அரசியல் பற்றி விஜயே முடிவெடுப்பார்... சந்திரசேகர் !

அரசியலுக்கு வருவது பற்றி விஜய் தான் முடிவெடுப்பார் என்று விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.
அரசியல் பற்றி விஜயே முடிவெடுப்பார்... சந்திரசேகர் !
உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகம் சார்பில் புரட்சி கரமான கருத்து களை திரைப் படங்களில் பதிவு செய்ததற்காக இயக்குநர் எஸ்.ஏ. சந்திர சேகருக்கு டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்வு சென்னை யில் நடை பெற்றது. 

இதில் பங்கேற்று டாக்டர் பட்டம் பெற்ற பிறகு எஸ்.ஏ. சந்திர சேகர் செய்தி யாளர் களை சந்தித்துப் பேசினார். அப்போது விஜய் அரசிய லுக்கு வருவாரா? 

அதை மக்கள் இயக்கம் முன்னெ டுக்குமா? என்று செய்தி யாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப் பட்டது. அதற்குப் பதில ளித்த எஸ்.ஏ. சந்திர சேகர், 'விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பதை அவர் தான் சொல்ல வேண்டும். 
அரசியல் பிரவேசம் குறித்து விஜய் முடிவெடுப்பார். மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் நான். அந்த இயக்கத்தில் உள்ள லட்சக் கணக்கான இளைஞர்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறேன்'' என்றார்.
Tags:
Privacy and cookie settings