ஜலதோசம், மூக்கடைப்பு உடனடி நிவாரணம் !

உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக் கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது. 
ஜலதோசம், மூக்கடைப்பு  உடனடி நிவாரணம் !
அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது. இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் 

எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்ய வில்லை என்று பலர் இமெயிலில் தெரியப் படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குண ப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. 
உதாரண மாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக தீர்வு கிடைத்தது. முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது. 

ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக் கொண்டே இருக்கிறது, 

தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்து வதாலும் மூக்கில் வலியும் தொண்டை யில் வேதனையும் தான் அதிகமாகிறது. 

ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்து விடும் எப்படி என்றால் தொண்டை யில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப் போகிறது என்பதை கண்டு பிடிக்கலாம். 

இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவை களினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும். 
ஜலதோசம், மூக்கடைப்பு  உடனடி நிவாரணம் !
மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு மண்டையில் நீர் சேர்ந்திரு ப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமை யான குணம் கிடைக்காது.

தலையில் சேர்த்தி ருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்று விரிவாகத் தெரியப்படுத் துகிறோம்.

அகத்தியர் தன் நூலில் அக்கினி சேகரத்தையும் வெள்ளை யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப் படுத்தி இருந்தார்.
வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன் இப்படி குழப்பி இருக்கிறார் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் உண்மையில் சந்தேக த்திற்கு இடமே இல்லாமல் இந்த எளியவனு க்கும் தெரியப் படுத்தி விட்டார் என்றே தோன்றியது. 

அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றி லைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். 

மருந்து கிடைத்தாச்சு ஆனால் எந்த மருந்தையும் சோதிக்காமல் வெளியே தெரியப் படுத்தியது கிடையாது. ஜலதோச த்துடன் யாராவது வந்தால் சோதித்து பின் தெரியப் படுத்தலாம் என்று வைத்து விட்டோம். 

இரண்டு நாள் கழித்து நம் நண்பர் ஒருவர் ஜலதோசத் திற்கு ஏதாவது மருந்து இருக்கிறதா என்று தாமாக வந்து கேட்டார். உடனடியாக நாம் அவர் வீட்டிற்கு வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட் வாங்கிக் கொண்டு சென்றோம். 

அவர் அம்மாவிடம் மஞ்சள் பொடி எடுத்து வரச்சொன்னோம். (சிறிய ஸ்பூன் ) இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற் போல் கலந்தோம்.
(படத்தில் மேலே காட்டப்பட்டுள்ளது) மண்ண்டையைச் சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும் என்று சொல்லி அவங்க அம்மாவிடம் கொடுத்தோம். 

அவர்கள் முதலில் கேட்டது சுண்ணாம்பு தேய்ப்ப தால் நெற்றி புண்ணாகி விடுமோ என்ற பயம் இருக்கிறது என்றார்,
ஜலதோசம், மூக்கடைப்பு  உடனடி நிவாரணம் !
மஞ்சள் சேர்வதால் உங்களுக்கு பயமே வேண்டாம் எக்காரணம் கொண்டும் புண்ணாகாது என்று சொல்லி பூசக் கூறினோம். 

நண்பரின் நெற்றி முழுவதும் மற்றும் மூக்கிலும் இந்தக் கலவையை அவர் அம்மாவே பூசி விட்டார். 1 மணி நேரம் நன்றாக தூங்க சொல்லி விட்டு பிறகு வந்து பார்ப்பதாக கூறி விட்டு சென்றோம். 
சரியாக மூன்று மணி நேரம் நன்றாக அசந்து தூங்கி யுள்ளார் அதன் பின் நேரடியாக நம் வீட்டிற்கு வந்தார் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லை. 

மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்து விட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறி விட்டு சென்றார். குரு நாதாரின் அன்பை என்ன சொல்வேன். 

நன்றியை அப்படியே குரு நாதருக்கு சமர்பித்தோம். சில நாட்கள் கழித்து இவரின் தெருவில் 10 வயதுள்ள ஒரு சிறுவன் இதே போல் நெற்றியில் நம் சுண்ணாம்பு கலவை பூசிக் கொண்டு

செல்வதைக் கண்டு அவனை அழைத்து ஏன் நெற்றியில் ஏதோ பூசி இருக்கிறாயே என்று கேட்டோம். அவன் உடனே நம் நண்பரின் வீட்டை காட்டி அவர் தான் பூசி விட்டார் என்று கூறினார்.

உடனடியாக நம் நண்பரை அழைத்து எத்தனை பேருக்கு இதே போல் பூசி விட்டாய் என்று கேட்டோம். 
அவர் கொஞ்சம் காத்திருக்கு மாறு கூறிவிட்டு வெளியே சென்று 10 நபர்களை அழைத்து வந்தார். இத்தனை பேருக்கும் ஜலதோசத் திற்கு மருந்து கொடுத்து உடனடி குணம் கிடைத்தது என்றார். 
ஜலதோசம், மூக்கடைப்பு  உடனடி நிவாரணம் !
10 பேரிடமும் தனித் தனியாக விசாரித் ததில் கிடைத்த சில தகவல்கள் மருந்து பூசிய பின் தூக்கம் வருகிறது,

நாம் தூங்கினால் தான் மண்டையில் இருக்கும் நீரை சுண்ணாம்பு முழுமையாக எடுக்கிறது என்றும், அத்துடன் இரவு படுக்கப் போகும் முன்னும் இதே போல் பூசி விட்டு படுக்கலாம் என்றும்,

ஒரே நாளில் இரண்டு முறை பயன் படுத்தினாலும் எந்தப் பக்க விளைவுகளும் இல்லை என்றும் தெரிவித்தனர். 

சித்த மருத்து வத்தை சோதித்து பார்க்க விரும்பும் நபர்கள் கூட இந்த மருந்தை பயன் படுத்திப் பார்த்து தங்கள் அனுபவத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Tags: