McAfee யால் தொலைந்த போனை கண்டுபிடித்த பொலீஸார் !

கைத்தொலைபேசி என்பது மிக எளிய முறையில் திருட்டு போகும் ஒரு பொருள். நமது உடைகளில் உள்ள பைகளில் இருந்தோ அல்லது 
McAfee யால் தொலைந்த போனை கண்டுபிடித்த பொலீஸார் !
கைப்பை யில் இருந்தோ கைதேர்ந்த திருடர்களுக்கு கைத் தொலை பேசியை திருடுவது என்பது எளிதான விஷய மாக உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் திருட்டு போன கைத் தொலை பேசியை கண்டு பிடிப்பது என்பதும் சாதாரண விஷயம் இல்லை. 

திருடப் பட்ட கைத் தொலைபேசி உடனடி யாக சுவிட்ச் ஆப் செய்யப் பட்டு பின்னர் அதன் பாகங்கள் தனித் தனியாக பிரிக்கப் பட்டால் அந்த கைத் தொலைபேசியை உரியவர் மறந்து விட வேண்டியது தான்.
ஆனால் சென்னை வாலிபர் ஒருவரின் தொலைந்த கைத்தொலை பேசியை ஒருசில மணி நேரங்களில் கண்டு பிடித்து சென்னை போலீஸ் சாதனை செய்துள்ளது. 

சென்னையை சேர்ந்த சுனைஸ் ரெஹ்மான் என்ற 20வயது வாலிபர் ஒருவர் சமீபத்தில் தனது கைத்தொலை பேசியை தொலைத்து விட்டார்.

ஆனால் அதற்காக அவர் சிறிதுகூட கவலைப் படவில்லை. அவருடைய மொபைல் போனில் McAfee security என்ற செயலியை அவர் இன்ஸ்டால் செய்திருந்தார்.

இந்த செயலி, போனை மூன்று முறைக்கு மேல் தவறான பேட்டர்ன் (pattern) ஐ பயன் படுத்தினால் உடனடியாக செல்பி எடுத்து போனுக்குரிய வருக்கு இமெயில் அனுப்பி விடும். 

அது மட்டு மின்றி போன் இருக்கும் இடத்தையும் நேரத்தையும் தெரிவித்து விடும். 

இது போல் போனில் இருந்து வந்த இமெயிலை பிரிண்ட் எடுத்து வாலிபர் ரெஹ்மான் உடனடி யாக காவல் துறையில் புகார் அளித் துள்ளார்.
இமெயிலில் வந்த புகைப்படம், அதில் இருந்த நேரம், இடம் ஆகிய வற்றை வைத்து சைபர் க்ரைம் காவல் துறையின் உதவி யால் போலீசார் ஒருசில மணி நேரத்தில் திருடனை பிடித்து விட்டனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய கார்கள்
இது குறித்து ரெஹ்மான் கூறிய போது McAfee security என்ற செக்யூரிட்டி செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இன்ஸ்டால் செய்து கொண்டால்  

அனைவரும் இதே போன்று தங்கள் மொபைல் திருட்டு போனால் எளிதில் மீட்டு விடலாம் என்று தெரிவித்தார்.
Tags: