டிரைவரின் கண் பார்வையைப் பறித்த மாட்டுக்காரர் !

பாட்னா அருகே உள்ள ஒரு கிராமத்தில், சாலையில் சென்று கொண்டி ருந்த பசுவை விரட்ட, ஓட்டுநர் ‘ஹார்ன்’ அடித்ததற்காக அவரை மாட்டுக்காரர் தாக்கியுள்ளார். 
டிரைவரின் கண் பார்வையைப் பறித்த மாட்டுக்காரர் !
இந்தத் தாக்குதல் சம்பவத்தில், வேன் ஓட்டுநரின் கண் பார்வை பறிபோனது. பீகார் மாநிலத்தி லுள்ள மைனா கிராமத்தில், வேன் ஓட்டுநர் ஹாரன் அடித்த ஒரே காரணத்துக் காகத் தாக்கப் பட்டுள்ளார். 

பாட்னா அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலை 107-ல், வேன் ஓட்டிச் சென்ற கணேஷ் மண்டல் (30), சாலையில் சென்று கொண்டிருந்த பசுவை விரட்ட, ‘ஹாரன்’ அடித் துள்ளார். 

இதில் மிரண்ட பசு, சாலையைக் கடந்து ஓடி யுள்ளது. பசுவைப் பயமுறுத்தி யதற்காக ஆத்திர மடைந்த மாடு மேய்ப்பவர், அந்த வேன் ஒட்டுநரைத் தாக்கி யுள்ளார். 

இதில் மயக்க மடைந்த கணேஷ் மண்டல், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய த்தில் சேர்க்கப் பட்டார். இந்தத் தாக்குதலில் அவருக்கு இடது கண் பார்வை பறி போனது.
இது குறித்து சோன்பர் ராஜ் போலீஸ் நிலைய காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். 

தாக்குதலில் பாதிக்கப் பட்ட ஓட்டுநர், தற்போது மேல் சிகிச்சை க்காக சகஸ்தா அரசு மருத்துவ மனையில் அனுமதி க்கப்பட் டுள்ளார். 

அவர் கொடுத்த புகாரின் பேரில், மாடு மேய்ப் பவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Tags:
Privacy and cookie settings