வயிறு உப்பி கொள்கிறதா? இதோ தீர்வு !

பெரும்பாலானோர் சந்திக்கும் ஓரு பொதுவான பிரச்சனை தான் வயிற்று உப்பிசம். ஜங்க் உணவுகள் அல்லது ஒரே நேரத்தில் வயிறு நிறைய உணவுகளை சாப்பிடுவதால் செரிமானம் அடையாமல், இந்த வயிற்று உப்பிசம் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
வயிறு உப்பி கொள்கிறதா? இதோ தீர்வு !
வயிற்று உப்பிசத்தை தடுப்பது எப்படி?

உணவு சாப்பிடும் போது அதை நன்கு மென்று மெதுவாக விழுங்க வேண்டும். ஏனெனில் இதனால் காற்று வயிற்றில் நுழைந்து அடைத்துக் கொள்வதை தடுத்து, உணவை எளிதில் செரிமானம் அடையச் செய்யும்.

வயிறு ஒரு விதமான அசௌகரியத்தை ஏற்படுத் தினால், உடனே ஒரு டம்ளர் சுடு நீரைக் குடிக்க வேண்டும். இதனால் வயிற்று உப்புசம் உடனே நீங்கி விடும்.

தினமும் தயிரை உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள புரோபயோடிக்ஸ் என்னும் நல்ல பாக்டீரியா, வயிற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதிலும் தயிரில் வெள்ளரிக்காய், கொத்த மல்லி சேர்த்து சாப்பிட்டால், வயிறு உப்புசம் உடனே குணமாகும்.
உணவு சாப்பிட்டதும் அடிக்கடி வயிறு உப்பு சத்துடன் இருந்தால், உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். ஏனெனில் உப்பானது வயிற்றில் தேவையில்லாத வாயுக்களை உருவாக்கும்.

ஒவ்வொரு முறை உணவு சாப்பிடும் போதும் 1/2 மணி நேரத் திற்கு முன் சிறிது இஞ்சியை வாயில் போட்டு மென்று அதன் சாற்றினை விழுங்க வேண்டும். இதனால் வயிற்று உப்பு சத்தை உடனே தடுக்க லாம்.
Tags:
Privacy and cookie settings