தினமும் காலையில் காபிக்கு பதிலாக வெள்ளை பூசணி ஜூஸ் !

திருஷ்டியைக் கழிப்பதற்கு வெள்ளை பூசணியைப் பயன் படுத்துவோம். ஆனால் அந்த வெள்ளைப் பூசணி பல்வேறு உடல்நல பிரச்சனை களுக்கும் தீர்வளிக்க உதவுகிறது.
தினமும் காலையில் காபிக்கு பதிலாக வெள்ளை பூசணி ஜூஸ் !
குறிப்பாக ஆயுர் வேதத்தில் இந்த வெள்ளை பூசணி பல பிரச்சனை களை சரிசெய்ய பயன் படுத்தப் படுகிறது. இதற்கு அதில் உள்ள சத்துக்கள் தான் காரணம்.
வெள்ளைப் பூசணியில் வைட்டமின், பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. 

இவ்வளவு சத்துக்கள் நிறைந்த வெள்ளை பூசணியை தினமும் காலையில் ஜூஸ் போட்டு காபிக்கு பதிலாக குடித்து வந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அல்சர் 
தினமும் காலையில் காபிக்கு பதிலாக வெள்ளை பூசணி ஜூஸ் !
அல்சர் பிரச்சனையால் கஷ்டப்படு பவர்களுக்கு வெள்ளை பூசணி ஜூஸ் உடனடி பலனைத் தரும்.

அது மட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனை எதிர்த்துப் போராடவும் வெள்ளை பூசணி ஜுஸ் உதவும்.

எடை குறையும் 
தினமும் காலையில் காபிக்கு பதிலாக வெள்ளை பூசணி ஜூஸ் !
நீங்கள் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், வெள்ளை பூசணி ஜூஸை தினமும் காலையில் குடித்து வாருங்கள்.

இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றி விடும்.
உடல் சூடு 

உடல் சூட்டினால் கஷ்டப் படுபவர்கள், வெள்ளைப் பூசணி ஜூஸைக் குடித்து வந்தால்,

உடல் சூடு தணியும். அது மட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சி யுடன் இருக்கும்.

வயிற்றுப் புழுக்கள் 
தினமும் காலையில் காபிக்கு பதிலாக வெள்ளை பூசணி ஜூஸ் !
தினமும் காலையில் வெள்ளை பூசணி ஜூஸ் உடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
இரத்தம் சுத்தமாகும் 

வெள்ளை பூசணி ஜூஸில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இரு வேளையில் குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும்.

உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால், எவ்வித நோய்த் தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.

உள் இரத்தக்கசிவு 
தினமும் காலையில் காபிக்கு பதிலாக வெள்ளை பூசணி ஜூஸ் !
உடலின் உட்பகுதியில் ஏதேனும் உறுப்புகள் பாதிக்கப் பட்டு, அதனால் இரத்தக் கசிவு ஏற்பட்டால், அதனை வெள்ளை பூசணி ஜூஸ் தடுக்கும்.

குறிப்பாக சிறு நீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்ற வற்றினால்

ஏற்படும் இரத்தக்கசிவு போன்ற வற்றிற்கு வெள்ளை பூசணி சாறு நல்ல பலனைத் தரும். 
மனநிலை மேம்படும் 
தினமும் காலையில் காபிக்கு பதிலாக வெள்ளை பூசணி ஜூஸ் !
தினமும் காலையில் காபி அல்லது டீக்கு பதிலாக வெள்ளை பூசணி ஜூஸ் குடித்து வந்தால், நாள் முழுவதும் மனநிலை சிறப்பாக இருக்கும். 

ஏனெனில் வெள்ளைப் பூசணியில் உள்ள சத்துக்க ளானது நரம்புகள் மற்றும் மூளையை அமைதி யடையச் செய்து, மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தில் இருந்து விடுவிக்கும்.
Tags: