ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை போலீஸ் வேலை பறிப்பு இல்லை !

சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடந்து வருகிறது. இதில் லட்சக்கணக் கானோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை போலீஸ் வேலை பறிப்பு இல்லை !
இந்த போராட்டத் திற்காக ஏராளமான போலீசார் பாதுகாப் புக்காக நியமிக்கப் பட்டுள்ளனர்.

அதில் மதுரையை சேர்ந்த காவலர் மதியழகுவும் ஒருவர். இவர் போராட்டக் காரர்கள் இடையே ஜல்லிக்கட்டுக்காக ஆதரவாக பேசினார்.

மேலும் இதனால் தனது வேலையே பறிபோனாலும் பரவா யில்லை என்று கூறி இருந்தார். எனவே அவரது வேலையும் பறிபோகும் என்று எதிர்பார்க்கப் பட்டது.

ஆனால் காவலர் மதியழகு மீது எந்த நடவ டிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என மயிலாப்பூர் துணை கமிஷனர் பால கிருஷ்ணன் உறுதி அளித் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings