சசிகலாவின் புதிய அணுகு முறை.. புதிய உத்தி !

நேற்று நடந்த மாவட்ட நிர்வாகிகளின் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார்.
சசிகலாவின் புதிய  அணுகு முறை.. புதிய உத்தி !
கார்டனில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் ஸ்டாலின் செயல் தலைவராக்கப் பட்ட செய்தியை தொலைக் காட்சியில் கேட்ட பின்னரே புறப்பட்டி ருக்கிறார். 

சின்னம்மா வாழ்க என்ற கோஷம் அந்த பிரதேசம் முழுவதும் தெரித் திருக்கிறது. ஜெயலலிதா போலவே பச்சை நிற புடவையில் வந்திருந்தார். ஏற்கனவே எழுதி வைக்கப் பட்டிருந்த உரையை வாசித்தார். 

கட்சி கட்டுப்பாடு அம்மா இருந்த போது எப்படி இருந்ததோ அதை நீங்கள் பின்பற்ற வேண்டும். மேலம் உறுப்பினர்கள் சேர்ப்பதற்கும், கட்சியை வளர்ப்பதற்கும் பாடுபட வேண்டும். 

நம் செயல் பாடுகளை அம்மா பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று உரையை வாசித்து முடித்த பின்னர் தொண்டர் களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.

மேலும் தன்னை இலகுவாக தொண்டர்கள் சந்திக்கலாம். உங்களது கருத்துக்களை எனக்கு எழுதி அனுப்புங்கள். 

நானே அவைகளை படித்து நடவடிக்கை எடுக்கிறேன் என்று தொண்டர்களுடன் ஒரு நெருக்க உறவை வளர்ப்பதற்கு சசிகலா முற்படுகிறார் என்பது தெரிந்தது.
மேலும் தொண்டர்களை நேரில் சந்திக்க வரவிருப் பதையும் தொண்டர்களிடம் கூறி உற்சாகப் படுத்தினார். ஜெயலலிதாவை அவ்வளவு இலகுவாக யாரும் சந்தித்துவிட முடியாது. 

அவருடன் யாரும் எளிதாக பேசிவிட முடியாது. அந்த மரபை உடைத்திருக்கும் சசிசலா தொண்டர்களிடம் எளிதாக நெருங்கி அவர்களின் மனதில் இடம் பிடித்து விடுவார் என்றே தோன்றுகிறது.
Tags:
Privacy and cookie settings