சசிகலாவை சந்திக்க நாங்க ஒத்துக்க மாட்டோம்... சி.எஸ்.ஐ | We will not agree to meet Sasikala! CSI !

சி.எஸ்.ஐ. பேராயத்தை சேர்ந்த சிலர் அங்கி அணிந்து கொண்டு சசிகலாவை சந்தித்திருப்பது கிறிஸ்தவர்க ளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி யிருக்கிறது.


அப்படி சந்தித்த வர்களில் சிலர் பிஷப்புகளாக உள்ளனர். ஒரு சிலர் டுபாக்கூர் பிஷப் ஆவர். இப்படிப்பட்ட சந்திப்புக் களுக்கு முக்கிய காரணம் சசிகலாவின் வீட்டுகாரர் எம்.நடராஜன்.

சந்திப்புகள் செய்தி வடிவம் ஆக்கப் பட்டதும், மேலும் பல தில்லாலங்கடி ஆசாமிகள் அதற்காக வரிசை கட்டுகிறார்கள் . அந்த வரிசையில் தென்னிந்திய திருச்சபையான சி.எஸ்.ஐ. யைச் சேர்ந்த சிலர், பேராயர்கள் என்கிற பெயரில் டுபாக்கூராக இணைந்தி ருக்கிறனர்.

ஆம், மதுரை மற்றும் வேலூர் உள்ளிட்ட பேராயங்களைச் சேர்ந்த சி.எஸ்.ஐ காரர்கள் சசிகலாவை சந்தித்து போட்டோக் களுக்கு போஸ் கொடுத்திருக் கிறார்கள்.

அந்த செய்தியை அறிந்த கிறிஸ்துவர்கள் முகம் சுளிக்கி றார்கள். கூடவே அவர்களது எதிர்ப்பை பல்வேறு வகையில் வெளிகாட்டி வருகின்றனர். அதில் மதுரை பேராயரை (பிஷப்பை) எதிர்த்து மாவட்டம் முழுக்க கண்டன போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டி ருக்கின்றன.

சசிகலாவை சந்தித்த அங்கிகளே, உங்கள் பரிசுத்தமான அங்கிகளை கழற்றி விட்டு அ.தி.மு.க. கரை வேட்டியை கட்டி கொள்ளுங்கள். அனைத்து திருச்சபை மக்களும் உங்கள் பின்னால் இருப்பதைப் போல கபட நாடகம் போடாதீர்கள் என்கிற வாசகத்துடன் போஸ்டர்கள் பளிச்சிடுகிறது.

அதே போல் வேலூரிலும் ராஜவேலு என்கிறவருக்கு எதிர்ப்பாக பேராயத்தினர் போர்க்கொடி தூக்கி யுள்ளனர். இவர் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதிவரை வேலூர் பிஷப்பாக இருந்தவர். அதற்கு பின் பேராய விதிப்படி ரிடையர் ஆகிவிட்டார்.

ஆனால், நான் ரிட்டையர் ஆகவில்லை, வயது வரம்பை எக்ஸ்டர்ன் செய்திருக் கிறோம் என்று சொல்லி வழக்கின் மீது தீர்ப்பு வராமலேயே இன்னும் அப்பதவியில் ஒட்டிக் கொண்டி ருக்கிறார்.

இந்த லட்சணத்தில் போதனைக்காக பிரதான ஆலயம் ஒன்றில் அவரை அழைத்த போது தன் மீது பல வழக்குகள் உள்ளதாக திருச்சபையில் வெளிப் படையாக சொல்லி தன்னை ஒரு தாதாவைப் போல் காட்டிக் கொண்டார்.

அந்த ராஜவேலு மீது கொலை முயற்சி, லஞ்சம் பெற்றுக்கொண்டு பதவி நிரப்பியது, உள்ளிட்ட பல்வேறு புகார்கள் கொடுக்கப் பட்டு, அவற்றின் சிலவற்றில் வழக்கும் பதிவாகி யிருப்பது உண்மை தான்.

அப்படிப்பட்ட வழக்குகளில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள சசிகலாவை சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்டார். அந்த படத்தை கைத்தடி களின் வாயிலாக வெளியிட்டு பந்தா காட்டிக் கொண்டி ருக்கிறார்.

இவருடன் எப்போதுமே தாதாக்கள், கொலை காரர்கள் என பலர் உள்ளனர். அப்படிப்பட்ட ரவுடி ராஜவேலு எங்கள் பிரதிநிதியாக சசிகலாவை எப்படி சந்திக்கலாம்? தனிப்பட்ட முறையில் சந்திச்சுக்கோ! எதற்காக அங்கி போட்டுக் கொண்டு போனாய்?

சந்தித்தவரும் சரியில்லை, சந்திக்க போனவர்களும் சரியில்லையே எல்லாருமே ஊழல் வழக்கில் உள்ளவர்கள்.

அப்படியிருக்க சி.எஸ்.ஐ.பேராயத்தின் மரியாதையை ராஜவேலு போன்ற வர்கள் கெடுத்து விட்டனர். அவர் பிஷப்பே கிடையாதுங்க! அப்படியிருக்க சசிகலாவையே ஏமாற்றி யுள்ளார்

என்றால் அந்த ஆளை என்னவென்று சொல்வது என்கிறார்கள் உண்மையான சி.எஸ் .ஐ. மக்கள். இதனால் கிறிஸ் தவர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டி ருக்கிறது.
Tags:
Privacy and cookie settings