பின்னணி பாடகி டீச்சரான கதை !

தமிழ்திரை இசையுலகில் மறக்க முடியாத பாடகி, ஜென்ஸி. இனிமை யான குரலுக்குச் சொந்தக்காரர். தன் மென்மையான குரலால் நம் மனதை கொள்ளை கொண்டவர். 
பின்னணி பாடகி டீச்சரான கதை !
பிரபல மாக இருந்த நேரத்தில் மியூசிக் டீச்சராக தன் வாழ்வை மாற்றிக் கொண்டவர். பிறந்து வளர்ந்தது, தற்போது வசிப்பது எல்லாமே கேரளாவுல தான். சாதாரண நடுத்தரக் குடும்பம் தான்.

பத்தாவது வரைக்கும் படிச்சுட்டு, மியூசிக்ல லோயர், ஹையர் கோர்ஸ் முடிச்சேன். என்னோட 13 வயசுல இருந்து மேடை கள்ல பாடிட்டு இருக்கேன்.

ஜேசுதாஸ் அண்ணா கூட கேரளாவுல நிறைய கச்சேரிகள்ல பாடியிருக்கேன். தாஸ் அண்ணா தான், நீ நல்லா பாடுறே’ன்னு சொல்லி, 16 வயசுல என்னை ராஜா சார்கிட்ட கூட்டிட்டுப் போனாரு.

அப்போ ராஜா சார் தன்னோட மெல்லிசை யால பல ஹிட் கொடுத்துட்டு இருந்த காலம். அவரைப் பார்க்கப் போகும் போது கொஞ்சம் பயமாகத் தான் இருந்துச்சு.
நான் போனது காலையில. ராஜா சார் என்கிட்ட இயல்பா பேசினார். மூணு பாட்டு பாட சொன்னார். பாடி காட்டினதும் ‘வாய்ஸ் ஓகே’னு மதியமே ரிக்கார் டிங்ல பாட வைச்சார்.

அப்படி 1978-ம் வருஷம் திரிபுரசுந்தரி படத்துல பாடின ‘வானத்துப் பூக்கள்’தான் என்னோட முதல் பாடல். 
அடுத்த டுத்து ‘அடிப் பெண்ணே, என்னுயிர் நீதானே, ஆயிரம் மலர்களே’னு நிறைய பாடல்களை பாட வாய்ப்புக் கொடுத்தார் ராஜா சார்.

அவர் பீக்ல இருந்தப்ப சுசிலா அம்மா, ஜானகி அம்மாவும் அவரோட இசையில அதிகமான பாடல் களை பாடிட்டு இருந்தாங்க. அவங்க ளுக்கு வாய்ப்பு கொடுக் கிறப்ப எனக்கும் வாய்ப்புக் கொடுத்தார் ராஜா சார்.

ஒவ்வொரு முறையும் ரெக்கார் டிங்ல எப்படி பாடணும்னு சொல்லிக் கொடுத்திடு வார். பாடி முடிச்சதும், பெருசா பாராட்ட மாட்டார்.

‘டேக் ஓகே’ ன்னு மட்டும் தான் சொல்லுவார். ஏதாச்சும் தப்பு பண்ணி யிருந்தா மட்டும் சரி செய்துக்க சொல்லு வார்.

பால சுப்ரமணியம் அண்ணா, ஜேசுதாஸ் அண்ணா, ஜானகி அம்மானு எல்லாரும் எப்படி பாடல் களை பாடணும்னு எனக்கு டிப்ஸ் கொடுத் தாங்க.
ரெண்டு வருஷம் பாடகியா என் கிராஃப் உயர்ந்துச்சு” என்றவர் தான் டீச்சர் வேலைக்குச் சென்ற சூழலை யும் விவரித்தார்
“சினிமாவுல என்னைத் தேடி வந்த வாய்ப்பு களை பயன் படுத்திக்க தெரிஞ்ச எனக்கு தானா போய் வாய்ப்பு கேட்கிற நுணுக்கம் தெரியல. எனக்கு உதவவும் யாரும் இல்லை.

நானும் யார் கிட்டயும் வாய்ப்பு கேட்டுப் போகல. அதே சமயம் கொச்சியில இருக்கும் ஓர் அரசு உதவி பெறும் பள்ளியில டீச்சரா வேலை கிடைச்சது.

‘ஒரு பாடகி டீச்சர் வேலை க்குப் போறாங் களே’ன்னு அப்போ பரபரப்பா பேசினாங்க. டீச்சரா வொர்க் பண்ணி கிட்டு இருந்தாலும், தொடர்ந்து ராஜா சார் பாடுற வாய்ப்பு களும் கொடுத்தார். 

அந்த சமயங் கள்ல மட்டும் சென்னை க்கு அப்பா வோட வந்து பாடிட்டுப் போவேன்.

அப்படித் தான் ஜானி படத்துல ‘என் வானிலே’, ‘தெய்வீக ராகம்’, ‘காதல் ஓவியம்’ மாதிரி யான பெரிய ஹிட் பாடல் களைப் பாடினேன்.

தமிழ் அளவுக்கு இல்லா ட்டியும், மலையாள த்துலயும் கொஞ்சம் பாடல்கள்ல பாடியிருந்த சமயத்துல கச்சேரிகள்ல பாடுறதையும் நிறுத் திட்டேன். 
1982-ம் வருஷத் தோடு சினிமாவுல பாடும் வாய்ப்புகளும் நின்னுடுச்சு. நானும் டீச்சர் வேலையில என் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பிச் சுட்டேன். 
சினிமாத் துறைக்கு வந்த அஞ்சு வருஷத்துல 50 பாடல்கள் மட்டுமே பாடியி ருக்கேன். ஆனா, 39 வருஷமா ரசிகர்கள் என்னை மறக்காம இருக்காங்க. இது தான் என்னோட வாழ் நாள் சாதனையா நினைக் கிறேன்.

எனக்கான அடையாளம் இப்ப வரைக்கும் ரசிகர்கள் மத்தியில தொடருது. ஒரு மியூசிக் டீச்சரா ஆயிரக்க ணக்கான குழந்தைகளுக்கு 
இசையை கற்றுக் கொடுத்தேன் ங்கிற மன திருப்தி தான் என் வாழ்நாள் திருப்தியா நினைக்கிறேன் என்றவர் தன் குடும்ப த்தைப் பற்றிக் கூறுகிறார்.

ஜென்ஸி குரலில் ஒலிக்கும், ‘ஜானி’ படத்தில் இடம் பெற்ற ‘என் வானிலே… ஒரே வெண்ணிலா’ பாடலைக் கேட்க கீழே இருக்கும் வீடியோவை கிளிக் செய்யவும்:

“கணவர் பிசினஸ் பண்ணிட்டு இருக்கார். பொண்ணு ஆஸ்திரேலியா வுல குடும்பத் தோடு வசிக்கி றாங்க. பையன் அமெரிக்கா வுல எம்.எஸ் படிச்சுகிட்டு இருக்காரு.
இப்பவும் 5 – 7-ம் வகுப்பு வரைக்கும் படிக்கிற குழந்தை களுக்கான மியூசிக் டீச்சரா தொடர்ந்து வொர்க் பண்ணிட்டு இருக்கேன்.
குறிப்பா நல்ல நல்ல பாட்டெ ல்லாம் கொடுத்து எனக்கு தனி அடையாளம் தந்தது இளையராஜா சார் தான். அதனால என்னோட வாழ்க்கை முழுக்க அவருக்கு நன்றிக் கடன் பட்டிரு க்கேன்” என்கிறார் நெகிழ்ச்சியாக.
Tags: