82 வயதில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முன்னாள் முதல்வர் !

ஹரியானா மாநிலம் முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சௌதாலா, தனது 82 வது வயதில் சிறையில் இருந்தவாரே 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
82 வயதில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முன்னாள் முதல்வர் !
இந்திய தேசிய லோக்தல் கட்சியின் தலைவரான அவர் முதலமைச்சராக இருந்த போது ஆசிரியர் நியமனத்தில் ஊழல் செய்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, தற்போது திகார் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.

82 வயதான அவர், அங்கிருந்தவாரே 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார். அன்மையில் வெளியான தேர்வு முடிவின் படி, 

ஓம் பிரகாஷ் சௌதாலா முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தாக அவரது இளைய மகன் அபய் சௌதாலா தெரிவித் துள்ளார். 

12-ம் வகுப்பை தொடர்ந்து அவர் பட்டப் படிப்பையும் சிறையில் இருந்த வாரே தொடர இருப்பதாக அபய் சௌதாலா கூறி யுள்ளார்.
Tags:
Privacy and cookie settings