மகளை எரித்துக் கொன்ற தாய் !

எட்டரை மாத குழந்தையை தாங்கியிருந்த அவளுடைய வயிற்றில் அவர்கள் அந்த பெரிய கற்களை தான் எறிந் தார்கள். அப்படியும் அவர் இறக்க வில்லை என்பதால், அவரை அவர்களுடைய வீட்டுக்கு அருகில் இழுத்து சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றார்கள்.
மகளை எரித்துக் கொன்ற தாய் !
அப்படியும் அவர் இறக்க வில்லை என்பதால், அவரை அவர்க ளுடைய வீட்டுக்கு அருகில் இழுத்து சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன் றார்கள். 

கர்நாடகத்திலுள்ள கிராமத்தில் தலித் ஒருவரை திருமணம் செய்து கொண்ட தன்னுடைய மகளை எரித்து கொன்றதை விவரிக்கும் தாயின் சொற்கள் அல்ல இவை.

தன்னுடைய  "நல்ல மருமகள்" அவருடைய சொந்த தாயான ரம்ஸான் பேயால் எரித்து சாம் பலாக்கப் பட்டதை விவரிக்கும் மாமியார் கஸ்தூர் பாயின் சொற்கள் தான் இவை. 

விஜயபுரம் மாவட்டத்தில் இருந்து ஏறக்குறைய 93 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் குன்டாகாலா கிராமத் தில் வாழும் ரம்ஸான் பேயின் மகளான பானு பேகம், 

சிறு வயதி லிருந்தே தோழராக இருந்து வந்த கஸ்தூர் பாயின் மகன் சயாபாணா ஷார்னாப்பா கோணுரை திருமணம் செய்து கொண்டது தான் இதற்கு காரணமாகும். 

இந்த கோரமான சம்பவத்திற்கு பிறகு, இந்த கிரமத்திலுள்ள தலித் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் சமூகப் பதட்டம் தோன்றாதது மட்டுமே வெளிப்படும் நல்லதொரு செய்தியாகும்.

கொடூர சோகம்
பானு மற்றும் சயா பாணாவின் இடையில் குழந்தை பருவத்தில் இருந்தே தோன்றிய மாறாத அன்பு, ஆண்டுகள் செல்ல செல்ல தீவிரக் காதலாக மலர்ந் துள்ளது. 
இதற்கு பிறகு மிகவும் மகிழ்ச்சி யாக நீடித்திருக்க வேண்டிய இந்தக் காதல் வாழ்வு, பிறரை பீதியடைய வைக்கும் விகார மான முறையில் நிறைவு பெற்றிருக்கிறது. 

உணர்ச்சிப் பெருக்கால் அவருடைய கண்களில் இருந்து வழிந் தோடும் கண்ணீரை துடைக்க தீவிரமாக முயன்று கொண்டு, கஸ்தூர் பாய் கடந்த சனிக் கிழமை நிகழ்ந்த அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.

அவர் சமைத்து கொண்டிருந் தபோது, அவருடைய விறகு அடுப்புக்கு எதிர் பக்கத்தில் ஓரளவு கூரை யிடப்பட்டி ருந்ததில் தீ வைக்கப் பட்டிருந்தது.

அந்த ஒரு அறை வசிப் பிடத்தில் இருந்து கஸ்தூர் பாய் அவருடைய தோழியோடு விரைவாக வெளியேறிய போது, கத்தி வைத் திருந்த ரம்ஸான் பேயின் குழந்தை களால் தன்னுடைய மகன் விரட்டப் படுவததை பார்த்தார்.

உடனே, தன்னுடைய மருமகளை மறைத்து வைத் திருந்த வெறுமை யாக இருந்த பள்ளிக்கு கஸ்தூர்பாய் விரைந்தார். 

பானுவின் தாய் விடுத் திருந்த மிரட்டல் நிஜமாகிப் போனதை கஸ்துர்பாய் அப்போது தான் உணர்ந்தார். 

என்னுடைய கழுத்தை பிடித்த அவர்கள், எனது மருமகளை பள்ளிக்கு வெளியே கொண்டு சென்று இந்த கற்களால் அவரது வயிற்றில் கடுமையாக தாக்கினர் என்று பிபிசியிடம் கஸ்தூர்பாய் தெரிவித்தார்.
இந்த சிறிய பள்ளிக்கு அடுத்தாக வீடு ஒன்று கட்டுவ தற்காக இந்த கற்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. 

ஒவ்வொரு கல் பாளமும், இந்த கிராமத்தில் கட்டப்படும் வீடுகளுக்கு சுவர் எழுப்பு வதற்கான 3 அங்குலம் தடிமனும், 2 அடியும் கொண்ட வையாக இருந்தன. 

கத்தியுடன் வந்த பானுவின் சகோ தரர்கள் மற்றும் மைத் துனரால் துரத்தப் பட்ட சயாபாணா, தன்னுடைய மனைவியை காப்பாற்ற விரைந்தார். ஆனால், அவர் மீதும் தீ வைக்க பானுவின் குடும்பத்தினர் முயல் வதை உணர்ந்தார். 

கர்ப்பமாக இருந்த என்னுடைய மனைவியின் இறப்புக்கு பழிக்குப் பழி வாங்கு வதற்காக நான் வாழ வேண்டும் என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன் என்று சயாபாணா தெரிவித்தார்.

ரம்ஸான் பேயின் மருமகனும், பிற குழந்தை களும் இந்த கிராமத்தி ற்குள் வந்த வுடனேயே ஏதோ நடைபெறப் போகிறது என்று கஸ்தூர் பாயும் சயா பாணாவும் சந்தேகப் பட்டிருக்க வேண்டும்.

கத்தியை வைத்து கொண்டு அந்த குடும்பத்தினர் சயா பாணாவை விரட்ட தொடங்கியது வரை இவ்வாறு நடக்கும் என்று முன்னரே கணிக்க அவர்கள் தவறி விட்டனர். 

அக்கம் பக்கத்தில் உள்ளோர் இந்த விவகார த்தில் தலையிடக் கூடாது என்றும் அவர்கள் மிரட்டினர்.

திட்ட மிட்ட கொலை
ரம்ஸான்பே (பானுவின் தாய்), சால்மா (சகோதரி), அக்பர் (சகோதரர்) மற்றும் ஜீலானி (மைத்துனர்) அனை வரையும் காவல் துறை கைது செய்துள்ளது. பானுவுக்கு 5 சகோதரிகளும், 4 சகோதரர் களும் உள்ளனர். 

கைதாகி போலீஸ் காவலில் ஏற்கெனவே இருப்பவர் உள்பட அவர் களின் பக்க நிலையை விளக்கு வதற்கு யாரும் இல்லாத நிலைமையே உள்ளது.
இது முன்னரே திட்டமிடப் பட்டு நடத்தப்பட கொலை என்பது தெளிவாக தெரிகிறது" என்று விஜயபுரம் போலீஸ் கண் காணிப்பாளர் குல்தீப் குமார் ஆர்.ஜெயின் தெரிவித் துள்ளார். 

ரம்சான் பேயும், கஸ்தூர் பாயும் அண்டை வீட்டார் தான். மூன்று வீடுகள் தள்ளி அவர்கள் வசிக்கின்றனர். குழந்தைப் பருவத்தில் இருந்தே, பானுவும், என்னுடைய மகனும் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள். 

அவன் வளர்ந்த போது, அவள் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், மிகவும் நெருக்க மாக பழக வேண்டாம் என்று அவனிடம் எச்சரி த்தேன். 

எங்க ளுடைய சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கூட அவனுக் காக பார்த்து வைத்தி ருந்தேன். ஆனால், பானுவை மட்டுமே திருமணம் செய்வேன் என்று அவன் கூறி விட்டான் என்கிறார் கஸ்தூர் பாய். 

பானுவை அவருடைய தாய் அடித்து நொறுக்க தொடங் கியதும், சரக்கு வாகன ஓட்டுநராக பணி புரிந்து வந்த சயா பாணாவும், பானுவும் வீட்டை விட்டு வெளி யேறி கோவா சென்றனர். அங்கேயே திருணம் செய்து கொண்டனர்.

இரண்டு ஆண்டு களுக்கு பிறகு கடந்த மே மாதம் அவர்கள் வீடு திரும்ப முடிவு செய்த போது, கிராமத்தில் வரவேற்கப் படுவர் என்று எண்ணினர். 

திரும்பி வந்த தம்பதியை ஏற்று கொண்ட பையனின் குடும்பத் தார் பதிவு திருமண த்தையும் நடத்தி வைத்தனர்.
மகளை எரித்துக் கொன்ற தாய் !
பெண்ணின் குடும்பமோ எதிர் மறையாக இதனை எடுத்துக் கொண்டது. பானுவை அவர்கள் தொடர்ந்து மிரட்டி வந்ததாக, சயாபாணா கூறி யுள்ளார்.

தடுக்க யாரு மில்லை

எங்களுடைய அக்கம் பக்கத்தார் யாரும், என்னுடைய சமூகத் தினரோ அல்லது அவர்களின் சமூகத் தினரோ பானு கொல்லப் படுவதை தடுக்க வரவில்லை என்கிறார் கஸ்தூர்பாய். 

ரம்ஸான் பேயின் குழந்தைகள் ஆயுதத்தை காட்டி மிரட்டிய பிறகு அண்டை வீட்டார் இன்னும் வீடு திரும்ப வில்லை என்பது தான் உண்மை. குன்டாகாலா கிராமம் பிற கிராமங்களை விட வேறுபட்ட ஒன்றாகும். 

பொதுவாக எல்லா இடங்களிலும் இருப்பதை போல, கிராமத்திற்கு வெளியே தலித்துகளுக்கு என்று தனியான காலனி என்று ஒன்றும் இந்த கிராமத்தில் கிடையாது. 

உயர் சாதி குழு ரொட்டிகள், தலித்துகள் மற்றும் முஸ்லி ம்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் அடுத்தடுத்து வாழ்ந்து வருகின்றனர்.

குடும்ப பிரச்சனை, சமூக பிரச்சனை யல்ல
இது சமூகங் களோடு தொடர்புடைய விடயமல்ல. இது இரு குடும்பங் களுக்கு இடையில் நடப்பது. 

ஒரு குடும்பம் தலித், இன்னொரு குடும்பம் முஸ்லிம் என்பதில் என்ன இருக்கிறது என்று பருப்பு, சோளம் மற்றும் பருத்தி விளையும் ஒரு கிராமத் தின் விவசா யியான ஷான்தான கௌடா கூறியுள்ளார்.

இருவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அவர்க ளுடைய தனிப் பட்ட விடயத்தில் நாங்கள் எதுவும் சொல்வதற் கில்லை. தலித்துக் களோ, எங்களுடைய சமூகமோ அங்கு செல்ல வில்லை. 

காரணம் இது இரண்டு குடும்பங் களுக்கு இடையில் நடப்பது. இந்த சம்பவம் இரு சமூகங் களுக்கு இடையில் காணப்படும் சமூக உறவுகளை பாதிக்க போவ தில்லை" என்று கூலித் தொழிலாளி சையத் தெரிவித்தார்.

பெருக் கெடுத்து வந்த கண்ணீரை எப்போதும் கட்டுப் படுத்தி கொண்டி ருந்த கஸ்தூர் பாய். நாங்கள் ஏழைகள். அதனால் எங்களுக்கு இது நடந் துள்ளது. 

பணக்காரர்கள் அவர்களை சுற்றியிருக்கும் மக்களிடம் இருந்து சிறிது உதவியை பெற்றிருப் பார்கள். துரதிஷ்ட வசமாக நாங்கள் இழந்த வர்கள் ஆகி விட்டோம் என்கிறார்.
இந்த கிராமத் தில் தலித்து களுக்கும், முஸ்லிம் களுக்கும் இடை யிலான திருமணப் பந்தம் நிகழவேயில்லை என்றில்லை. என்னுடைய உறவினர் என்னுடைய மனைவி யின் மூத்த சகோத ரியை திருமணம் செய்தார். 

அவர்கள் சோர்பூரில் (கால்புராஜி மாவட்டம்) வாழ்கின்றனர்.  அவர் ஒழுங்காக தொழுகை செய்கிறார். நாங்கள் பதிவு திருணம் செய்து கொண்ட தால் பானுவுக்கு இந்த நிலைமை ஏற்பட்டு விட்டது என்கிறார் சயாபாணா. 

ஆம், இந்த கிராமத்திற்கு வந்ததை எண்ணி வருந்துகிறேன் என்கிறார் சனாபாணா.
Tags:
Privacy and cookie settings