துபாய் வேலைக்கு இண்டர்விவ் செய்த ரோபோ !

துபாயில் போலீஸ் பணிக்கு விண்ணப் பித்தவர்களிடம் ரோபோ ஒன்று நேர்முகத் தேர்வு நடத்தியுள்ளது. சர்வதேச அளவில் நவீன கண்டு பிடிப்புகளை அறிமுகப் படுத்துவதில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் துபாயும் ஒன்று.
துபாய் வேலைக்கு இண்டர்விவ் செய்த ரோபோ !
இந்த நிலையில், நேர் முகத் தேர்வில் கேள்விகளைக் கேட்கும் ரோபோ அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.

போலீஸ் பணிக்கு விண்ணப் பித்தவர் களுக்கான நேர்முகத் தேர்வு துபாய் உலக வர்த்தக மையத்தில் நடை பெற்றது. இதில் முதற்கட்ட நேர்முகத் தேர்வை போலீஸார் சார்பில் ரோபோ மேற்கொண்டது.

சயில் அல் பர்ஹான் என இந்த போலீஸ் ஸ்மார்ட் ரோபோவிற்கு பெயரிடப் பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் துபாய் போலீஸ் துறையில் 25 சதவீதம் ரோபோக் களைப் பயன்படுத்த திட்ட மிடப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings