ரசிகர்களிடம் மாட்டி கொண்ட திவ்யதர்ஷினி !

சமீப காலமாக சின்னத்திரை பிரபலங்கள் அவ்வப் போது இணைய பக்கத்தில் கருத்துக் களை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறார்கள். அல்லது ரசிகர்களின் எதிர்ப்புக்கும் ஆளாகி விடுகிறார்கள்.
ரசிகர்களிடம் மாட்டி கொண்ட திவ்யதர்ஷினி !
அந்த வகையில், சமீபகாலமாக சொல்வ தெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்தி வரும் லட்சுமி ராம கிருஷ்ணன் ஏகப்பட்ட கலாய்ப்புகளுக்கு ஆளாகி மனசுடைந்து போயிரு க்கிறார்.

இதனால் தற்போது அவர் சமூகவலை தளத்தை விட்டே வெளியேறி விட்டார். இந்த நிலையில், தற்போது விஜய் டிவி தொகுப்பாளினி திவ்ய தர்ஷினியும், இணைய பக்கத்தில் கருத்து வெளியிட்டு

ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அதாவது, நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம், இந்தியா விலுள்ள அனைத்து தியேட்டர் களிலும் திரைப்படம் தொடங்கு வதற்கு முன்பு தேசிய கீதம் இசைக்கப் பட வேண்டும்.

அப்போது ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என்று அறிவித்தது. ஆனால் இந்த புதிய சட்டத்தை சிலர் ஆதரித்தபோதும், பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பும் எழுந்துள்ளது.

இந்நிலையில், விஜய் டிவி தொகுப் பாளினி டிடி, தியேட்டர்களில் தேசியகீதம் இசைப்பதை தான் வரவேற்பதாக டுவிட்டரில் கருத்து தெரிவிக்க, எதிர்பா ளர்கள் ரவுண்ட் கட்டி விட்டனர். 
இது, இந்த அறிவிப்பை ஆதரிப்பவ ர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது இந்த கருத்துக்கு எதிராக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். 

ஆனபோதும் தனது கருத்தில் இருந்து பின் வாங்க வில்லை திவ்யதர்ஷினி என்பது குறிப்பிட தக்கது.
Tags:
Privacy and cookie settings