மருமகனால் நிம்மதி இழந்த ரஜினி !

ரஜினி குடும்பத் திற்கும், தனுஷ் குடும்பத் திற்கும் இது போதாத காலம். இது வரை இருந்த பெயர் கெட்டு தலை குனிந்து நிற்கிறது இரு குடும்பங் களும்.!

மருமகனால் நிம்மதி இழந்த ரஜினி !
சுசித்ரா இன்னும் பல வலுவான வீடியோ ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டு தான் இந்த அளவிற்கு ஆக்ரோஷ மாக களம் இறங்கி யுள்ளார் என்று கோடம் பாக்கம் நம்புகிறது.

இன்னொரு தரப்பு, மலேசிய திருட்டு வி சி டி நிறுவனம் தான் மொத்த ஆதாரங் களையும் வைத்துக் கொண்டு சுசியை களம் இறக்கி யுள்ளது என்றும் கூறுகி றார்கள்.

இந்த நிலையில் தனுஷின் அக்கா ஒரு டாக்டர். அவர் கடும் மன உளைச் சலுக்கும் ஏச்சு பேச்சுகளு க்கும் ஆளாகி தலை குனிந்து நிக்கிறார்.

நேற்று தற்காலிக மாக தனது பேஸ்புக் மற்றும் டிவிட்டர் கணக்குகளை டி- ஆக்டிவேட் செய்வதாக தனுஷின் சகோதரியும், மருத்துவ ருமான விமல கீதா தெரிவித் துள்ளார்.

இது குறித்து அவரது சமூக வலைத் தள பக்கத்தில் கூறப் பட்டுள்ள தாவது:
“கடந்த சில மாதங் களாக எங்கள் குடும்பத் திற்கு ஏற்பட்டி ருக்கும் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக, நாங்கள் மிகவும் மனம் நொந்து போயுள்ளோம்.

இருப்பினும் நாங்கள் அமைதி காத்து வருகிறோம். மிகவும் ஏழ்மை யான குடும்பத்தி லிருந்து வந்த நாங்கள், கடும் உழைப்பின் காரணமாகத் தான் உயர்ந்த நிலைமை க்கு வந்துள்ளோம்.

தேனியின் குக்கிராமம் ஒன்றி லிருந்து வந்து,ஒரே இரவில் நாங்கள் பெரிய ஆட்கள் ஆகி விட வில்லை. என்னுடைய சகோதரன் தனுஷ், 

இது போன்ற எத்தனையோ அவ தூறுகளை சந்தித்து தான் இந்த நிலைமை க்கு வந்துள்ளான்.

மிகப்பெரிய வலியுடனும், மன வருத்தத் துடனும் என்னுடைய பேஸ்புக் மற்றும் டிவிட்டர் கணக்கு களை தற் காலிகமாக மூடுகிறேன்.
யார் இந்த காரியங் களையெல்லாம் செய்கிறா ர்களோ அவர்கள் எல்லாம் இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். வாழுங்கள், வாழ விடுங்கள்.”என விமல கீதா கண்ணீரோடு பதிவிட் டுள்ளார்.

ரஜினி மனநிலையும் அப்படித் தான் இருக்க வேண்டும் என்கிறார்கள். மூத்தமகள் ஐஸ்வர்யா அமெரிக்கா வில் டான்ஸ் ஆடிக் கொண்டி ருக்கிறார். வீடு தங்குவதே இல்லை. எப்போதும் ஊர் சுற்றுகிறார்.

இளைய மகள் விவகாரத்து, குடி கும்மாளம் ஆட்டம், பாட்டம், விபத்து, தனுஷுடன் கிசுகிசு என்று சமீப காலமாக பெயர் கெட்டு, குட்டிச்சுவர் ஆகி விட்டது.

பொது மக்களும் ரஜினிக்கு தமிழர்கள் மேல் எந்த அக்கறையும் கிடையாது என்று கூறி இணையங் களில் கடும் குற்றச் சாட்டு வைக்கின்றனர்.

மனைவி நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில் நிறைய முறை கேடுகள் என்கிற செய்திகளும் பரவிய படி இருக்கிறது.
இன்னொருபுறம் தனது உடல் நிலை, மருமகன் தனுஷ் மீது வரும் அடுக்கடுக் கான பாலியம் குற்ற சாட்டுகள்.

இப்படி முற்றிலும் மன நிம்மதி இழந்தே இருக்கிறார் என்கிறார்கள் கோடம் பாக்கவாசிகள். இது குறித்து சமூக வலைத் தளங்களில் சிலர் கூறும் கருது பகீர் ரகம்.

அதாவது நாற்பது ஆண்டுகள் ரஜினியை மட்டுமே நம்பி.. வாழ்கையை இழந்து, பணம் பொருள் இழந்து கடும் விரக்தி அடைந்த ரசிகர்களின் சாபமே ரஜினி குடும்பத்தை படாதபாடு படுத்துகிறது என்கிறார்கள்.

மக்களின் சாபம் நிறைய இழப்பு களைக் கொடுக்கும் என்று பீதியை கிளப்பு கிறார்கள்.
Tags:
Privacy and cookie settings