ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்து வந்த பாதை !

நாட்டின் 14-வது ஜனாதிபதியாக இன்று பதவியேற் றுள்ள ராம்நாத் கோவிந்த், மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்து உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் முதல் குடிமகனாக உயர் ந்துள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்து வந்த பாதை !
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் புறநகர் மாவ ட்டத்தில் உள்ள பராவுங்க் கிராமத்தில் 1-10-1945 அன்று மிகவும் பின்தங்கிய ஏழைக் குடும்பத்தில் மகனாகப் பிறந்த இவருக்கு ஐந்து மூத்த சகோதரர்களும், 

இரு மூத்த சகோதரி களும் உள்ளனர். மிகச்சிறிய மண் சுவரால் ஆன இவர் களது குடிசை வீடு தீக்கிரை யானதில் ராம்நாத் கோவிந்தின் தாயார் பலியான போது, இவரது வயது 5.

தாயை இழந்த தனய னாக சகோதர - சகோதரி களின் அரவ ணைப்பில் வளர்ந்த ராம்நாத் கோவிந்த், கல்வியின் மூலம் மட்டுமே வாழ்க்கையில் உயர் நிலையை அடைய முடியும் என்பதை சிறு வயதிலேயே உணர்ந் தார். 

கான்பூரில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு செல்வ தற்கு சொந்த மாக சைக்கிள் வாங்க வழி யில்லாத ஏழ்மை நிலையில் இருந்த ராம்நாத் கோவிந்த், 
தினந் தோறும் 6 கி.மீ. தூரம் நடந்து பள்ளிக்கு சென்று வந்தது கல்வியின் மீது இவருக்கு இருந்த காதலை விளக்குகிறது.

கான்பூர் பல்கலை க்கழக த்தில் வணிக வியல் பட்டம் பெற்ற பின்னர், சட்டம் பயின்று வழக்கறி ஞராகவும் மாறிய ராம்நாத் கோவிந்த், 

டெல்லி ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் வழக்கறி ஞராக 1993 வரை திறம்பட செயல் பட்டு வந்து ள்ளார். 

30-5-1974 அன்று சவீதா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு, ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

1977-79 கால கட்டத் தில் மத்திய அரசின் வழக் கறிஞராக டெல்லி ஐகோர்ட்டில் பணி யாற்றிய இவர், முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் தனி உதவி யாளரா கவும் இருந் துள்ளார். 

மேலும் உத்தரப் பிரதேச மாநில த்தில் உள்ள ஏழை எளிய மக்களு க்கு இலவச சட்ட உதவி களையும் இவர் செய்து வந்துள்ளார். இதன் மூலம் சமூக சேவை க்கும் பெரும் பங்களிப்பு ஆற்றி யுள்ளார்.
1988ம் ஆண்டு பா.ஜ.க.வின் சிறுபான்மை யினர் பிரிவான தலித் மோர்ச்சா அமைப் பின் தலைவ ராக செய லாற்றிய இவர், 1991-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்து பூரண அரசியலில் களமிற ங்கினார்.

1994-ம் ஆண்டு பாராளு மன்ற மேல்சபை உறுப் பினராக தேர்வு செய்யப் பட்ட ராம்நாத் கோவிந்த், 12 ஆண்டுகள் இப்பதவி யில் திறம்பட செய லாற்றி பல்வேறு மக்கள் பிரச்சனை களை 

முன் வைத்து அவற் றுக்கு தீர்வு காண முயன் றுள்ளார். எம்.பி. பதவிக் காலம் முடிந்த பின்னர் 2015-ம் ஆண்டு பீகார் மாநில ஆளு நராக நிய மிக்கப் பட்டார்.

பா.ஜ.க.வின் சித்தாந்தத் துடன் நேர்மாறான கருத் துடைய நிதிஷ் குமார் ஆட்சிக்கு இவர் அளித்து வந்த ஆதரவு விருப்பு வெறுப் பற்ற அரசியல் வாதி என்ற நற்பெயரை ஏற்படுத்தி தந்தது.

கடந்த மாதம் வரை பீகார் மாநில கவர்னர் என்னும் மிகச் சிறிய அடையா ளத்தைத் தவிர வேறு எவ்வித விளம்பர வெளிச் சமும் பட்டறி யாத ராம்நாத் கோவிந்த், 
அனைத்து தரப்பி னரையும் கவர்ந்த தாக இருந்த தால் இவரை தேசிய ஜனநாயக கூட்டணி யின் ஜனாதிபதி பதவி வேட் பாளராக பா.ஜ.க. அறிவித்தது. 

தலித் இனத்தைச் சேர்ந்தவர் என்ற தனிப் பட்ட அடை யாளமும் இவரது வெற்றி க்கு பெருந் துணையாக இருந் துள்ளது. 

இதனால் தான் தன்னை எதிர்த்து போட்டி யிட்ட எதிர்க் கட்சி வேட்பாளர் மீரா குமாரை விட சுமார் 7 லட்சம் வாக்கு கள் அதிகம் பெற்று இவரால் வெற்றி பெற முடிந்தது.

முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயண னுக்கு அடுத்த படியாக உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஜனாதிபதி பதவியை அலங்கரிக்கும் இரண்டாவது தலித் தலைவர் இவர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஜனாதிபதி தேர்த லில் வெற்றி பெற்ற பின்னர் மிக எளிமை யாக இவர் தெரிவித்த கருத்து மக்கள் அனை வரையும் கவர்ந்தது. 
நாட்டின் மிக உயர்ந்த இந்தப் பதவியை நான் எந்த காலத் திலும் நினைத்துப் பார்த்த தில்லை. எனது இலக் காகவும் இது இருந்த தில்லை. எனது வெற்றி இந்திய ஜனநாயக த்தின் உயர் வுக்கு கிடைத்த வெற்றி. 

இந்த வெற்றியின் மூலம் இந்திய நாட்டின் ஜனாதிபதி யாக மிக எளிமை யான மக்கள் பிரதிநிதி யாக, குறிப்பாக ஏழை எளிய மக்களின் பிரதிநிதி யாக நான் செயல் படுவேன்’ என அவர் குறிப்பிட் டிருந்தார்.

அந்த வார்த்தை களை மேலும் அலங்க ரிக்கும் வகையில் இன்று ஜனாதிபதி யாக பதவி யேற்ற 

பின்னர் பாராளு மன்றத் தின் மைய மண்ட பத்தில் உரை யாற்றிய ராம்நாத் கோவிந்த், ‘மிகவும் எளிமை யான குடும்பப் பின்ன ணியில் இருந்து வந்துள்ள நான் நெடுந்தூரப் பயண த்துக்கு 
பின்னர் எனக்கு அளிக்கப் பட்டுள்ள இந்தப் பதவியை மிகவும் பணிவுடன் ஏற்றுக் கொள் கிறேன். 

இந்த நாட்டின் மக்களைத் தான் எனக்கு இருக்கும் பலமாக கருது கிறேன்’ எனக் குறிப் பிட்டது இந்த நாட்டின் உயர்ந்த பதவிக்கு அவர் சூட்டி யுள்ள மணி மகுடமாக கருத வேண்டும்.
Tags:
Privacy and cookie settings