ஆர்.கே.நகரில் வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடி செய்ய முடியாது !

பன்னீர் செல்வம் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியது முதல், ஆளும் கட்சி மீதான அதிருப்தி பொது மக்களிடையே அதிகரித் துள்ளதாக கூறப் படுகிறது.
ஆர்.கே.நகரில் வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடி செய்ய முடியாது !
இந்நிலையில் ஆர்.கே.நகரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி செய்து ஆளுங்கட்சி வென்று விடுமோ என்ற அச்சம் சிலரிடம் இருந்தது.

இந்நிலையில் அதற்கும் ஆப்படித்துள்ளது தேர்தல் ஆணையம். வாக்களிப் பவர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் ஒப்புகை சீட்டு வசதி, வாக்குப்பதிவு எந்திரங் களில் பொறுத்தப் பட உள்ளது.

வாக்களித்த உடன் நாம் யாருக்கு வாக்களித்தோம் என்ற விபரம் அச்சிடப்பட்ட சிறிய சீட்டு ஒன்று இயந்திரத்தில் இருந்து வெளியே வந்து, பின்னர் இயந்திரத் திற்குள் விழுந்து விடும்.

சிறிய கண்ணாடிக்கு பின் வரும் இந்த சீட்டு வாக்குபதிவு எந்திரத்திற் குள்ளேயே விழுந்து விடும் என்பதால், அதனை வெளியே கொண்டு வர முடியாது.
எனினும் இது நாம் வாக்களித்தது சரியாக பதிவாகி யுள்ளதாக என்பதை தெரிந்து கொள்ள உதவும். இந்த அறிவிப்பு பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Tags:
Privacy and cookie settings