இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க வேண்டும் !

இலங்கை சிறைகளிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கை களையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வலியுறுத்தி யுள்ளார்.
இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க வேண்டும் !
இது குறித்து அவர், நடுக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும், அவர்களின் படகுகளை கைப்பற்றிக் கொண்டு செல்வதும்,

அவர்களைக் கைது செய்து இலங்கை சிறையில் அடைப்பதுமான, ஈவு இரக்கமற்ற கொடுஞ்செயல்கள் தொடர்ந்து நடைபெறுவது தனக்கு மிகுந்த வேதனையைத் தருவதாகத் தெரிவித் துள்ளார்.

மேலும் அவர், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 51 பேர் இலங்கை சிறைகளில் இன்னமும் அடைக்கப்பட்டு இருப்பதாகவும், 

அவர்களுக்குச் சொந்தமான பல லட்சம் மதிப்புள்ள ஏராளமான படகுகள் இலங்கை கடற்படையால் பிடித்து வைக்கப் பட்டுள்ள தாலும்
இதனால் பல்லாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித் துள்ளார். தமிழக மீனவர்களை உடனடியாக இலங்கை அரசு விடுதலை செய்ய வேண்டும் என்றும்,

அவர்களது வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான மீன்பிடிப் படகு களையும் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தி யுள்ளார்.
Tags:
Privacy and cookie settings