தனியார் பள்ளிகளில் கட்டணமில்லாமல் சேர்ப்பது எப்படி? #RTE

தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு, மிகப்பெரிய அளவில் போட்டி போட வேண்டியிருக்கிறது. கல்லூரிகளில் மட்டுமே வசூலிக்கப்பட்ட நன்கொடை, இப்போது எல்.கே.ஜி- யில் சேர்ப்பதற்கும் வசூலிக்கிறார்கள்.
தனியார் பள்ளிகளில் கட்டணமில்லாமல் சேர்ப்பது எப்படி? #RTE
இதைத் தவிர, பெற்றோரின் வருமானத்தில் பெரும் பகுதியைக் கட்டணமாகச் செலவு செய்ய வேண்டியுள்ளது.

பெரு நகரங்களில் உள்ள ஒருசில பள்ளிகளில் சேருவதற்கான விண்ணப் பத்தைப் பெறுவதற்கு, இரவு நேரத்தி லிருந்தே வரிசை நிற்கிறது. 

அடுத்த ஆண்டில் சேர, இந்த ஆண்டே விண்ணப்பம் வழங்கும் பள்ளிகளும் உள்ளன. இவர்களுக்கு மத்தியில் `நம்முடைய பிள்ளைகள் படிப்பதற்கு வாய்ப்பு இல்லையா?’ 

என ஏக்கத்துடன் காத்திருக்கும் பொருளாதார அளவில் பின் தங்கிய பிரிவின ருக்கு உதவக் காத்திருக்கிறது குழந்தை களுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்.

இந்தச் சட்டத்தின் மூலம், சிறுமை பான்மையினர் நடத்தும் பள்ளி களைத் தவிர மற்ற அனைத்து நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரி குலேஷன் பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் ஒன்றாம் வகுப்புகளில் கட்டணம் இல்லாமல் பிள்ளை களைச் சேர்க்கலாம். 

ஒவ்வொரு வகுப்பிலும் 25 சதவிகிதம் அளவுக்கு வாய்ப்பு மறுக்கப் பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்க வேண்டும். 
இவ்வாறு சேர்க்கப்படும் குழந்தை களிடமிருந்து கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அரசு, கல்விக் கட்டண த்தைப் பள்ளிக்கு நேரடியாகச் செலுத்தி விடும்.

கடந்த ஆறு ஆண்டு களுக்கும் மேலாக இந்தச் சட்டம் இருந்தாலும், `சரியான விண்ண ப்பங்கள் வர வில்லை’ என்று தனியார் பள்ளிகள் சாக்கு போக்குச் சொல்லி வந்தன. 

`விண்ணப் பங்களை ஏற்றுக் கொள்வ தில்லை’ அல்லது `பிள்ளை களைச் சேர்க்கும் போது பெரிய அளவில் அலைக் கழிக்க வைக்கி றார்கள்’ என்று பெற்றோர்கள் புகார் தெரிவிக்க, 

அரசு கடந்த இரண்டு ஆண்டு களாக விண்ணப் பத்தை இணைய தளத்தின் வழியா கவே பெற ஆரம்பித் திருக்கிறது.

இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக் கான விண்ணப்ப த்தை இணைய தளத்தில் வெளியிட்டி ருக்கிறது தமிழகக் கல்வித் துறை. மே 18-ம் தேதி வரை www.dge.tn.gov.in/ என்ற இணைய தளத்தில் விண்ணப் பிக்கலாம். 

இணையதள வசதி இல்லாத வர்கள், அருகில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், மெட்ரி குலேஷன் பள்ளி ஆய்வாளர் அலுவலகம், 

மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், தொடக்கக் கல்வி உதவி அலுவலர் அலுவலகம், அனைவரு க்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகம், 

அரசு இ-சேவை மையங்கள் போன்ற வற்றைப் பயன் படுத்திக் கொள்ளலாம். உங்களுடைய பதிவு, உங்களுடைய மொபைலில் எஸ்.எம்.எஸ்-ஆகத் தகவல் கிடைத்து விடும்.
இணை யத்தில் பதிவு செய்யும் போது, கீழ்க்காணும் சான்றிதழ் களை இணைக்க வேண்டும்.

1. குழந்தை யின் புகைப்படம்.

2. பிறப்புச் சான்றிதழ் (பிறப்புச் சான்று, மருத்துவ மனை உதவியாளர் மற்றும் மருத்துவப் பதிவேட்டின் நகல், அங்கன் வாடிப் பதிவேடு நகல், பெற்றோர் 

அல்லது பாதுகாவலர், குழந்தை பிறந்த தேதி குறித்து வழங்கிய உறுதிமொழி. இவற்றில் ஏதேனும் ஒன்று சமர்பிக்க வேண்டும்).

3. இருப்பிட அடையாள அட்டை (குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்குப் புத்தகம், தொலை பேசிக் கட்டண ரசீது, 

வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் அட்டை, இருப்பிடம் சார்ந்து கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய சான்று, மாநில/ மத்திய அரசு/ பொதுத்துறை 

நிறுவன ங்கள் வழங்கிய அடையாள அட்டை போன்ற வற்றில் ஏதேனும் ஒன்றை சமர்பிக்க வேண்டும்).
விண்ணப்பப் படிவத்தில் `நலிவடைந்த பிரிவினர்’, `வாய்ப்பு மறுக்கப் பட்ட பிரிவினர் (சிறப்புப் பிரிவு)’, `வாய்ப்பு மறுக்கப் பட்ட பிரிவினர்’ என்று 

மூன்று வகை இருக்கும். நலிவடைந்த பிரிவினர் என்பது, ஆண்டு வருமான அடிப்படை யில் முடிவெடு க்கிறார்கள். 

வாய்ப்பு மறுக்கப் பட்ட சிறப்பு பிரிவில், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளி, மூன்றாம் பாலினம், துப்புரவுத் தொழிலாளி யின் குழந்தைகள், 

ஹெச்.ஐ.வி-யினால் பாதிக்கப் பட்ட பெற்றோர் களின் குழந்தை போன் றோரையும், வாய்ப்பு மறுக்கப் பட்ட பிரிவில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் 

மற்றும் மற்ற மதத்தைச் சார்ந்த பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர், சீர்மரபினர், தாழ்த்தப் பட்டோர், அருந்ததியர், பழங்குடியினர் போன்றோரும் விண்ணப் பிக்கலாம்.

4. நலிவடைந்த பிரிவில் விண்ணப்பிக்க விரும்புவோர், வருமான சான்றி தழையும், வாய்ப்பு மறுக்கப் பட்ட பிரிவில் விண்ணப்பிக்க விரும்புவோர் சாதிச் சான்றிதழையும், 
தனியார் பள்ளிகளில் கட்டணமில்லாமல் சேர்ப்பது எப்படி? #RTE
வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவில் விண்ணப்பிக்க விரும்புவோர் ஆதர வற்றவர்/ ஹெச்.ஐ.வி- யால் பாதிக்கப் பட்டவர்/  மூன்றாம் பாலினத்தவர்/  

மாற்றுத் திறனாளிகள்/ துப்புரவுத் தொழிலாளியின் குழந்தை யெனில் அதற்கான சான்றையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

பதிவு செய்த விவரங் களை அச்சிட்டு, உங்களது குழந்தை எந்தப் பள்ளியில் சேர்க்க விரும்பு கிறீர்களோ அந்தப் பள்ளி யில் சமர்பிக்க வேண்டும், 

விண்ணப்ப த்தில், உங்களு க்கு அருகில் உள்ள ஐந்து பள்ளி களை நீங்கள் தேர்வு செய்யலாம், உங்கள் வீட்டுக்கு அருகில் நர்சரி, பிரைமரி, மெட்ரி குலேஷன் பள்ளி களில் எவ்வளவு பிரிவுகள் இருக்கி ன்றன, 

எவ்வளவு மாணவர் களுக்கு எந்த வகுப்பு அனுமதி வழங்கப் படுகின்றன போன்ற அனைத்து விவரங் களும் இணைய தளத்தில் உள்ளன.

பள்ளியில் சேர்க்கைக் காக விவரங் களை மே - 23க்குள் வெளியிட வேண்டும். இந்த விவரங் களைப் பள்ளியின் நோட்டீஸ் போர்டில் வெளியிட வேண்டும். 
பின்பு 'சேர்க்கைக்கான விவரங்களை இணையத்திலும் வெளியிடப் படும்’ என்று அரசு தெரிவித்தி ருக்கிறது. கடந்த ஒரு வாரமாக விண்ணப் பங்கள் வழங்கப் படுகின்றன. 

அதிக அளவில் விண்ணப்பம் வரும் போது குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, மே-23 தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி யிருக்கிறது அரசு.

வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பிள்ளை களுக்கு சிறந்த கல்வியைக் கொடுங்கள்.
Tags:
Privacy and cookie settings