ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள் பறிமுதல் செய்யபடும்.. என்னைய உங்கள் சட்டம் !

எப்படிப்பட்ட கேப்மாரித்தனம் / மொள்ள மாரித்தனம். ஹெல்மெட் அணியா விட்டால் ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யபடுமாம்.

ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள் பறிமுதல் செய்யபடும்.. என்னைய உங்கள் சட்டம் !

ஊழல் செய்து சிக்கிய மந்திரிகளின் சொத்துக்களை/ ஆவணங்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள். பல மாடி கட்டிடங்கள் இடிந்து பல பேர் பலியா கினாலும் கட்டுவதற்கு உரிமம் கொடுத்த அதிகாரிகளின் ஆவணங்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள்.

தவறான மருத்து வத்தால் பல பேர் பலியாகியும் மருத்துவம் கொடுத்த  மருத்து வர்களின் சான்றிதழ்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள். ஆற்று மணலை கொள்ளை யடிப்பதற்கு உடந்தையாக செயல்படும் வருவாய்த் துறை அதிகாரிகளின் பதவிகளை பிடுங்க மாட்டார்கள்.

மலைகளே காணாமல் போகும் அளவிற்கு கணிமவள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரி களின் சான்றிதழ் களை பறிமுதல்  செய்ய மாட்டார்கள். மறந்து வீட்டில் விட்டு விட்டு போய் விடும் ஹெல்மெட்டு க்காக உங்கள் இருசக்கர வாகனத்தின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப் படுமாம்.

ஹெல்மட் விஷயத்தில் கடுமையாக நெருக்கடி கொடுக்கும் நீதியரசர்களே  காவல் துறையினரே! உங்களிடம் சாமானிய மக்களில் ஒருவனாக சில கேள்விகள் கேட்க ஆசைப் படுகிறேன்!

ஹெல்மெட் அணியாமல் வந்த கிட்டத்தட்ட 1,40,000 பேர் வரை வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் அலைய வைத்துக் கொண்டு இருக்கிறீர்களே.

புகை பிடித்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் அதில் கருகிய நுரையீரல் படத்தை மட்டும் போட்டு விட்டு விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது சரியா.

குடிப்பழக்கம் உயிருக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று அச்சிட்டு விட்டு அதை அரசாங்கமே விற்பனை செய்வது நியாயமா.

நீங்கள் தீர்த்து வைக்க வேண்டிய கோடிக் கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் இந்த வழக்குகள் அவசியம் தானா.

தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் தரமானதாக உள்ளது என்று உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா.

நீதிபதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பத்து நாட்களுக்கு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் வலம் வந்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி காட்டமுடியுமா.

ஹெல்மெட் என்பது அவசியம் தான் இல்லையென்று மறுக்க முடியாது. அது நெடுந்தூர பயணங்களில் நெடுஞ்சாலையில் செல்பவர் களுக்கு பொருந்தும்.

20 - 30 கி.மீ வேகத்தில் செல்லும் நகரவாசிகளை ஏதோ குற்றவாளிகளை பிடிப்பது போல் விரட்டி விரட்டி பிடிப்பது தான் உங்களுடைய விருப்பமா.

சமீபத்தில் ஹெல்மட் அணியாத ஒருத்தரை ஒரு காவலர் விரட்டி அந்த இருசக்கர ஓட்டுநர் விபத்தில் சிக்கி பலியானார்.

இந்த சட்டம் அமலுக்கு வந்த பின் இதுவரை ஹெல்மெட் அணிந்தும் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்களே அதற்கு என்ன விளக்கம் தரப் போகிறீர்கள்.

சாலை விதிமுறை களை பற்றிய தகவல்களை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கட்டாய பாடமாக கொண்டு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே...

ஹெல்மெட்_அணிவதால். சிலருக்கு வியர்வை, அலர்ஜி, தலைவலி, முடி கொட்டுதல், தலையில் புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி செய்யும் சமூக விரோதி களுக்கு சாதகமாக அமைகிறது.

ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை மட்டும் வலியுறுத்தி விட்டு போகலாமே. இப்பொழுது சொல்லுங்கள் ஹெல்மெட் அணிவதை நீங்கள் கட்டாயப் படுத்துவது எந்த வகையில் நியாயம்.

இந்த பதிவை ஏற்றுக் கொள்பவர்கள் முடிந்த அளவுக்கு ஷேர் பண்ணுங்கள்..!
Tags: