பிரெஸ்ட் கேன்சரை கண்டறிய நவீன பிரா !

மனித உடலை 250 வகையான புற்று நோய்கள் தாக்குவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனித உடல் திசுக்களில் ஏற்படும் அசாதாரண தன்மையும், முறையற்ற வளர்ச்சியுமே புற்று நோய் எனப்படுகிறது.

உலகில், வருடத்திற்கு ஒரு கோடி பேர் புற்று நோயால் மரண மடைகிறார்கள். இந்தியாவில் 25 லட்சத்திற்கு அதிகமான புற்று நோயாளிகள் உள்ளனர். 

ஒவ்வொரு வருடமும் எட்டு லட்சம் பேர் கூடுதலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். புற்று நோய் எதனால் ஏற்படுகிறது என்பது இது வரை முழுமை யாக கண்டு பிடிக்கப்பட வில்லை. 

ஆனால் புற்றுநோய் வருவதற்கான சூழ்நிலை களை அதிகரிக்கும் அநேக காரணங்கள் அடையாளங் காணப்பட்டு விட்டன. அறிகுறிகளும் முழுமை யாக உணரப்பட்டு விட்டன. 

அதனால் தொடக்க நிலையிலே கண்டறிந்தால் பெரும் பாலான புற்று நோய்களை வென்று நீண்ட காலம் வாழலாம். மார்பக புற்று நோயை பொறுத்த வரையில் அது பெருகி, பெண்களை மிரட்டத் தான் செய்கிறது. 

ஆனாலும் சத்த மில்லாமல் கொல்ல முயற்சி க்கும் இந்த நோயை பெண்களால் எளிதாக தவிர்க்கவும், தடுக்கவும் முடியும்.

இந்நிலை யில் மெக்ஸிகோவில் உள்ள டீன் ஏஜ் இளைஞர் ஒருவர், மார்பக புற்று நோயை கண்டறியும் பிராவை கண்டு பிடித்துள்ளார். 

ஆனால் இது உண்மையில் வேலை செய்யுமா என்பது இன்னும் கேள்விக் குறியாக இருக்கிறது.

ஆனால் பிராவை உருவாக்கியுள்ள 18 வயதுடைய ஜூலியன் ரியோஸ் கன்டு, மார்பகப் புற்று நோயின் அறி குறிகளைக் கண்டறியும் ஆரம்ப கால எச்சரிக்கை அமைப்பு முறையாக இது இருக்கும் என்கிறார். 

ஜூலியன் மற்றும் அவருடைய மூன்று நண்பர்கள் இணைந்து கூட்டாக நிறுவனம் ஒன்றை உருவாக் கினார்கள். 

அந்நிறுவன த்தின் தயாரிப்பு தான் ஈவா பிரா. தற்போது, முன்மாதிரி சோதனை நிலையில் உள்ளது. அதே சமயம், பிராவை சோதிப்பதற்கு போதுமான நிதியை ஜூலியன் குழுவினர் திரட்டியுள்ளனர்.

மேலும், இந்த வாரம் நடைபெற்ற சர்வதேச மாணவ தொழில் முனைவர் விருதுகள் நிகழ்வில் முதல் பரிசை இவர்கள் வென் றுள்ளனர். 

அதிலும் உலகம் முழுவதும் வந்திருந்த இளம் தொழில் முனைவர் களை ஜூலியன் குழுவினரின் நிறுவன மான ஹிகியா டெக்னாலாஜிஸ் முந்தி , இந்த யோசனையை அமல்படுத்த 20,000 டாலர்கள் வென்றுள்ளது என்பது குறிப்பிட த்தக்கது.

அது சரி புற்று நோயை கண்டறியும் இந்த பிரா எவ்வாறு வேலை செய்கிறது ?

அதிகரித்த ரத்த ஓட்டம் காரணமாக புற்று நோய் கட்டிகள் தோலை வேறு ஓர் வெப்ப நிலைக்கு கொண்டு செல்கின்றன. ஈவா பிராவில் உள்ள பயோ சென்சார்கள் வெப்ப நிலைகளை அளவீடு செய்வது மட்டுமின்றி, 

செயலிக்குள் அதனை பதிவு செய்து மாற்றங்கள் இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பயன் பாட்டாளரை அது எச்சரிக்கிறது. 

இந்த பிராவை அணியும் பெண்கள் துல்லிய மான முடிவுகளை பெற ஒரு வாரத்திற்கு சுமார் 60 முதல் 90 நிமிடங்கள் வரை இதனை அணிய வேண்டு மாம்.

புற்று நோயை கண்டறியும் இந்த பிரா உண்மையில் வேலை செய்யுமா?

இந்த பிரா இன்னும் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. இன்னும் முழுமை யாக சோதிக்கப் படவில்லை. 

மேலும், புற்று நோயை இந்த பிரவால் கண்டறிய முடியும் என்று புற்று நோய் வல்லுநர்கள் இதனை பரிந்துரை செய்வதற்கு முன் மருத்துவ ரீதியிலான பரிசோதனை கள் மேற் கொள்ளப்பட வேண்டும்.

பிபிசியிடம் பேசிய பிரிட்டனில் உள்ள புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த அன்னா பெர்மன், அதிகரித்த ரத்த ஓட்டத்தை வைத்து புற்று நோயை கண்டு பிடித்து விடலாம் என்பது நம்பகமான அறிகுறி அல்ல என்று கூறியுள்ளார்.

அதே சமயம், இந்த பிராவின் மூலம் கட்டிகளை கண்டறிவது நம்பகமான வழி என்பதற்கான ஆதாரங்கள் எதுவு மில்லை. 

நல்ல தரமான விஞ்ஞான சோதனை களில் உட்படுத்தப் படாத ஓர் தொழில்நுட்பத்தை பெண்கள் பயன் படுத்துவது என்பது நல்ல யோசனை அல்ல என்றார் அவர்.

இதனிடையே மார்பக புற்றுநோயை தற்போது கண்டறிவதற்கான வழி முறைகள் என்னென்ன ?

ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி அவரவர்கள் தத்தம் உடல்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள் :

மார்பு அல்லது அக்குள் பகுதிகள் கட்டிகள்

மார்பகத்தின் அளவு, வடிவம் அல்லது உணர்வில் ஓர் மாற்றம்

மார்பகத்தின் முலைக் காம்பு பகுதியில் திரவம் வடிதல் (தாய்ப்பால் அல்ல )

மார்பில் வலி ஏற்படுதல்

ஜூலியன் எதற்காக இந்த பிராவைக் கண்டுப்பிடித்தார் ?

இந்த திட்டத்தை கையில் எடுக்க ஜூலியனு க்கு ஓர் தனிப்பட்ட காரணம் இருந்தது. 

அவருக்கு 13 வயதான போது, மார்பகப் புற்று நோயினால் பாதிக்கப் பட்ட அவரது தாய் ஆரம்ப கட்டத்தில் கண்டறியப் படாததால் ஏறக்குறைய இறக்கும் நிலைக்கே வந்து விட்டார். 
பிரெஸ்ட் கேன்சரை கண்டறிய நவீன பிரா !

அவரிடம் கண்டறியப் பட்ட கட்டிகள் புற்றுநோயை வரவழை க்கும் தன்மை யற்றது என்று மருத்துவர் கூறியி ருந்தார். ஆனால் அவர் தவறாக கூறி விட்டார். 

ஆறு மாதங்கள் கழித்து, இரண்டாவது முறையாக மாமோகிராபி என்ற மார்பக புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை மேற்கொள்ளப் பட்ட போது அவை புற்றுநோய் கட்டிகளாக மாறி யிருந்தன. 

பின்னர் இறுதியில் அவருடைய இரு மார்பகங் களும் அகற்றப் பட்டன. இதை நேரில் பார்த்து பாதித்ததன் விளைவு தான் இந்த பிராவாம்!
Tags:
Privacy and cookie settings