இயக்குநர் திவ்யபாரதி இன்று கைது !

மதுரை யில் ஆவணப் பட இயக்குநர் திவ்யபார தியை போலீசார் இன்று கைது செய்தனர். மதுரை ஆனை யூரைச் சேர்ந்தவர் திவ்ய பாரதி, சமூக சேவகர். 
இயக்குநர் திவ்யபாரதி இன்று கைது !
மேலும் இவர் லெனினிஸ்டு இயக்க த்தைச் சேர்ந்தவர். 2009-ம் ஆண்டு மதுரை யில் உள்ள ஆதி திராவிடர் விடுதி யில் தங்கி படித்த சட்டக் கல்லூரி மாணவர் சுரேஷ் பாம்பு கடித்து உயிர் இழந்தார். 

அவரது உடல் மதுரை அரசு ஆஸ்பத் திரியில் பிரேத பரிசோ தனைக் காக வைக்கப் பட்டு இருந்தது. ஆதி திராவிடர் விடுதியில் போதிய வசதிகள் செய்து தர வேண்டும். 

இறந்த மாண வருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரி திவ்ய பாரதி, உயிர் இழந்த சக மாணவரின் சடலத்தை வாங்க மறுத்து மறியல் போராட் டத்தில் ஈடு பட்டார்.

அவருடன், எழுச்சி மாணவர் அமைப்பைச் சேர்ந்த நிஜாமும் பங்கே ற்றார். இது தொடர் பாக மதிச்சியம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. இதில் திவ்ய பாரதியும், நிஜாமும் ஆஜர் ஆகாமல் இருந்து வந்தனர். மறியல் வழக்கு தொடர் பாக கோர்ட்டு பிடி வாரண்டு பிறப் பித்தது.
அதன் பேரில் மதிச்சியம் போலீசார் இன்று வீட்டில் இருந்த திவ்ய பாரதியை கைது செய்து மதுரை மாவட்ட கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவருடன் நிஜாமும் கைது செய்யப் பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப் பட்டார்.

வழக்கை விசாரித்த மதுரை 2-வது குற்ற வியல் நீதிமன்ற நீதிபதி சக்திவேல், இருவரு க்கும் ஒருவாரம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தர விட்டார். 

அதன் படி இருவரும் ஒரு வாரத்தி ற்குள் போலீஸ் நிலையத் திற்கு வந்து தினமும் ஆஜராகி கையெழு த்திட வேண்டும்.

கைதான திவ்ய பாரதி மனித கழிவு களை மனிதனே அகற்று வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கக்கூஸ் என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்தி ருந்தார். 

இதற்காக அவருக்கு சென்னையில் நடந்த விழாவில் பெரியார் சாக்ரடீஸ் விருது வழங்கப்பட்டது. 

சமீபத்தில் மாவோயிஸ் டுகளுடன் தொடர்பு வைத்தி ருந்ததாக கூறி சேலத்தைச் சேர்ந்த மாணவி வளர்மதியை குண்டர் சட்டத் திலும், 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர் குபேரனையும் போலீசார் கைது செய்து சிறை யில் அடைத்தனர்.
இந்த நிலை யில் திவ்ய பாரதியை போலீசார் கைது செய்து ள்ளனர். இது குறித்து திவ்ய பாரதி நிருபர் களிடம் கூறுகையில், 

சமூக செயல் பாடுகளில் ஈடுபடு பவர்கள் மீது வழக்கு போடுவது, இது புதிதல்ல. அவர் களை முடக்குவ தற்காக தான் இந்த வழக்கு போடப் பட்டு ள்ளது என்றார்.
Tags:
Privacy and cookie settings