காலங்கடந்த திருமணங்கள் கேள்விக் குறியாகும் வாழ்க்கை !





காலங்கடந்த திருமணங்கள் கேள்விக் குறியாகும் வாழ்க்கை !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம். அதற்கு கணவன் - மனைவி ஆகிய இருவரும் ஒத்துப் போக வேண்டும். அதற்குரிய பருவத்தில் திருமணம் செய்து கொள்ளும் இளம் தம்பதியினர் ஓரளவு ஒத்துப் போகிறார்கள். 
காலங்கடந்த திருமணங்கள் கேள்விக் குறியாகும் வாழ்க்கை !



காலங்கடந்து திருமணம் செய்து கொள்கிறவர்கள், கருத்து ஒத்த தம்பதிகளாக வாழ்வதற்கான வாய்ப்பு குறைந்து வருகிறது. 

அதற்கு காரணம், இருவருக்கும் வயது முதிர்ச்சியும் - பிடிவாத முயற்சியும் அதிகரிப்பது தான்.

அதனால் ஒருவர் கருத்தை இன்னொருவர் ஏற்க மறுக் கிறார்கள். முற்காலத் தில் பெண்களை சீக்கிரமாக திருமணம் செய்து கொடுக்கும் வழக்கம் இருந்தது. 

அப்போது தான் பெண்கள், புகுந்த வீட்டில் சூழலுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து வாழ் வார்கள் என்று சொல்லப் பட்டது.
டிரை ஃப்ரூட் அல்வா செய்வது எப்படி? 
இந்த காலத்தில் ஆண், பெண் இருவரும் படித்து வேலைக்குப் போய் கைநிறைய சம்பாதிக்க ஆசைப் படுகிறார்கள். அது நல்ல விஷயம் தான்.

அதனால் திருமண வயதை தாண்டிய பின்னும் திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டிருக் கிறார்கள். தள்ளித் தள்ளிப் போட்டு விட்டு திருமணம் செய்து கொள்ள முன்வரும் போது, 

அவர்கள் எதிர்பார்ப்பது போல் வாழ்க்கை அமைவ தில்லை. காலங் கடந்து திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினர், மீதமுள்ள காலத்தை வளமாக அமைத்துக் கொள்ள அவசரம் காட்டு கிறார்கள். 

இருவரும் தங்களுடைய வருமானம் முழுவதும் எதிர்கால சேமிப்பாக மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். 

அப்போது பெற்றோரு க்கும், உறவுக ளுக்கும் செய்யும் கடமை களைக் கூட பெரிய பாரமாக நினைத்து விடுகி றார்கள். 

கணவர் தன் பெற்றோரை பராமரிப்பது மனைவிக்கு வெட்டிச் செலவாகத் தெரியும். 

மனைவி தன் பெற்றோரை பராமரிப்பது, கணவருக்கு வெட்டிச் செலவாகத் தெரியும். அதுவே பிரச்சனை உருவாக காரணமாகி விடுகிறது.

காலங்கடந்து திருமணம் செய்து கொள்கிற வர்கள், திருமணத் திற்கு முன்பு வெகுகாலம் சுதந்திரமாக வாழ்ந்து பழகி விட்ட காரணத்தால் திடீரென்று ஒருவர் வாழ்க்கைக்குள் வந்து, தன்னை கட்டுப் படுத்துவதை ஏற்றுக் கொள்வ தில்லை.
அதனால் தம்பதியினரில் ஒருவர் எடுக்கும் முடிவை மற்றவர் எளிதாக ஏற்றுக் கொள்வ தில்லை. 

காலங்கடந்து திருமணம் செய்து கொள்ளும் இருவரும் ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுக்க முன் வருவ தில்லை. தனித்துப் போகவும் முற்படுவ தில்லை.
காலங்கடந்த திருமணங்கள் கேள்விக் குறியாகும் வாழ்க்கை !



தங்களை மற்றவர் வழி நடத்தவும் அனுமதிப்ப தில்லை. இப்படிப் பட்ட மன நிலையில் அன்பு என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு வாழ்க்கை யில் அதிரடியான போராட்ட ங்களை ஆரம்பித்து விடுவார்கள். 

வெகுகாலம் திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்கள் எதிர்பாலினர் பலரிடம் பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
பளபளக்கும் பால் அல்வா செய்முறை !
அந்தப் பழக்கம் மிகவும் சகஜமாகி கொண்டு வரும் நிலையில் இதன் பிரதி பலிப்பு குடும்ப வாழ்க்கையில் விழும் பொழுது பல சிக்கல்கள் தோன்று கின்றன. 

இது ஆரோக்கி யமான தாம்பத்ய வாழ்க்கைக்கு உலைவைத்து விடும். அத்தகைய குடும்பங்களில் அடிக்கடி பூகம்பங்கள் வெடிக்கும்.

அற்பத்தனமான காரணங்களுக் கெல்லாம் சண்டை வரும். ஆனால் அதன் மூல காரணம் இன்னொன்றாக இருக்கும். காலங்கடந்த திருமணங் களால் குழந்தைப் பேறும் கேள்விக் குறியாகிறது. 

இது அவர்க ளுடைய திருமண வாழ்வை சிதைத்து எதிர் காலத்தை பாதித்து விடும். எப்போதும் புதுமணத் தம்பதிகள் என்றால் மனதில் குதூகலமும் ஆனந்தமும் இருக்கும். 
ஆனால் காலங் கடந்து திருமணம் செய்து கொண்டால் அந்த குதூகல த்தையோ, நாண த்தையோ காண முடியாது. அதற்கு பதிலாக அகங்காரமும், ஆதிக்கமும் தான் மேலோங்கி நிற்கும்.

இது மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு உதவாது. காலங்கடந்த திருமணங்கள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மகிழ்ச்சியைத் தராது. 

வேறு வழியில் லாமல் திருமணம் செய்துக் கொள்ள வேண்டி யிருந்தால் பெண், அந்த வாழ்க்கைக்கு தக்கபடி தன்னை பக்குவப் படுத்திக் கொள்ள வேண்டும்.
காலங்கடந்த திருமணங்கள் கேள்விக் குறியாகும் வாழ்க்கை !
அனுசரித்து செல்ல வேண்டும். அது நாள் வரை வாழ்ந்த வாழ்க்கை க்கும் இனி வாழப் போகும் வாழ்க்கை க்கும் உள்ள வித்தி யாசத்தை புரிந்து கொள்ள வேண்டும். 
இது ஆணுக்கும் பொருந்தும். திருமண த்தில் காலதாமதம் ஒரு குறை தான். ஆனால் அந்த குறையே வாழ்க்கையை பழாக்கி விடாத அளவுக்கு வாழ வேண்டும்.
Tags: