எம்எல்ஏக்கள் எங்கே? உண்மையை உடைத்த உதவியாளர் !

அதிமுக எம்எல்ஏக்களின் உதவியாளர்கள் எம்எல்ஏக்கள் எங்கு இருக்கி றார்கள் என்பது குறித்த உண்மையை வெளியிட்டுள்ள சம்பவம் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
எம்எல்ஏக்கள் எங்கே? உண்மையை உடைத்த உதவியாளர் !
பன்னீர் செல்வத்தின் அதிரடி பேட்டியால் ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டிய சசிகலா, ஒரு முடிவு வரும் வரை எம்எல்ஏக் களை

அனைவரும் மகாபலிபுரம் அருகே உள்ள ஓய்வு விடுதியில் சிறை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் எம்எல்ஏகளை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 

இது  குறித்து எதிர்வரும் திங்கட் கிழமைக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் அதிரடி உத்தர விட்டது.

இந்நிலையில் பரபரப்பு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சென்னை யில் உள்ள எம்எல்ஏ விடுதியில் தங்கியிருக்கும் எம்எல்ஏ உதவியாள ர்களுடன் எம்எல்ஏக் கள் எங்கே என்று கேள்வி கேட்க,
அவர்களில் சிலர் எம்எல்ஏ வெளியே சென்றுள்ளார் அவர் வர நேரமாகும் என தெரிவிக் கின்றனர்.

அதில் ஒருவர் எம்எல்ஏ போயஸ் தோட்டம் சென்றுள்ளதாக தெரிவிக்கிறார். 

மேலும், அவர் கூறுகையில், எம்எல்ஏக்கள் அனைவரும் மகாபலிபுரத்தில் உள்ள கோல்டன் பே விடுதியில் உள்ளதாகவும் எப்பொழுது வருவார் என தெரிய வில்லை என தெரிவிக்கிறார்.
சசிகலா ஆதரவாளர்கள் எம்எல்ஏக்கள் அனைவரும் சுதந்திரமாக உள்ளனர் என தொடர்ந்து கூறி வரும் நிலையில், 

தற்போது, எம்எல்ஏக்கள் உதவியாளர்கள் உண்மையை உடைத்து சசிகலாவிற்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:
Privacy and cookie settings