கணவன்மார்களே... இது உங்களுக்குத் தான் !

ஒரு பெண்ணை திருமணம் செய்வது எதற்காக என்றால் அவளோடு மௌத்து (மரணம்) வரைக்கும் மட்டுமின்றி மறு உலகிலும் இருவரும் நிம்மதியாக சந்தோசமாக வாழ்வதற்கே…. 
கணவன்மார்களே... இது உங்களுக்குத் தான் !
ஆனால் சில கணவர்களின் தவறு களினால் அந்த மனைவி அக்கணவனை வெறுக்க நேரிடுகிறது. சில சமயம் விவாகரத்தும் இடம் பெறுகின்றது.

01) மனைவியை சந்திக்கும் போது எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருங்கள்.அது சதகாவகும். 

02) வீட்டினுள் நுழையும் போது ஸலாம் சொல்ல மறந்து விட வேண்டாம். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டு மல்லாது 

உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார் த்தனையும் கூட. அது ஷைத்தானை வீட்டிலிருந்து விரட்டி விடும்.

03) நேர்மறை யான நல்ல வார்த்தை களைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். நாவைப் பேணுவது அவசியம்.அதன் தீய விளைவு களே அதிகமானது.

04) எதிர் மறையான வார்த்தை களைத் தவிர்ந்து கொள்ளுங்கள். விவாதம் வேண்டாம். அது திருமண வாழ்க்கைக்கு நஞ்சு போன்றது.
05) உங்களின் வார்த்தை களுக்கு மனைவி பதில் கொடுக்கும் பொழுது செவி தாழ்த்துங்கள். மனைவியின் கருத்துக் களை செவி சாயுங்கள்.

06) தெளிவான வார்த்தை களைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ள வில்லை யெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.

07) மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழையுங்கள். நபியவர்கள் தனது மனைவி ஆயிஷா நாயகியை “ஆயிஷ்” என்று செல்லமாக அழைத்தார்கள்.

08) நல்ல விடயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

09) நகைச் சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினை களை மறக் கடியுங்கள்.

10) அவளது இன்பத்தில் மட்டு மல்லாது துன்பத்திலும் பங்கு கொள்ளுங்கள்.
11) பிள்ளைகளை பராமரிக்கும் விடயங்களில் அவளுக்கு உதவியாய் இருங்கள்.

சிலர் பிள்ளை பெறும் வரை தான் நமது கடமை அதன் பின் மனைவி தான் பொறுப்பு என அலட்சியமாய் இருக்கின்றனர். அதனால் நம் மீதும், பிள்ளை பெறுவதிலும் மனைவிக்கு வெறுப்பு ஏற்படலாம்.

12) இஸ்லாம் அனுமதித்த விடயங்களை பார்ப்பதற்கு வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.

13) அவள் நோயுற்று களைப் படைந்து இருந்தால் வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவுங்கள்.

14) குடும்ப விடயங்களை உங்கள் மனைவியின் ஆலோசனை பெற்ற பின்பே செய்யுங்கள்.

15) நீங்கள் வெளியில் இருக்கும் போது எந்நேரமும் மனைவியுடன் தொடர்பாகவே இருங்கள். (டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்ற வற்றின் மூலமாக)
16) குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தை ஓரளவேனும் அவளது கையில் கொடுத்து விடுங்கள்.

17) திரும்பி வரும் பொழுது அவளுக்கு விருப்பமான பொருள் களை வாங்கிக் கொண்டு வாருங்கள்..

18) திருமணம் முடித்த பின் தனது மனைவியை அடிமை என நினைத்துக் கொண்டு அவளை துன்புறுத்தக் கூடாது. அவளது சிறந்த நண்பன் என கருத்திற் கொண்டு நெருக்கமாக பழகுங்கள். 

தனது கணவன் தனக்கு அல்லாஹ்வினால் கிடைத்த அருட்கொடை என நினைத்து அவள் மகிழ்ச்சி யடைவாள்.

19) எல்லா காரியங்களிலும் அவளுக்கு முன்மாதிரியாக இருங்கள். அவள் மதிக்கும்படியாக நடந்துகொள்ளுங்கள்.
20) விட்டுக்கொடுக்கும் மனப்பான் மையுடன் நடந்து கொள்ளுங்கள். விவாதம் வேண்டாம் அது குடும்ப வாழ்க்கைக்கு நஞ்சாகும்.

21) அழகாக காட்சி யளிக்கவும், சுத்தமாக இருக்கவும் முயற்சி செய்யுங்கள். அவை உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும்.

22) மனைவியை மிக்க கவனமாக கையாளுங்கள். அவள் ஒரு கண்ணாடி பாத்திரம் போன்றவள். அவள் மனது எளிதில் உடைந்து விடக் கூடியது.

23) வீண் சந்தேகம் வேண்டாம். அது உங்கள் இருவரையும் தூரமாக்கி விடும். அவளது குறைகளை துருவித் துருவி ஆராயாதீர்கள்.
24) அவளது குறைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். எல்லோரிடமும் குறைகள் உள்ளன. நபியவர்கள் நவின்றார்கள் :(( பெண்கள் விலா எலும்பி லிருந்து படைக்கப் பட்டவர்கள்.

அதன் மேற்பகுதி வளைந் திருக்கும். அதை நேராக்கப் போனால் உடைந்து விடும்,  அவ்வாறே விட்டோம் என்றால் வளைந் ததாகவே இருக்கும். எனவே பெண்கள் விடயத்தில் நடுத்தரமாக நடந்து கொள்ளுங்கள்))
Tags: