு நடை பெறும் தேர்ந் தெடுக்கப் பட்ட ஆட்சி களுக்கு தினமும் தொல்லை கொடுத்து, நிர்வாக த்தைச் சிதைத்துச் சீர் குலைப் பதையும் கைவந்த கலை யாகச் செய்து வருவது கவலைக் குரியது.

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வ ராக இருந்த போது அங்குள்ள ஆளு நரை மாற்ற வேண்டும் என்று ஒரு யுத்தமே நடத்தினார். 

அப்போது அவர், 'ராஜ்பவன் களை வைத்து மாநில த்தை ஆள நினைக் கிறது மத்திய அரசு. ராஜ் பவன்கள் மூலம் கொல்லைப்புற வழியாக நுழைந்து இன்னொரு தனி அரசாங் கத்தை மாநிலத்தில் நடத்து கிறது. 

இரு அரசாங் கம் ஒரு மாநிலத்தில் செயல் பட்டால் மக்கள் எங்கே போவா ர்கள்' என்று ஆவேச மாக மாநில உரிமைகள் குறித்துக் கேள்வி எழுப் பினார்.

ஆனால், அந்த குஜராத் முதல்வர் இன்றை க்குப் பிரதமரான பிறகு கூட்டுறவுக் கூட்டாட்சி என்ற முழக் கத்தை முன் வைத்து, மாநில ங்களின் அதிகார த்தை கொத்துக் கொத்தாக 
பறித்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என்பது மிகுந்த கவலை யளிப்பதாக இருக்கிறது. முதல் வராக இருந்த போது, மாநிலங் களுக்கு உரிமை வேண்டும் என்றவர், 

இன்றை க்குப் பிரதமர னாதும் மாநிலங் களின் அதிகார ங்களைப் பறிப்பதும், ஆளுநர் களை வைத்து மாநில ங்களில் தனி அரசாங்கம் நடத்து வதும் கூட்டா ட்சித் தத்துவ த்திற்கு எதிரா னதும் - முரணா னதும் ஆகும்.

உரிமை க்குக் குரல் கொடுப் போம், உறவு க்குக் கை கொடுப் போம் என்று மாநில அரசுகள் மத்திய அரசுடன் ஒரு இணக்க மான சூழ் நிலையை நீண்ட நெடுங் காலமாக கடை பிடித்து வருகி ன்றன. 

ஆனால் அந்த உயர்ந்த சிந்த னையை, நாட்டுப் பற்று மிக்க மாநில ங்களின் நோக்க த்தை இது போன்று ஆளு நர்கள் மூலம் தனி அரசாங்கம் நடத்தி மத்தி யில் உள்ள பாஜக அரசு சிதைக்க முயற் சிப்பது வருத்த த்திற் குரியது.

மத்தியில் கூட்டாட்சி, மாநில த்தில் சுயாட்சி என்பது தான் திமுக வின் நெடு நாளைய முழக்கம். 

அதற் காகவே மத்திய - மாநில உறவுகள் குறித்து ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ராஜ மன்னார் தலைமை யில் விசாரணை ஆணையம் அமைத்து, 

தமிழக சட்ட மன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானமே நிறை வேற்றிய அரசு திமுக அரசு என்பதை மத்தியில் உள்ள பாஜக அரசுக்கு நினைவு படுத்த விரும்பு கிறேன்.
ஆனால் இன்றை க்கு ஒரே நாடு, ஒரே வரி, ஒரே நாடு, ஒரே கல்வி என்று மாநிலங் களிடம் உள்ள ஒவ்வொரு அதிகார த்தையும் பறித்துக் கொள்ளும் மத்திய பாஜக அரசு, 

மத்திய - மாநில அரசு களுக்கு இடையிலான உறவில், புதிய குழப்பங் களை ஏற்படுத்தி யிருக்கிறது. 

மாநிலங்கள் ஏதோ மாநக ராட்சிகள் போல், ஏன் அதற் கும் கீழ் முனிசி பாலிட்டிகள் போன்ற நிலை க்குத் தள்ளப் படுவது, 

மத்திய - மாநில அரசு அதிகாரங் களில், கவலைப் படும் ஒரு அத்தி யாயத்தைத் தோற்று வித்திருக் கிறது.

அரசியல் சட்ட த்தில் மத்திய அரசும், மாநில மும் சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த பொதுப் பட்டியல் நாளடை வில் காணாமல் போய் விடுமோ என்ற அச்சமே ஏற்படு கிறது. 

அது மட்டு மின்றி, மத்திய அரசு பட்டியல் மட்டுமே மிஞ்சி, மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியலும் சுருங்கி விடுமோ என்ற மாபெரும் கவலை அனைத்து மாநில அரசுக ளுக்குமே இப்போது ஏற்பட்டி ருக்கிறது.

மாநில அரசு களின் அதிகாரங் களைப் பறிக்கும் மத்தியில் உள்ள பாஜக அரசின் இந்த நடவடிக் கைகளால், மத்திய - மாநில உறவு குறித்து ஆராய இன்னொரு கமிஷன் அமைக்க வேண்டும் என்ற கோரிக் கையை 
மீண்டும் வலி யுறுத்த வேண்டிய கால கட்டம் மாநிலங் களுக்கு வந்து விடுமோ என்று எண்ணத் தோன்று கிறது.

ராஜ்பவன் களில் இருக்கும் ஆளுநர் களின் செயல் பாடுகளும் ஆட்டுக்கு தாடி தேவை யில்லை என்பது போல் நாட்டுக்கு ஏன் கவர்னர் என்ற கேள்வி யையும் மீண்டும் எழுப்பு கிறது. 

ஆகவே மத்தியில் உள்ள பாஜக அரசு மாநில ங்களில் உள்ள மக்க ளால் தேர்ந் தெடுக்கப் பட்ட அரசு களை மதிக்க வேண்டும் என்றும், 

அரசியல் சட்டம் வழங்கி யுள்ள மாநில அரசின் அதிகாரங் களில் எதேச்சதி காரமாக அத்து மீறல் செய்து ஆக்கிர மிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல், ஆளுநர் நியமன ங்களில் சர்க்காரியா கமிஷன் பரிந்துரை களை முழுவதும் கடை பிடிக்க வேண்டும் என்றும்
புதுச்சேரி, மேற்கு வங்கம், டெல்லி போன்ற மாநிலங் களில், ராஜ் பவனை வைத்து மாநிலத் திற்குள் ஒரு தனி அரசாங்கம் நடத்தும் போக்கை உடனடி யாகக் கைவிட்டு, 

மத்திய - மாநில உறவுகள் நலி வடைந்து விடாமல் செழுமைப் படுத்திட மத்திய அரசு உதவிட வேண்டும்'' என்று ஸ்டாலின் தெரிவித் துள்ளார்
Tags:
Privacy and cookie settings