டூவீலர் விலையில் வீழ்ச்சி... சுப்ரீம் கோர்ட் உத்தரவு !

பாரத் ஸ்டேஜ் -4 (பி.எஸ்.4) விதிமுறைகளை பூர்த்தி செய்யாத வாகனங்களை ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு வாகன உற்பத்தி நிறுவனங்கள் விற்பனை செய்ய முடியாது என்று
டூவீலர் விலையில் வீழ்ச்சி... சுப்ரீம் கோர்ட் உத்தரவு !
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அந்த பைக்குகள் விலை கிடுகிடு வென குறைந்துள்ளது. நாட்டில் புகை மாசுவை கட்டுப்படுத்த சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம், 

வாகனங்கள் வெளியிடும் மாசுகளின் அளவுகளை வரையறுத்து விதி முறைகள் வகுத்து வெளியிட்டு வருகின்றன. வாகனங்கள் வெளியிடும் புகையை கட்டுப்படுத்த சில விதிமுறைகளை வகுத்து, 

பாரத் ஸ்டேஜ் (பி.எஸ்) 3 என்ற விதிமுறை ஏற்கனவே அமலில் இருந்தது. இதன் பிறகு, கடும் நிபந்தனை களுக்கு உட்பட்டு வாகன இன்ஜின் தயாரிக்கும் 

வகையில் பி.எஸ்-4 விதிமுறை, 2010முதல் நாடு முழுவதும் படிப்படியாக நடை முறைப்படுத்தப் பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் 1 முதல் இந்த விதிமுறை முழுமையாக அமலுக்கு வருகிறது என்று மத்திய அரசு அறிவித்தது. 

ஆனால் உற்பத்தியை தான் அந்த அறிவிப்பு குறிக்கிறது, ஏற்கனவே உற்பத்தி செய்த வாகனங் களை விற்பனை செய்யவோ, ரிஜிஸ்டர் செய்யவோ வலியுறுத்த வில்லை என கருதின மோட்டார் வாகன நிறுவனங்கள்.
வழக்கு

ஆனால், விற்பனை க்கும் தடை என்பதை தாமதமாக புரிந்து கொண்டன. எனவே, தங்களிடம் பிஎஸ் 3 விதிமுறை களுடன் கூடிய 8 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப் படாமல் இருப்ப தாகவும் 

இத்தகைய வாகனங் களை விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று வாகன உற்பத்தி நிறுவனங்கள் உச்ச நீதிமன்ற த்தில் வழக்கு தொடர் ந்தன.

அதிரடி உத்தரவு

இந்த மனுவுக்கு சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், 2005 மற்றும் 2010ல் இதே போல முறையே பி.எஸ்.2 மற்றும் 

பி.எஸ்.3 என்ற புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகப் படுத்தப் பட்ட போது ஸ்டாக்கில் இருந்த பழைய வாகனங்களை விற்க அனுமதி அளிக்கப் பட்டது என கார் உற்பத்தி யாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. 

ஆனால் இந்த வாதத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஏப்ரல், 1ம் தேதி முதல் பி.எஸ்.3 வாகனங்களை பதிவு செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது என்று அதிரடி உத்தரவை நேற்று பிறப்பித்தது.
வாகன நிறுவனங் களுக்கு நஷ்டம்

இதையடுத்து பெரும் நஷ்டத்தை நோக்கி வாகன உற்பத்தி நிறுவனங்கள் செல்ல தொடங்கி யுள்ளன. 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வாகனங் களை 

இன்னும் 2 நாட்களில் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் அந்த நிறுவனங் களுக்கு. 

அதிலும் குறிப்பாக ஹீரோ நிறுவனம் மற்றும் ஹோண்டா நிறுவனம் அதிக பாதிப்பை சந்தித் துள்ளது. எனவே அவை தங்கள் டூவீலர் விலைகளை அதிரடியாக குறைத் துள்ளன.

தள்ளுபடி

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், பி.எஸ்.3 வகையில் தயாரான ஸ்கூட்டர் களுக்கு ரூ.12500 டிஸ்கவுண்ட் வழங்குவதாக அறிவித் துள்ளது. 

டூவீலர் விலையில் வீழ்ச்சி... சுப்ரீம் கோர்ட் உத்தரவு !
பிரீமியம் வகை பைக்குகளுக்கு ரூ.7500 டிஸ்கவுண்டும், நுழைவு நிலையி லுள்ள மாஸ் மார்க்கெட் பைக்கு களுக்கு ரூ.5000 வரையும் டிஸ்கவுண்ட் தருவதாக அறிவித் துள்ளது.

இரு நாட்கள் தான் கெடு

ஹோண்டா நிறுவனம் தனது ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை டிஸ்கவுண்ட் அளிப்பதாக அறிவதி்துள்ளது. 

மார்ச் 31 இரவுக்குள் முடிந்த அளவுக்கு பைக்குகளை விற்பனை செய்து தீர வேண்டிய கட்டாயத்தில் அந்த நிறுவனங்கள் உள்ளன.
Tags: