கணவன் இறந்த பின் வந்த பரிசால் கலங்கிய மனைவி !

கணவர் கொல்லப் பட்ட செய்தி கிடைத்த சில மணி நேரங்களில், அவர் அனுப்பி யிருந்த பரிசுப் பொருட்கள் மனைவி க்குக் கிடைக்கப் பெற்ற சம்பவம் இந்தியா வில் இடம் பெற்று ள்ளது. 
கணவன் இறந்த பின் வந்த பரிசால் கலங்கிய மனைவி !
மேஜர் சதீஷ் தஹியா (31) என்பவர் ஹரியானா வின் பானிவாடி கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி சுஜாதா (27). 

இந்திய இராணுவ அதிகாரி யான சதீஷ், கடமை நிமித்த மாக காஷ்மீரில் பணிபுரிந்து வந்தார். இவர்களு க்கு ப்ரியாஷா (2) என்ற மகளும் இருக்கிறார்.

தமது மூன்றாவது திருமண நாளை (17) முன்னிட்டு, மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்த சதீஷ், காஷ்மீரில் இருந்தபடியே கேக், மெழுகு வர்த்திகள் மற்றும் பூங்கொத்து க்கள் என்பனவற்றுக்கு ஓர்டர் செய்திருந்தார். 

ஆனால், அந்தப் பரிசு அவரது மனைவி யின் கைகளில் கிடைக்கும் போது சதீஷ் உயிருடன் இல்லை. ஜம்முவில் நேற்று முன்தினம் இடம் பெற்ற தாக்குதலில் சதீஷ் வீரமரணம் அடைந்தார். 

அவரது மரணச் செய்தி அவரது உறவினர் களுக்கு அறியத் தரப்பட்டது. இதனால் அதிர்ச்சி யடைந்த அவரது மனைவி சோகத்தில் ஆழ்ந்தார்.
அச்செய்தி கிடைத்த ஓரிரு மணித்தி யாலங்களில், சதீஷ் அனுப்பி யிருந்த திருமண நாள் பரிசுப் பொருட்கள் சுஜாதாவின் கைகளுக்குக் கிடைத்தன. 

அதில், ‘நான் உன்னை உயிருக்கு உயிராக விரும் புகிறேன். நீயே எனது வாழ்க்கை யின் உத்வேகம்’ என்று எழுதப்பட்டி ருந்ததைக் கண்ட சுஜாதா, வாய் விட்டுக் கதறி அழுதார். 

ஏராளமான கிராம வாசிகள் மற்றும் இராணுவ அதிகாரி களின் மத்தியில் சதீஷின் உடல் எரியூட்டப் பட்டது. 

தனது தந்தை இறந்ததைக் கூடப் புரிந்து கொள்ள முடியாத ப்ரியாஷா, சிரித்த படியே தன் தந்தைக்குக் கொள்ளி வைத்த சம்பவம் அங்கிருந்த அனை வரையும் கண்ணீரில் ஆழ்த்தியது.
Tags:
Privacy and cookie settings