என் பெயர் பாகுபலி.... கேரளச் சிறுவன் !

தன் பெயர் ஸ்டைலிஷா... கேட்சியா இருக்க வேண்டும் என்பது இளைய தலை முறையின் ஆசைகளில் ஒன்று. 
என் பெயர் பாகுபலி.... கேரளச் சிறுவன் !
`குப்பம்மா', `சுப்பம்மா' எனப் பெயர் இருந்தால், வளர்ந்ததும் 'பெயர் வெச்சிருக் காங்க பாரு... பெயர்னு' எனப் பெற்றோரிடம் சண்டை போடுவர்.

'டேய்... அது நம்ம குலதெய்வப் பேருடா... பழிக்காதே' னு நம்மைச் சமாதானப் படுத்துவார் கள். 

பிறகு, நாமே ஸ்டைலாக ஒரு பெயரைத் தேர்தெடுத்து வைத்துக் கொண்டு, நண்பர் களை அந்தப் பெயரிட்டே அழைக்கச் சொல்வோம். 

அவர்களோ, பெயருக்கு புனைபெயரைப் பயன் படுத்தினாலும் சில சமயங் களில் ஒரிஜினல் பெயரைச் சொல்லி நம்மை ஓட்டு வார்கள்; 

'உன்னோட பேரு இது தானே... ஊரை ஏமாத்திட்டுத் திரியுறியா?' என்று மானத்தை அடுத்த நாட்டுக்கே கப்பல் ஏற்றுவார்கள்.

பாகுபலி பெயர் கொண்ட சிறுவன் ‘பாகுபலி' படம், பிரபாஸுக்கு மட்டும் புகழைத் தந்து விட வில்லை; கேரளாவைச் சேர்ந்த ஒரு சிறுவனு க்கும் மிகப் பெரிய குஷியைக் கொடுத் துள்ளது. 

ஆம், 'பாகுபலி' என்ற பெயர் கொண்ட ஒரு சிறுவன், இது நாள் வரை பள்ளி நண்பர் களால் கேலிக் குள்ளானான். 
கால மாற்றத் தால், இப்போது 'நான் தான் பாகுபலி' எனப் பெரு மிதத்துடன் உலா வருகிறான். 

`உன் பெயர் என்ன?' என்று கேட்காத போது கூட, 'ஹலோ... மை நேம் இஸ் `பாகுபலி'' என்று அவனே தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறா னாம்.

இந்தப் படம் வெளியாகும் வரை, இது போன்ற பெயரை நாம் கேள்விட் டிருக்கவே மாட்டோம். இந்தியா வில் பரவலாக அறியப்பட்ட பெயரும் அல்ல. 'பாகுபலி' என்றால், 'தோள் வலிமை மிக்கவன்' என அர்த்தம்.

கேரள மாநிலம் கொச்சியில் பெற்றோ ருடன் வசித்து வரும் ஜூனியர் பாகுபலி, இரு வருடங் களுக்கு முன்பு வரை பெற்றோ ருடன் தினமும் சண்டையி டுவானாம்.

'இது என்ன பெயர்?', 'யார்கிட்ட கேட்டுட்டு இந்தப் பெயரை எனக்கு வெச்சிங்க?' என்று ஒரே புலம்பல். பெற்றோரும் அவனை இத்தனை காலமாகச் சமதானப் படுத்தி வந்தனர். 

காலம் மாறியது. `பாகுபலி' முதல் பாகம் வந்த பிறகு தான், பெற்றோருடன் சண்டை யிடுவதை நிறுத்தி யுள்ளான் அந்தச் சிறுவன். 
இரண்டாம் பாகம் வந்து சக்கைப் போடு போட, பள்ளியே இவனுடைய சாம்ராஜ்ய மாகி விட்டது. பள்ளித் தோழர்கள் இவனைப் பார்க்கும் போதெல் லாம் `ஜெய் பாகுபலி..!' என்று சொல்கிறார் களாம்.

கொச்சியைச் சேர்ந்த கே.எம். ஜெயராஜ்- சாரபாய் தம்பதியின் மகன் இந்த ஜூனியர் பாகுபலி. தற்போது ஒன்பது வயதாகும் இவன், ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்தப் பெயரை எப்படி செலெக்ட் செய்தீர்கள்? - என தந்தை ஜெயராஜிடம் கேட்ட போது...

என்னோட மூத்த மகனுக்கு `விஸ்வா மித்ரா' னு பெயர் வெச்சேன். இளை யவன் பிறந்தப்போ அவனுக்கும் வித்தி யாசமான பெயர் வெக்கணும்னு ஆசைப் பட்டுத் தேடினேன். 

ஜைன மதத்தில் தான் `பாகுபலி' ங்கிற பெயரைப் பார்த்தேன். வித்தி யாசமா இருந்துச்சு; பார்த்ததும் பிடிச்சுப் போச்சு. `பாகுபலி'னு பெயர் வைக்க, வீட்டில் கடும் எதிர்ப்பு. 

அதை யெல்லாம் சமாளிச்சு தான் இளைய வனுக்கு இந்தப் பெயரை வெச்சேன். பாகுபலி வளர்ந்த பிறகு, எங்கிட்ட பல முறை `என்ன பெயர் இது?'னு சண்டை போட்டிருக்கான். இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கான். 

முதல் பாகம் வந்தபோதே, `பாகுபலி'னு பையனு க்கு எப்படி பெயர் வெச்சிங்க?' னு நிறைய பேர் கேட்டாங்க. பதில் சொல்ல மாளல'' என்று சிரிக் கிறார்.
''முதல்ல இந்தப் பேரு எனக்கும் பிடிக்க வேயில்லை.ஃப்ரெண்ட்ஸ் கிட்ட `'பாகு' னுதான் கூப்பிடணும்' னு சொல்வேன். என்னை இப்போ பார்த்தா, `ஜெய் பாகுபலி..!' - ங்கிறாங்க. 

எங்க அப்பா எனக்கு சூப்பர் நேம் செலெக்ட் பண்ணி வெச்சிருக்கார்'' என சந்தோஷத்தில் திளைக்கும், ஜூனியர் பாகுபலி யின் ஆசை என்ன தெரியுமா? சீனியர் பிரபாஸை மீட் பண்ண வேண்டுமாம்!
Tags:
Privacy and cookie settings